Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

  • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்

    லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்

    லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Kebab and Pizza in Herne Bay கடை திடீரென தீ பற்றி எரிந்து நாசமானது


    அவ்வேளை அந்த கடைக்குள் ஏரியா நிலையில் குடிபானங்கள் இருந்துள்ளன
    அதனை அந்த கடைக்குள் நுழைந்த்து திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது

    26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தயார் இந்த கடையினை நிர்வகதித்து ,அவரது கணவர் மற்றும் குடும்பம் இணைந்து நடாத்தி வந்தனர்

    இவ்வேளை அது விபத்தில் சிக்கி எறிந்துள்ளது துயரை ஏற்படுத்தியபோதிலும் மீள அதனை சரி செய்து


    இழந்த வியாபாரத்தை பெருக்கிட முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

      Posted in உலக செய்திகள்

      தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

      தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

      தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – சமாச்சாரம் வேறு பாலஸ்தீனம் காச மேற்கு கரை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

      இஸ்ரேலிய உளவு விமானம்


      இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்றரை ,.இஸ்ரேலிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின

      இந்த விமானம் மீதான தாக்குதல் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் ,அவ்விதம்

      வீழ்த்த பட்ட விமானம்

      வீழ்த்த பட்ட விமானம் தமது உளவு விமானம் என மூக்குடை பட்டு இஸ்ரேல் தெரிவித்துள்ளது

      ஆனால் சம்பவம் வேறு என்னமோ நடந்துள்ளதாகவே பார்க்க படுகிறது ,


      இஸ்ரேல் முந்தி கொண்டு இவ்விதம் அறிவிக்க கரணம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்

        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்

        அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணி ஒன்று ஈராக்கின் Babylon.பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொழுது தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

        இதில் இரண்டு கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன ,இந்த வாகன தொடரணி

        எண்ணெய் திருடி செல்லும் டாங்கிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அணியினர் என தெரிவிக்க படுகிறது

        அவ்விதமான இந்த அணியினர் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          தென் கொரியாவில் பாரிய வெடிப்பு ஒருவர் பலி 9 பேர் காயம்

          தென் கொரியாவில் பாரிய வெடிப்பு ஒருவர் பலி 9 பேர் காயம்

          தென் கொரியாவில் ஒயில் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,
          மேலும் ஒன்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.

          காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இந்த வெடிப்பு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை

          விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

            Posted in உலக செய்திகள்

            டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் அறிவிப்பு

            டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு

            உக்கிரன் நாட்டின் டொன்பாஸ் பகுதியில் ரசியா இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்

            இவ்வேளை அவர்களுக்கு எதிரான சமரில் ரசியா இராணுவத்தின் எட்டு டாங்கிகள்


            மூன்று artillery systems, 10 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

            தாம் ரசியா படைகளை அழித்து வருவதாக உக்கிரேன்
            பரப்புரை செய்கிறது ,ஆனால் கள நிலவரம் தலைகீழாக உள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள்

              ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்

              ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்

              உக்கிரேன் நாட்டின் மீது ரசிய அத்தொடர்ந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதலில்


              தபோது உக்கிரேனின் முக்கிய நகராக விளங்கும் Azovstal பகுதியை தாம் முற்று முழுதாக மீட்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது

              மேலும் அங்கு காயங்களுடன் சிக்கி தவித்த உக்கிரேன் இராணுவத்தினர் உள்ளிட்ட பல நூறு பேர் ரசியா இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்

              மீட்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்த பட்டு தொடர்ந்து தாக்குதல்கள் வெடித்து பறந்த
              வண்ணம் உள்ளது

                Posted in உலக செய்திகள்

                உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு

                உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு

                உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
                தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

                தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

                உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .

                ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .

                பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .

                  Posted in உலக செய்திகள்

                  ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

                  ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

                  ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

                  ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.

                  இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
                  தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

                  ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

                    Posted in உலக செய்திகள்

                    1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்

                    1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்

                    ரசியா உக்கிரேன் மீது போரை தொடுத்து வரும் நிலையில் உக்கிரேனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடராக ஆயுதங்களை விற்ற வண்ணம்

                    உள்ளன ,அவ்விதம் அவசர உதவியாக சுமார் 1,3 பில்லியனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்கள் மற்றும் ஆட்டிலறி என்பன வழங்க பட்டுள்ளது

                    இந்த ஆயுதங்கள் தற்போது உக்கிரேன் கீவ் நகருக்கு சென்றடைந்துள்ளன ,உக்கிரேன் களத்தில் பிரிட்டன் அமெரிக்கா


                    தமது ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      பிரிட்டனில் எரிந்த வீடு மீட்க பட்ட – கஞ்சா செடிகள்

                      பிரிட்டனில் எரிந்த வீடு மீட்க பட்ட – கஞ்சா செடிகள்

                      பிரிட்டன் Pelham Road, Gravesend பகுதியில் வீடொன்று இருந்துள்ளது ,சம்பவத்தை அறிந்து 12 தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் இயந்திரங்களுடன் வருகை தந்தனர்

                      அப்போது வீட்டின் உள்ளே சென்ற பொழுது எரிந்த நிலையில் கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளன

                      தொடர்ந்து நடத்திய சோதனையில் ஐம்பதாயிரம் பவுண்டுகள் பெருமாதியான கஞ்சா செடிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

