என்னை மறந்துவிடு
Posted in கவிதைகள்

என்னை மறந்துவிடு

என்னை மறந்துவிடு

தேடி தேடி வருகிறேன்
தேவை இல்லை என்கிறாய்
கேட்டு கேட்டு கெஞ்சுகிறேன்
கேட்கலாமலே இருக்கிறாய்

கூட வந்த வேளையிலே
கூட வர மறுத்தவளே
தேவை இல்லை என்ற பின்னே
தேடி யான் வருவானோ

கதறுகிறாய் என்றெண்ணி
கருணை கொண்டு யான் வந்தேன்
ஒடித்து மனம் எறிந்தவளே
ஒடிந்து கண்ணீர் ஓடுதடி

திருத்தி படிக்க வந்தவனை
திருத்தம் இன்றி தொலைத்தவளே
உன்னை இனி நினைப்பேனோ
உள்ளமதில் வைப்பேனோ

காலம் எல்லாம் அழுதிருப்பாய்
கலங்கி மனம் நொந்து இருப்பாய்
வீழ்ந்து போன மனம் ஒன்று
விடை பெற்று போகிறது
மன்னித்துவிடு என்னை மறந்துவிடு

ஆக்கம் 21-06-2025

வன்னி மைந்தன்

என்னை ஏற்று விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏற்று விடு

என்னை ஏற்று விடு

முதல் முதலாய் உன்னை
பார்த்து அசந்து போனேண்டி – உன்
முகத்தை பார்த்த பின்னே
கிறங்கி பொனேண்டி

எதுகை மோனை போல
என்னை ஏறி பார்க்கிறாய்
ஏற்ற இறக்கம் பார்க்க வா
என்னை அளந்து பார்க்கிறாய்

கண் இமைக்கும் நேரத்தில
கண் அடிக்கிறாய்
கண்ணாம் பூச்சி ஆடத்தானே
காதல் செய்கிறாய்

உன்னை பார்த்தால் பின்னாலே
தூங்க முடியுமா
ஊன் உறக்கம் தொலைத்து
வாழ முடியுமா

என்னை போல நல்லவனை
ஏற்று கொள்ளடி – நான்
ஏணியாக இருப்பேன்
என்னை கட்டி கொள்ளடி.

ஆக்கம் – 13-05-2025
வன்னி மைந்தன்

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

உந்தன் கவி படிக்கையில
உள்ளம் வியக்குதடி
உன்னை தினம் பார்த்திடவே
உள்ளம் துடிக்குதடி

நீ எழுதி வைத்த கவிதையதை
நித்தம் புரட்டி படிக்கையில
சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
சாதனை போல பேசுதடி

பன்மையில் பகிரும் மொழியதனில்
பாசம் வந்து கொட்டுதடி
ஒருமையில் பேசும் சங்கதியில்
ஓடி மனம் துள்ளுதடி

என்னை என்னடி செய்தாயோ – என்னை
ஏனோ சிறை வைத்தாயோ
உன்னை மறக்க முடியாமல்
உள்ளத்தை ஏனோ வைத்தாயோ

பேசா பேசும் பேரழகே
பேரொளி எனக்கு காட்டாயோ
பக்கம் வந்து பார்த்திடவே
பாவை என்னை அழைக்காயோ ..?

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்