இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் ஆர்வம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) நேற்று டோக்கியோவில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதனை வரவேற்ற பிரதமர் லீ சியென் லூங் , இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர்
பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்








