ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024

அழும் நீதி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அழும் நீதி

அழும் நீதி

உளம் உடைந்து நோகிறான்
ஊருக்காக வாழ்கிறான்
எவன் உணர்ந்து கொள்கிறான்
ஏனோ இவன் ஏற்க மறுக்கிறான்

கரை முட்டி அலையும்
களைத்து நோகிறது
எழுந்தேற முடியாது
ஏனோ தட்டி தவிக்கிறது

வேகம் தரும் காற்று
வேகம் மாறி வீசிட
தோற்று போனதாய்
தொலைவில் இருந்து அழுகிறது

வேர்த்து போன உடலுடன்
வேங்கை இன்று தூங்கிறது
வேலை வரும் இலக்கிற்காய்
வேடன் அழிக்க பதுங்கிறது …

காலம் ஒரு நாள் – உன்
கால் தடம் தழுவும் – அன்று
கண்ணீரால் கண்கள் நனையும்
கரிகாலன் தேசம் உன்னை பேசும் ….

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

ஏன் அழுகின்றாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் அழுகின்றாய்

ஏன் அழுகின்றாய்

தனிமையில் நீ இருந்து
தங்கமே ஏன் அழுகின்றாய்
அங்கமெல்லாம் தினம் வாட
ஆர் உயிரே ஏன் நோகிறாய் ,,

உண்ணாமல் நீ இருந்து
உயிரே தினம் வாடலாமோ
என் நாளும் நான் வாட
என் உயிரே வைக்கலாமா

இன்பம் துன்பம் இரு பாதி
இதயமே புரிந்து விடு
வாழும் போதே
வசந்தமாய் வாழ்ந்து விடு

கண் இருந்து நீர் வடிய
கண்ணே இதயம் நோகுதே
மண்ணை விட்டு போக தானே
மனமே எண்ணுதே

உள்ளம் நீ வாட
உறங்க முடியலையே
என் மனதை
ஏ மனமே புரிந்து விடு…..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை எவர் இங்கு தொடுவாராம்
முடிந்தால் எம் முன் எவர் வருவார்
முடிவுரை தருவோம் மோதி பார்

பகையா பக்கம் வந்து பார்
பாமர மக்கள் நோதல் பார்
நீதியை விற்ற கூட்டங்களே
நீதவான் எங்கள் அர்ச்சுனா பார் ..

இவனை இழிவதை முதல் நிறுத்து -உன்
இதயத்தை முதலில் நீ கழட்டு
உரிமைக்காய் உன்னை முதல் சுழட்டு
உதவா மனிதனா நீ ஓடு

எதுகை மோனை அலறுவதோ
ஏறி சந்தம் உரிப்பதுவோ
உன்நிலை மறந்திட முன்னாலே
உன்னை கொஞ்சம் நீ திருத்து

ஆக்கம் 11-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஆறுதல் கூறி விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஆறுதல் கூறி விடு

ஆறுதல் கூறி விடு

உள்ளம் தந்தேன் உனக்காக
உதைத்தாய் என்னை எதற்காக
வஞ்சம் உன்னில் கொண்டதோ
வலி நெஞ்சம் பதிக்க எண்ணியதோ

விட்டு விலகிடா யானி
விசாலம் தந்த ஏணி
எட்டி உதைத்தாய் ஏனோ
என்னை ஏங்க வைத்தாய் ஏனோ

நம்பி நின்றேன் நானே
நாளும் மகிழ்ந்தேன் தேனே
வீனே உன்னை தொடர்ந்தேனோ
விதியால் இன்று நொந்தேனே

ஆளும் அதிகாரமாய்
ஆழ நெஞ்சு கொண்டதோ
வழி வந்தான் என்றோ
வழி விட்டதோ

என் செய்வேன் நானோ
ஏதும் தெரியவில்லை
ஆண்டவனே எனக்கு
ஆறுதல் கூறி விடு ..!

ஆக்கம் 09-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

வீர மகன் அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வீர மகன் அர்ச்சுனா

வீர மகன் அர்ச்சுனா

சிறை பிடித்து என்னை மிரட்டுகிறார்
சிரித்த படி செல்கிறேன்
வலைவிரித்து என்னை அடக்குகிறார்
வாய் பேசியே செல்கிறேன்

குறை பிடித்து என்னை மடக்கிறார்
குரல் வளை மெல்ல முறிக்கிறார்
ஏது செய்தும் இன்றென்ன
எங்கள் மக்கள் துடிக்கிறார்

கறை படிந்த வாய்கள் சில
கரை ஏறி கரைகிறார்
சுய நல வாதிகளாய்
சுற்றியே அலைகின்றார்

வீர மகன் அர்ச்சுனா
விடுதலை பெறுவான்
கந்தக துகளாய் – அவன்
கட்டாயம் வெடிப்பான் .

