5 பேரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

5 பேரை காணவில்லை

5 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவிதுள்ளதுடன் ,அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அனர்த்தங்களின் சிக்கி பலர் பலி

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி ,பத்து பேர் பலியாகியும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு காணாமல் போனவர்கள் ,மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

காணாமல் போனவர்களை, தேடும் பணி

பாதிக்க பட்ட பகுதியில் காணாமல் போனவர்களை, தேடும் பணியில் ,காணமல் போனவர்கள் உறவினர்கள் மற்றும் ,மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக ,பல நூறு குடும்பங்கள் பாதிக்க பட்டு வருவதுடன் ,உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவு என்பனவும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது .

இவளை பார்க்க யாரும் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

இவளை பார்க்க யாரும் இல்லை

இவளை பார்க்க யாரும் இல்லை

பார்வையிழந்த இவளை பார்க்க யாரும் இல்லை ,வவுனியாவில் தனிமையில் கதறும் இளம் தமிழ் பெண் .

போரினால் பாதிக்க பட்ட ஆதரவற்ற நிலையில் ,வவுனியா கணேசபுரம் பகுதியில் தனிமையில் வசித்து வரும் இந்த பெண் ,வறுமையில் பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் .உள்ளார்

சுய தொழில் செய்து வாழ விரும்பும் இவர் ,குடி நீர் இன்றி தவித்து வருகின்றார் .

இவருக்கு குழாய் கிணறு ஒன்று நிறுவி கொடுத்தால் அதனை வைத்து குடி நீரை பூர்த்தி செய்வதுடன் ,தனது சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வார் .

கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்

அதனால் ஒரு கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளே உங்கள் ,அன்பையும் ஆதரவையும் இந்த பெண்ணுக்கு வழங்கிடுங்கள் .

கடல் கடந்து வந்த போதும் தாய் மண்ணையும் ,அந்த மக்களையும் தாங்கி பிடித்து பேருதவி புரிந்து ,பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் கண்ணீரை துடைக்கும் தாயகத்து உறவுகளை ,நல்ல மனங்களே இந்த பார்வை அற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள் .

எம ,சோதரி எம் அக்கா கதறுகிறாள் ,அவள் கண்ணீரை துடைத்து ,உங்கள் அன்பை செலுத்தி உண்பதற்கான ஒரு உத்தரவாத உழைப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

இந்த இளம் பெண்ணுக்கு உதவிட விரும்பும் அன்பர்கள் கீழ் வரும் கைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம் ,வாட்சப் ,வைபர் ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி உதவுங்கள் மக்களே .0094 77111 8129

வீடியோ

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்பலி யாகியுள்ளனர் .

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கொழும்பு மாவட்டம்:

  • பாதுக்கை

களுத்துறை மாவட்டம்:

  • மத்துமை
  • இங்கிரிய
  • பாலிந்தநுவர
  • புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம்:

  • குருவிட்ட
  • எலபாத
  • கிரியெல்ல
  • அயகம
  • எஹெலியகொடை
  • கலவானை
  • இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

கொழும்பு மாவட்டம்:

  • சீதாவாக்கை

அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட

  • ஹொரணை

கண்டி மாவட்டம்:

  • உடபலாத

கேகாலை மாவட்டம்:

  • தெஹியோவிட்ட
  • தெரணியாகலை

மாத்தறை மாவட்டம்:

  • முல்லட்டியன
  • பிட்டபெத்தர
  • கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

  • அமம்பகமுவ
  • கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

  • இம்புல்பே

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

காலி மாவட்டம்:

  • தவகம
  • நியகம
  • எல்பிட்டிய
  • நாகொடை
  • நெலுவ

அம்பாந்தோட்டை மாவட்டம்:

  • கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

  • தொடங்கொடை
  • அகலவத்தை

கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல

  • கங்க இஹல கோரல
  • உடுநுவர
  • கங்கவட்ட கோரல
  • யட்டிநுவர

கேகாலை மாவட்டம்:

  • யட்டியாந்தோட்ட
  • புலத்கொஹுபிட்டிய
  • ருவன்வெல்ல
  • ரம்புக்கன
  • வரக்காபொல
  • கலிகமுவ
  • அரநாயக்க
  • மாவனெல்லை
  • கேகாலை

குருநாகல் மாவட்டம்:

  • மாவத்தகம
  • ரிதிகம

மாத்தறை மாவட்டம்:

  • பஸ்கொட
  • அக்குரஸ்ஸ

நுவரெலியா மாவட்டம்:

  • நுவரெலிய

இரத்தினபுரி மாவட்டம்:

  • பலாங்கொடை
சரமாரியாக வெட்டிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

சரமாரியாக வெட்டிய கும்பல்

திடீரென புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்

சரமாரியாக வெட்டிய கும்பல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில்

நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தாக்குதல்

இன்னும் சில பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் வீடொன்றில் இருந்த பொருட்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்குள்ளாகியது.

