Tag: பதில்
அருச்சுனா செய்வது சரியா |மக்கள் சொன்ன பதில்
எனக்கொரு பதில் சொல்லாயோ
எனக்கொரு பதில் சொல்லாயோ
கொஞ்சி பேசும் மொழி தனையே
மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உந்தன் பேரழகை – உன்
வளையல் சத்தம் காட்டுதடி
அஞ்சி அஞ்சி பேசி விடும்
அச்ச நாணம் பிடிக்குதடி
கொள்ளை பிரியம் வைத்திடவே
கொடி கூந்தல் அழைக்குதடி
சிந்தி வழியும் புன்னகையில்
சிறைச்சாலை நொறுங்குதடி
வெட்டி பார்க்கும் விழி அசைவில்
வெடி குண்டு வெடிக்குதடி
சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
சலங்கை சத்தம் ஒதுக்குதடி
உலக போரை தணித்திடவே
உன் உள்ள அமைதி துடிக்குதடி
இத்தனை பேறு கொண்டவளே
இதயம் நுழைந்த மர்மம் என்ன
எத்தனை நாள் எனை தொடர்வாய்
எனக்கொரு பதில் சொல்லாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-10-2024
0044 7536707793
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.
உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.
எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.
ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.
ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.
ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.
எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.
அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.
2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.
ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.
ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.
அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.
அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.
யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.
யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.
அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.
ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.
மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.
டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .
நன்றி டேவிட் அண்ணா .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்
சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ் ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில்,
முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது.
1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04)
பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
விரைவில் இராணுவ வழங்க போகும் பொய் சாட்சியம் இங்கே வெளியாக உள்ளது .