ஆக்கம் 06-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு.காதுகளை கொஞ்ச தாருங்கள் ,இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி

கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே

பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ

உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ

ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!

ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

என்னை அழைக்காயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைக்காயா

என்னை அழைக்காயா

கன்னத்தில் கை வைத்து
காதோரம் நிற்பவளே
கண்ணாடி சீண்டுதடி
காதலதை தூண்டுதடி

முன்னாடி உனை பார்க்க
முத்தமிட தூண்டுதடி
மூவேளை உனை தானே
முழு நாளும் நினைக்குதடி

கன்னக் குழி சிரிப்பழகில்
கதை சொல்லி நிற்பவளே
எண்ணத்தை தூண்டிடவே
எடுத்து கதை சொல்லிடடி

உன்னோடு நான் வாழும்
உயர்வான நாளதனை
என்று நீ சொல்வாயோ
ஏக்கத்தில் தவிக்கின்றேன்

வாலாட்டும் நாய்போல
வாசலில நான் நிற்க
வாய் பேசா நிற்கிறியே
வாவென்று அழைக்காயோ ..?

ஆக்கம் 14-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

எழுந்து வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எழுந்து வா

எழுந்து வா

எழுந்து வெடிக்கும் ஏவுகணையாய்
ஏன் வெடிக்க மறுக்கின்றாய்
ஏக்கமதை மனம் வைத்து
ஏன் நொந்து அழுகின்றாய்

தூக்கமதை நீ தொலைத்து
துயரில் ஏன் வாடுகின்றாய்
பாவி என்றேன் உன்னை
பாழ் படுத்தி கொள்கின்றாய்

நீதி வென்றிட வா
நீளம் பாய வா
உன் தகைமை எடுத்துரைக்க
உரு வேற்றி ஆட வா

சதிகள் புரிந்தாரை
சாகடிக்க வா
வந்த வழி தடத்தை
வரலாறாய் எழுத வா

உறங்கி கிடந்து
உறுமி அழுவதால்
ஏதும் நடக்காது
எழுந்து வா ..

ஆக்கம் 10-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

உயிராயுதம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உயிராயுதம்

உயிராயுதம்

உடலோடு வெடிசுமந்த
உயிரான ஆயுதம்
உலகத்தின் தலைசிறந்த
உன்னத காவியம்

அலையோடு படகேறிய
அசையாத ஓவியம்
அஞ்சாது பகைமுடித்த
அண்ணனின் வீரம்

நெஞ்சொடு வெடி சுமந்த
நெருப்பான போரியம்
நிழலாக தொடரும்
நினைவழியா காவியம்

ஆடியில் ஆடிய
அழியாத ஆழியம்
அந்நியன் ஓடிட
அனல் கக்கிய வீரியம்

அங்கையர் கன்னியும் மில்லரும்
அவருடன் கூடிய தோழரும்
நெஞ்சில் வாழும் ஆலயம்
நினைவில் உருகும் ஊழியம் .

ஆக்கம் 05-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

யார் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் நீ

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

முன்னாள் போராளிகள் அவலம்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னாள் போராளிகள் அவலம்

முன்னாள் போராளிகள் அவலம்

உருக்கமான காட்சியதை
உருகி இதை பார்க்கையில
நெஞ்சு கனக்கிறது
நேயம் இன்னும் இருக்கிறது

வழித்தடத்தை மறந்தவர்கள்
வார்த்தைகளை எறிகையில
குருதி சிந்தியவர்கள்
குமுறத்தான் செய்கின்றனர்

இன்று பிறந்தார்க்கு
இவை ஏதும் தெரியாது
இவர்கள் மனக்குமுறல்
இதயங்கள் புரியாது

தேசம் வீழ்ந்ததால்
தேகங்கள் காய்கின்றன
ஆக்க பிறந்தவன்
அவை களம் வீழ்ந்ததால்

காக்க பிறந்தவர்கள்
காயங்கள் சுமக்கின்றன
கண்ணீரால் வாழ்வு
கரைந்து காய்கின்றன .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

இந்த குறும் படம் பாருங்கள் மக்களே

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அவளை தேடுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அவளை தேடுகிறேன்

