மீள வருவாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மீள வருவாயா

மீள வருவாயா

உன்னைத் தானே தேடுறேன்
உயிரே உன்னால் நானும் வாடுறேன்
கண்ணுக்குள்ள வந்தவளே
காட்சிகளாய் வீழ்ந்தவளே

என்னை மறந்து போனயே
ஏனோ வாடா வைத்தாயோ
தூக்கம் இல்லா தவிக்கிறேன்
துளியாய் கண்ணீர் வடிக்கிறேன்

மறந்து போவதற்கா
மனமே என்னை காதலித்தாய்
எப்படித்தான் முடிந்ததோ
என்னை இன்று மறப்பதற்கு

நான் செய்த தவறென்ன
நீ எனக்கு சொல்லாயா
என்னை புலம்ப வைத்து
என்னை விட்டு போனாயா

நினைத்து பார்த்து பார்த்து
நானும் அழுது தொலைக்கிறேன்
மீள வருவாயா
எனக்கு உயிர் தருவாயா ..!

ஆக்கம் 07-09-2025
வன்னி மைந்தன் – லண்டன்
0044 7536 707793

ஒரு நாள் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஒரு நாள் வெல்வேன்

ஒரு நாள் வெல்வேன்

பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்

இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்

அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்

முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்

எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!

ஆக்கம் -25-06-2025

வன்னி மைந்தன்

எப்படி நான் பேசிடுவேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி நான் பேசிடுவேன்

எப்படி நான் பேசிடுவேன்

சொல்ல முடியா சோகமதை
தேக்கி வைத்து நின்றவளே
விழியில் வடிந்த விழிநீரால்
விழுந்து மனம் உடைந்தேண்டி

இல்லை உன்னில் கோபமடி
இருந்தும் ஏனோ வதைத்தாயோ
சொல்ல முனைந்த செய்திகளை
சொல்ல முன்னே தடுத்தாயோ

கொஞ்சி பேச பிடிக்கிறது
கொள்ளை பிரியம் இருக்கிறது
அச்சம் மனம் தடுப்பதால்
அதை எப்படி நானும் சொல்வது

அலையில் சிக்கிய கப்பலதாய்
அடியை தினமும் வாங்கையில
என் மனம் பதறுதடி
எப்படி நான் பேசிடுவேன்

அக்கம் 22-05-2025
வன்னிமைந்தன்

என்னை விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விடு

என்னை விடு

உன்னை நினைக்கையில
உள்ளம் வியக்குதடி
என்ன நான் சொல்வேன்
எனகேதும் தெரியலடி

தூக்கம் இல்லாம
துடியாய் துடிக்கிறேண்டி
என்னை ஏண்டி வதைக்கிறாய்
ஏனோ தினம் கொல்லுறாய்

சாந்தமாய் இருந்த என்னை
சக்காளத்தி கெடுத்து புட்டா
ஒத்தை பார்வையாலே
என்னை கொண்ணு புட்டா

இப்படியே தவிக்கவா
இதை நீ பார்க்கவா
என் அழுகை பிடிக்கிறதா
ஏண்டி இனிக்கிறதா

பெற்று போட்ட தாயவளும்
பெருமை கொண்ட என் தமிழும்
என்னை கண்டு வாடுதடி
என்னை நீயும் விட்டுடடி ..!

ஆக்கம் 19-05-2025
வன்னி மைந்தன்

நேரில் வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நேரில் வந்து விடு

நேரில் வந்து விடு

நித்திரையில் நான் விழிக்க
சித்திரையை தேடுகிறேன்
முத்திரையை பதித்த கவி
முகத்திரையை பார்க்கிறேன்

சத்தம் இல்லா தூங்கிவிட
சத்தியமா முடியவில்லை
செத்த பிணம் ஆகிவிட்டேன்
சேதி சொல்ல யாரும் இல்லை

இத் தளத்தில் வந்த கவி
இதயமதை துளைத்ததுவே
இத் துயரை தந்த கவி
இதயமதை ஏற்றிடுமோ

பொற் கவியை நான் படிக்க
போதும் நேரம் வந்திடுமோ
நித்திரையில் நான் விழிக்க
நிஜம் வந்து கூடிடுமோ

சத்தியமாய் சொல்லி விடு
சாதனைகள் செய்திடுவேன்
செத்துவிட முன்னே நான்
சொர்க்கமதை கண்டிடுவேன் .

