எப்படி நான் பேசிடுவேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எப்படி நான் பேசிடுவேன்

எப்படி நான் பேசிடுவேன்

சொல்ல முடியா சோகமதை
தேக்கி வைத்து நின்றவளே
விழியில் வடிந்த விழிநீரால்
விழுந்து மனம் உடைந்தேண்டி

இல்லை உன்னில் கோபமடி
இருந்தும் ஏனோ வதைத்தாயோ
சொல்ல முனைந்த செய்திகளை
சொல்ல முன்னே தடுத்தாயோ

கொஞ்சி பேச பிடிக்கிறது
கொள்ளை பிரியம் இருக்கிறது
அச்சம் மனம் தடுப்பதால்
அதை எப்படி நானும் சொல்வது

அலையில் சிக்கிய கப்பலதாய்
அடியை தினமும் வாங்கையில
என் மனம் பதறுதடி
எப்படி நான் பேசிடுவேன்

அக்கம் 22-05-2025
வன்னிமைந்தன்