                      தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

                        Posted in உலக செய்திகள்

                        ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி

                        ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி

                        ரசிய இராணுவத்தின் ஆட்டிலறி படைகள் முகாம் மீது உக்கிரேன் படைகள் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது

                        இங்கு முப்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள் நிறுத்தி வைக்க பட்டிருந்ததாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                        Posted in உலக செய்திகள்

                        ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ

                        ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ

                        உக்கிரேன் இராணுவத்தின் 25th Separate Sicheslavska Airborne பிரிகேட் படைகள் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மற்றும் அதன் அருகில் நிறுத்தி

                        வைக்க பட்டிருந்த டாங்கிகள் மீது ஏவுகணை தாக்குதலை நாடத்தினை ,இதில் அந்த

                        டாங்கிகள் அழிந்தன , அதில் பயணித்த இராணுவத்தினரும் பலியாகியுள்ளனர்

                        மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது

                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                          Posted in உலக செய்திகள்

                          ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்

                          ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்

                          உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
                          Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                          குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்

                          இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
                          சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது

                            Posted in உலக செய்திகள்

                            பிரிட்டன் பாரளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு – photo

                            முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை


                            கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர்

                            ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு முன்பாக வந்தடைந்தது.


                            பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.


                            பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும்


                            தமிழீழத் தேசிய கொடியினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


                            அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.


                            தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.
                            முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது.


                            தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றது.
                            இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .
                            இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

                            Posted in உலக செய்திகள்

                            முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்

                            முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்

                            முள்ளிவாய்க்கால் பகுதியில் இதே நாளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்.


                            அந்த வலி தாங்கிய முள்ளி வாய்கல் நாளினை தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

                            இலங்கை சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசின் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இன அழிப்புக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.


                            தமிழீழ விடுதலை புலிகள் பங்கரவாதிகள் என கூறியபடி அவர்களை வேரோடு அழித்த உலகம் இதுவரை ,சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பிற்கு நீதி வழங்கி தண்டிக்காது உறங்கு நிலையில் உள்ளது .

                            பாதிக்க பட்ட தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

                            இலங்கை வடக்கு பகுதியில் கொன்று குவிக்க பட்ட அப்பவி மக்களின் படுகொலைக்கு என்று தீர்வு கிடைக்கும் ..?

                            இந்த கேள்வியோடும் கொதிப்போடும் முள்ளி வாய்காலில் மக்கள் ஒன்று கூடி கரைந்து உருகி கண்ணீர் வடித்து சென்றனர் .

                              Posted in உலக செய்திகள்

                              வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா

                              வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா

                              உக்கிரேன் கிழக்கு முன்னரங்க பகுதி ஊடக ஊடறுத்து உள்நுளைய முனைந்த ரசியா இராணுவத்தினருக்கும்,உக்கிரேன் படைகளும் இடையில் வெடித்த உக்கிர சமர் காரணமாக ரசியா டாங்கிகள் அழிக்க பட்டுள்ளது .

                              உக்கிரேன் இராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் ஊடாக ரஷியா இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .

                              இந்த உக்கிர தாக்குதலின் பொழுது ரசியா இராணுவத்தின் டாங்கிகள் ,மற்றும் கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .

                              தமது எதிர் தாக்குதல் மூலம் பல டசின் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

                              ரசியாவின் முக்கிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிய ,ஏவுகணைகள் முழங்க போர் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              Lviv, Chernihiv, and Sumy இந்த பகுதிகள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்

                                லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்

                                லண்டன் லூசியம் பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மேற்கொள்ள பட்ட கத்தி

                                குத்து தாக்குதலை அடுத்து அதே பகுதி எம்பியினால் வழங்க பட்ட உத்தரவை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்

                                குறிப்பிட பட்ட சில பகுதிகளில் செல்லும் வாகனங்கள் ,மக்கள் சோதனைக்கு உள்ளான

                                நிலையில் காணப்பட்டால் அவர்கள் சோதனை செய்ய பட்டு ,தேவை ஏற்படின் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கும் உட்படுத்த படுகின்றனர்

                                தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள்

                                  வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

                                  வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

                                  வடகொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.

                                  வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் பிறப்பித்த உத்தரவு
                                  கிம் ஜாங் அன்

                                  உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள்

                                  மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பது உலகநாடுகளால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டது.

                                  இந்த சூழ்நிலையில், கடந்த 12-ந்தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று

                                  உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

                                  நேற்று மேலும் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. ஒரேநாளில், 3 லட்சத்து 92 ஆயிரத்து 920 பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                  காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கவில்லை.

                                  இந்நிலையில், தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது, அவர் அதிகாரிகளை கடுமையாக சாடினார்.

                                  அவர்பேசியதாவது:-

                                  அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.

                                  ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.

                                  இவ்வாறு அவர் கூறினார்

                                  Posted in உலக செய்திகள்

                                  பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

                                  பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்

                                  எலிசபெத் போர்னி,முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

                                  பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு
                                  எலிசபெத் போர்னி, இமானுவேல் மேக்ரான்

                                  பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

                                  இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

                                  இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை
                                  அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.

                                  61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இது 2-வது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

                                  பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

                                  புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.

                                  அதிபரும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து
                                  இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.