ஆக்கம் -15-05-2025
வன்னி மைந்தன்

( பதில் கவி }

என் உயிரே நான் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் உயிரே நான் வெல்வேன்

என் உயிரே நான் வெல்வேன்

இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே

கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ

விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ

எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்

உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா

விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .

ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்

என்னை ஏற்று விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏற்று விடு

என்னை ஏற்று விடு

முதல் முதலாய் உன்னை
பார்த்து அசந்து போனேண்டி – உன்
முகத்தை பார்த்த பின்னே
கிறங்கி பொனேண்டி

எதுகை மோனை போல
என்னை ஏறி பார்க்கிறாய்
ஏற்ற இறக்கம் பார்க்க வா
என்னை அளந்து பார்க்கிறாய்

கண் இமைக்கும் நேரத்தில
கண் அடிக்கிறாய்
கண்ணாம் பூச்சி ஆடத்தானே
காதல் செய்கிறாய்

உன்னை பார்த்தால் பின்னாலே
தூங்க முடியுமா
ஊன் உறக்கம் தொலைத்து
வாழ முடியுமா

என்னை போல நல்லவனை
ஏற்று கொள்ளடி – நான்
ஏணியாக இருப்பேன்
என்னை கட்டி கொள்ளடி.

ஆக்கம் – 13-05-2025
வன்னி மைந்தன்

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

உந்தன் கவி படிக்கையில
உள்ளம் வியக்குதடி
உன்னை தினம் பார்த்திடவே
உள்ளம் துடிக்குதடி

நீ எழுதி வைத்த கவிதையதை
நித்தம் புரட்டி படிக்கையில
சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
சாதனை போல பேசுதடி

பன்மையில் பகிரும் மொழியதனில்
பாசம் வந்து கொட்டுதடி
ஒருமையில் பேசும் சங்கதியில்
ஓடி மனம் துள்ளுதடி

என்னை என்னடி செய்தாயோ – என்னை
ஏனோ சிறை வைத்தாயோ
உன்னை மறக்க முடியாமல்
உள்ளத்தை ஏனோ வைத்தாயோ

பேசா பேசும் பேரழகே
பேரொளி எனக்கு காட்டாயோ
பக்கம் வந்து பார்த்திடவே
பாவை என்னை அழைக்காயோ ..?

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்

அடைத்து வைக்க வாவேண்டி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அடைத்து வைக்க வாவேண்டி

அடைத்து வைக்க வாவேண்டி

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் வியக்குதடி
உந்தன் விழியை பார்க்கையில
ஊந்துகணை வெடிக்குதடி

சத்தம் போடும் கண் அசைவில்
சந்தம் ஒன்று பிறக்குதடி
சாதனை பேசும் பார்வையில
சங்கதி சொல்லுதடி

சிவந்த உதடு சிரிக்கையில
சில்மிஷம் மெல்ல தெரியுதடி
சிதறிய உந்தன் கூந்தலதோ
சிந்தனை தூண்டுதடி

அச்சமில்லா பேச்சதனில்
அற நெறி தெரியுதடி
அழகே உந்தன் சிலை உடலை
ஆக்கி படைத்தது யாரடி

மொத்த உடலை பார்க்கையில
மொழிந்திட உன்னை துடிக்குதடி
அழகே உந்தன் பேரழகை
அடைத்து வைக்க வாவேண்டி…!

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்

கவலைப் படுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கவலைப் படுகிறேன்

கவலைப் படுகிறேன்

எதுகை மோனை எடுத்துவா
எழுத வா கவிதை வா
பாடலாம் இங்கு வா
பா வை ஒண்ணு பாட வா

ஆட இங்கு கூட்டி வா
ஆட வரா விட்டு வா
ஆடலாம் பார்க்க வா
ஆடு களம் திறக்க வா

அரியணையில் உள்ள வரா
அடுக்கு மாடி கொண்டவரா
திறன் இருந்தால் எடுத்து வா
திராணி இருந்தால் படிக்க வா

