ஒரு நாள் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஒரு நாள் வெல்வேன்

ஒரு நாள் வெல்வேன்

பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்

இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்

அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்

முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்

எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!

ஆக்கம் -25-06-2025

வன்னி மைந்தன்

என் உயிரே நான் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் உயிரே நான் வெல்வேன்

என் உயிரே நான் வெல்வேன்

இராத்திரியில் தூக்கத்தை
இராத்திரியில் பறிப்பவளே
இரா பகலா என்னையே
ரணகளம் ஆக்கியவளே

கவிதையில் எனை துளைத்து
கவிதை படைத்தாயோ
கவிதைக்கு சாதனையாய்
கவி புலமை தரித்தாயோ

விழிக்குள்ளே எனை வைத்து
விழியாலே கொல்கின்றாய்
விளையாட்டாய் பா குழைத்து
விளையாடல் செய்தாயோ

எது வந்து சொன்னாலும்
ஏற்களையே நான் தானே
என் மனதை வதை செய்து
ஏன் என்னை காயமிட்டாய்

உன் வலையில் நான் விழுந்து
உயிரை மாய்ப்பேனா
என் நிலவை நான் மறந்து
என் உயிரை எரிப்பேனா

விதி வந்து விளையாட
விதியிலே வீழ்வேனா
எதை வந்து செய்தாலும்
என் உயிரே நான் வெல்வேன் .

ஆக்கம் – 15-05-2025
வன்னி மைந்தன்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்வேன் ஒரு நாள் ….!

வெல்வேன் ஒரு நாள் ….!

தேடி வந்து தோல்விகளோ
தோளின் மேலே ஏறுது …
நாடி வரும் உயர்வுகளோ
நடு வழியில் சாகுது …..

ஏறிவிட ஓடுகிறேன்
ஏனோ தூரம் கூடுது …?
எவர் வைத்த சாபமோ
என் வாழ்வு நோகுது …?

ஆடி வரும் தென்றலும்
அடி தந்தே போகுது …..
ஊன்றி வரும் கால்களும்
உரமேற கூடாதோ ….?

கழியும் தின பொழுதுகளில்
கற்றவைகள் ஏராளம் ….
கல்லறையில் சாயும் முன்னர்
கட்டி ஆள மாட்டேனோ ..?

பட்ட வலி தொட்டு தானே
பாதை தேடுறேன் – நாளை
நக்கல் இட்ட வாய்களும்
நம்மை கண்டு வாடுமே ….

குடை பிடிக்கும் வானத்திற்கு
கூலி தந்தார் யாரிங்கு ..?
நிழல் வாழும் மாந்தரின்
நிலையான தென்னவோ .?

ஆறாம் அறிவை தட்டி
ஆழம் பார்க்கிறேன் ….
அந்தோ வரும் நாளில்
ஆகாயத்தை முட்டுவேன் …..

அன்று எந்தன் ஆட்டம் பாரு
அருகில் வந்து முட்டி பாரு ….
வணிகத்தின் தந்திரத்தை -என்னில்
வந்து வாங்கி நீயும் ஓடு ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/12/2018