அவளை தேடுகிறேன்

முரசுமோட்டை வீதியில
முன்னே நான் நிற்கையில
பரந்தன் வீதியில
பார்த்தவள் பக்கம் வந்தாள்

என்னப்பா இங்கே எண்டு
எடுத்தெரு கேள்வி கேட்டால்
என்னத்தான் நீ என்று
ஏங்க என்னை வைத்துவிட்டாள்

பேச்சின்றி நான் நிற்க
பேரிடியாய் அவள் சிரிக்க
வானரங்கம் போல அவள்
வந்த வழி போய்விட்டாள்

திரும்பி பார்க்கையில
திசை தெரியா போனவளை
திரும்ப பார்ப்பன் என்று
திகதியை தேடுகிறேன்

அரும்பு மீசையில
அழகாய்த்தான் உள்ளேனென்று
ஆள் மனதில் நான் நினைத்து
அவளை தேடுகிறேன் …!

ஆக்கம் 02-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

சம்பந்தன் விடை பெற்றார்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சம்பந்தன் விடை பெற்றார்

சம்பந்தன் விடை பெற்றார்

தேசத்தின் விடுதலைக்காய்
தெருவிறங்கி வந்தவராம் – எம்
தேசிய தலைவனையும்
தெருவெறிந்து போனவராம்

கூட்டமைப்பின் தலைவராய்
கூடு கட்டி வைத்தவரை
நாயிடை கேவலமாய்
நாவாட்டி நின்றவராம்

தேசத்தின் தலைமகனை
தெருவெறிந்து போனவனை
மனமிருத்தி பாடவோ – நீ
மா மனிதன் ஆனவானோ

குள்ளநரி காடையரின்
குழு தலைவனானவனே
பின்னாளில் தமிழ் அழிவின்
பிள்ளை கறி மணந்தவனே

அண்ணனவன் சொன்னதற்காய்
அன்னை தமிழ் ஏற்றதுவே
உந்தன் புத்தி மாறாது
உமிழ்ந்து திரிந்தவனே

இன்று இறந்து போனவனே
இறுதியிலே என் கண்டாய்
ஆனாலும் இரங்குகிறோம்
ஆழ்ந்த இரங்கல் உந்தனுக்கு ..!

ஆக்கம் 01-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை #kavithai #kavithaigal #கவிதைகள்

மூத்த அரசியல் தலைவர் ,சம்பந்தன் 30-06-2024 விடை பெற்றார் ,அவருக்கு என் இரங்கல் பா

ஏன் துரோகம் செய்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் துரோகம் செய்தாய்

ஏன் துரோகம் செய்தாய்

உன்னை தினம் நினைக்கையில்
உள்ளம் வாடுதே
உன்னோடு பேச நாளும்
உள்ளம் தேடுதே

கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
கனவு தாங்குதே
காலடியின் மண்ணெடுத்து
தலை தூங்குதே

கண் விழிக்கும் போதினில்
கால் சலங்கை அழைக்குதே
கண் இமையின் மேலே
கரும் கூந்தல் தழுவுதே

உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் வாடுதே
ஊன் உறக்கம் தொலைத்து
உன்னால் சாகுதே

காண மறந்து போனதென்ன
காதல் இறந்த மாயம் என்ன
என்ன நினைத்து என்னை மறந்தாய்
எதற்காக என்னை இழிந்தாய் …?

ஆக்கம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்

என்னை எரிக்காதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை எரிக்காதே

என்னை எரிக்காதே

பங்கு சந்தை போல
பாவை நீ ஆடாத
ஏற்ற இறக்கம் போல
ஏறி என்னை மிரட்டாத

சேர்த்து வைத்த இலாபத்தை
சேதமாக்கி போகாத
செய்கூலி இல்லாமாலே
சென்நெருப்பை வீசாத

சாட்டை நீ பார்க்காமலே
சாளரத்தை திறக்காத
தோற்றுவிட்ட பின்னாலே
தோல்வி என்னில் வீசாத

மூச்சு முட்ட பாசம் வைத்தேன்
முன்னே என்னை முறைக்காத
தாலி கட்டும் வரைக்கும் என்னை
தள்ளி என்னை வைக்காதே

வன்னி மண் யுத்தம் போல
வாட்டி என்னை எடுக்காத
வாலாட்டும் நாயைப்போல
வாசலில வைக்காதே

உன்னை நானே நம்பி வந்தேன்
உயிரே என்னை வெறுக்காதே
வைகாசியில் பிறந்தவளே
வைக்கோலாய் என்னை எரிக்காதே .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-06-2024