முதுமையில வாலிபத்தை
முன்னே தேட முடியாது
இளமையில தொலைத்தவற்றை
இன்று பெற முடியாது

அன்று செய்த தவறுகளோ
ஆள் மனதில் வலிக்கிறது
இந்த வலி ஆறுமா
இதயமது தேறுமா

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

யார் மேல் குற்றம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் மேல் குற்றம்

யார் மேல் குற்றம்

உன்னை நானும் பார்க்கல
உன் உறவை நானும் கேட்கல
என்னை நீயும் தேடல
என்ன கேட்டாய் கேடில

பொல்லா வார்த்தை போடுறாய்
போலியாக தூவுறாய்
கண்ணா என்ன கேட்கிறாய்
காதில் என்ன ஓதுறாய்

விண்ணில் ஏறி பறக்கத்தான்
விண் வெளியை அளக்கத்தான்
காடு மலை ஏறுறேன்
கண்ணாம் பூச்சி ஆடுறேன்

ஓடுகிற ஆற்றில -காற்று
ஆடும் அந்த ஆற்றிலே
ஓங்கி எழும் அலையிலே
ஓர் தேசம் நனையுதே

எல்லாம் இங்கு ஒண்ணுதான்
ஏழை இங்கு பாவம் தான்
சொன்னா இங்கு கேடுதான்
சொல்லாம தூங்குறான் ……

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

காதலே சோகமா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காதலே சோகமா

காதலே சோகமா

காதலே சோகமா
உன்னாலே நெஞ்சிலே பாரமே
ஆனந்தம் வந்து கூடாதோ
ஆருயிரே பாசம் காட்டாயோ
உன்னை மறக்க முடியல
இன்னோர் இதயத்தை தேட பிடிக்கல

நேற்றுவரை நெஞ்சுக்குள்ள நீ இருந்தாய்
நெசமா பல கதை சொன்னாய்
இன்று மறந்து போனதென்ன
இதயத்தில் வலி தந்ததென்ன

உன்ன போல ஒருவரை
இன்றுவரை நானும் பார்க்கல
உயிராய் இருந்தாய்
இன்னும் நானும் மறக்கல

ஏனோ என்னை மறந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
உயிரே உயிர் வலிக்குது
உயிர் பிரியவே மனம் துடிக்குது

உன்னை மறக்க முடியல
இப்படி நடக்கும் என்று நினைக்கல
இதயமே வாழ பிடிக்கல
சத்தியமாய் சொல்கிறேன்
என்னை வந்து கொன்று விடு …!

ஆக்கம் – 02-05-2025
வன்னி மைந்தன்

கண்டதெல்லாம் கனவு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்டதெல்லாம் கனவு

கண்டதெல்லாம் கனவு

நெஞ்சில் நீ இருக்க
உன் நினைவில் நான் துடிக்க
உன்னை மறப்பேனா
உயிரே வெறுப்பேனா

பக்கம் வர துடிக்குதடி
பார்க்க மனம் ஏங்குதடி
வெட்க படும் வயதாலே
ஏங்கி ஏங்கி சாகிறேண்டி

அஞ் சுகமே உன்னை உள்ளம்
அணைக்க தூண்டுதடி
அக்கினியாய் ஆசை வந்து
அடியே கொல்லுதடி

வேண்டுதலை நான் செய்ய
வேளைக்கு வந்திடடி
வியர்வையில் உடல் குளிக்க
விழி திறந்து பார்தேண்டி

கண்டதெல்லாம் கனவு என்று
கண் உறக்கம் சொன்னதடி
தப்பி விட்டேன் நான் என்றே
தாராளமாய் சிரித்தேண்டி ..!

ஆக்கம் -04-05-2025
வன்னி மைந்தன்

ஏமர்ந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏமார்ந்த காதல்

ஏமார்ந்த காதல்

உன்னை பார்த்த நாள் முதலாய்
ஊன் உறக்கம் தொலைத்து விட்டேன்
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
காணாமலே போனதெங்கே

சொல்லி ஆற முடியாத
சோகமதை தந்து விட்டு
பைங்கிளியே போனதெங்கே
பார்க்க என்னை மறந்ததென்ன

கண்ணுக்குள்ள நீ இருக்க
கற்பனையில் நீ உலவ
சொற்கள் எல்லாம் உன்னை தேட
சொந்தம் உன்னை இழந்தேனோ

பக்கத்தில நீ இருக்க
பார்த்து பார்த்து உனை இரசிக்க
முடியாமல் போனதினால்
முழு நெஞ்சும் வலிக்குதடி

கத்தும் கடல் மேல் எழுந்து
கதறுகின்ற அலைபோல
கண்கள் எல்லாம் நீராச்சு
காதல் இன்று புன்னாச்சு

செத்திடத்தான் துடிக்கிறேன்
முடியமால் தவிக்கிறேன்
இப்படி ஒரு தண்டனையை
இனி யாருக்கும் நீ கொடுத்திடாதே..!

அக்கம் -01-05-2025
வன்னி மைந்தன்

அர்ச்சுனா ஆவி பேசிறது
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா ஆவி பேசிறது

அர்ச்சுனா ஆவி பேசிறது

கொள்ளையடிக்க வந்தவன்
கொள்கை அற்று நிற்பவன்
பைத்தியமாய் நடிப்பவன்
வைத்தியன் என்பவன்

கேடு கெட்ட வார்த்தைகளை
கேளிக்கையாய் சொல்பவன்
முகமூடி கொள்ளையனாய்
முன்னேறி நிற்பவன்

நடமாடும் ஊடகமாய்
நாடெல்லாம் அலைபவன்
வெளிநாட்டு பணத்திற்கு
வெள்ளை அடிப்பவன்

தங்கத்தை மட்டுமே
தாராளம் நம்புறவன்
தமிழரின் சாபமாக
தலைகீழாய் நிற்பவன்

மொத்தத்தில் இவனொரு
பைத்தியமாய் ஆனவன்
பகல் கொள்ளையனை
பார் தமிழா விரட்டி விடு.

ஆக்கம் – 29-04-2025

வன்னி மைந்தன்

எனக்கு என்ன ஆச்சு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கு என்ன ஆச்சு

எனக்கு என்ன ஆச்சு

உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே

ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே

விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்

நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்

எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்

புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!

அக்கம் – 28-04-2025

  • வன்னி மைந்தன் –

எனக்கொரு பதில் சொல்லாயோ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கொரு பதில் சொல்லாயோ

எனக்கொரு பதில் சொல்லாயோ

கொஞ்சி பேசும் மொழி தனையே
மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உந்தன் பேரழகை – உன்
வளையல் சத்தம் காட்டுதடி

அஞ்சி அஞ்சி பேசி விடும்
அச்ச நாணம் பிடிக்குதடி
கொள்ளை பிரியம் வைத்திடவே
கொடி கூந்தல் அழைக்குதடி

சிந்தி வழியும் புன்னகையில்
சிறைச்சாலை நொறுங்குதடி
வெட்டி பார்க்கும் விழி அசைவில்
வெடி குண்டு வெடிக்குதடி

சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
சலங்கை சத்தம் ஒதுக்குதடி
உலக போரை தணித்திடவே
உன் உள்ள அமைதி துடிக்குதடி

இத்தனை பேறு கொண்டவளே
இதயம் நுழைந்த மர்மம் என்ன
எத்தனை நாள் எனை தொடர்வாய்
எனக்கொரு பதில் சொல்லாயோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-10-2024
0044 7536707793

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது

எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே

உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ

காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ

என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793

மன்னித்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மன்னித்து விடு

மன்னித்து விடு

கண்ணிருந்தும் குருடானேன்
காதிருந்தும் செவிடானேன்
உன்னை எண்ணவே
உள்ளமே மறந்து போனேன்

விதியின் விளையாட்டில்
விளையாடல் நடக்குது
சதிகள் துரத்த
சாதனை தவிக்குது

என்ன நினைத்தாயோ
என்னை திட்டினாயோ
காலம் வரும் ஒரு நாள்
கண்ணே கலங்காதே

உள்ளம் வலிக்கும் போதினில்
உன் நினைவு வந்து போகும்
என் மனம் வலியாலே
ஏறி தணிந்து உருகும்

பேசமுடியா நிலையிலே
பேரிடர் தடுக்குது
வேலியுடைத்து வருவோம் -அந்த
வேளையிலே சந்திப்போம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-09-2024

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்

கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்

குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்

கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்

விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024