வாள்கள் தாங்கிய சிறு குழுவொன்றின் தாக்குதல் காரணமாகவே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாச்சிக்குடா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதுடன் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வீதியில் சென்றவர்கள் மீதும் தாக்குதல்

வாள்கள் தாங்கிய சிறு குழுவானது ஒருவரை விரட்டி வந்த நிலையில் விரட்டப்பட்டு வந்தவர் அவரது சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதன் காரணமாக அவ்வீட்டினுள் நுழைந்து வாள் தாங்கிய குழுவானது அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் வாள் வெட்டிற்கு இலக்கானதுடன் சத்தம் கேட்டு வீட்டினுள் நுழைந்த அயல் வீட்டார் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் வீதியில் இருந்த மோட்டார் சைக்கிளும் தாக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்குதலால் செய்வதறியாது நிலை தடுமாறிய பொது மக்கள் சிலர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளித்தும் உள்ளனர்.

சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இச்சம்பவத்தினால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் உறைந்து போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னராக அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிசார் நிலமையினை பார்வையிட்டு சென்றுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.

கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .

குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாருக்கு

குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை

சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை

இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .

அவ்வைந்தாம் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்தினால் ,அதை பயன் படுத்தியவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை வழக்கும் புதிய சட்டம் காண படுகின்ற பொழுதும் ,இவ்விதமான ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது .

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
Posted in இலங்கை செய்திகள்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம் ,வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

தந்தை ஒரு மீன் வியாபாரி

எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.

எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள்

மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமது கிராமத்தில் அதன் கல்வி வளர்ச்சியை தந்து மகத்தான வெற்றி சாதஹனை மூலம் நிரூபித்துள்ள இந்த மாணவியின் செயல்பாடு கண்டு ,அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்வு ஏற்பட்டுள்ளது .

தனது பாடசாலைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை நிலை நாட்டி .

அந்த ஊர் செய்திகளில் முதண்மை இடம் பிடிக்க காரணமாக விளங்கிய மீன் வியாபாரி மகள் செயல்பாடு சாதனை தான் என சமூக வலைத்தளங்களில் பேச .படுகிறது

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள்

கிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவிகள் நேற்று வெளியான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா,

அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேபோல், அன்பழகன் மீனுஜா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது​.

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மாணவர்கள் தற்போது அதி உயர் பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்தது வருவது ,கல்வியால் ரீதியில் அதி வளர்ச்சி கொண்டுள்ளதை இந்த மாணவர்கள் சாதனை விபரங்கள் எடுத்து காட்டுகின்றன .

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு ,காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா பலி

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் தாயார் வெளிநாடு

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும்,

யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி இளைஞன் ஒருவருடன் காதல்

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசாரணை

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறிப்பிட தக்கது .

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை
Posted in இலங்கை செய்திகள்

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை

வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை , குருநாகலில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற உரிமையாளர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று (31) கைது செய்துள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

குருநாகல் சூரதிஸ்ஸ மாவத்தையில் MMP என்ற பெயரில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இங்கு, சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு நடப்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 110 கடவுச்சீட்டுகள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சட்டவிரோத முகவர்களிடம் சிக்கி நூற்று கணக்கான மக்கள் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறு சிலர் வீடு வேலை செய்தவர்களினால் படுகொலை செய்ய பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

சர்வதேச விசாரணை ஒன்றே தேவை யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை.என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் நேற்று (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

கோபத்தை ஏற்படுத்தும் வகையில்

தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை. எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.

வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.

தமிழர்களின் பிரச்சினை

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க,சஜித் பிரேமதாச,அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள். யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும்

தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை
Posted in இலங்கை செய்திகள்

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிபில பொலிஸாருக்கு நேற்று (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார்

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல்

விக்னேஸ்வரன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய

மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசியகருத்தியல்களை உள்ளடக்கி உள்ளே நுழைந்தார் ஆனால் இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார்.

உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

இது ஒரு உலக அதிசயம்

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன்.

ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில்

விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு வசாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.

இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்ல கூடும் எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறி விலக கூடும்.

இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்க கூடும்.

இதன் காரணமாக எதிர் நிலையில் இருக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகன்றது என தெரிவித்தார்.

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று தனது திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவர், தனது திருமண ஆடை அலங்காரத்துடன் தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறு வருகை தந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதி ஆவார்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
Posted in இலங்கை செய்திகள்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்


நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன் ,நமக்காக போராடி காயமடைந்த நிலையில் ,காணப்படும் முன்னாள் போராளிகளின் கண்ணீரை தனது கரம், கொண்டு துடைத்து இருக்கிறார் சட்ட ஆலோசகர் பிரியன் அவர்கள் .

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகர் பிரியன்

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகராக விளங்கி வரும் பிரியன் அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது பாராட்டுதலுக்கு உரியது .

ஓம் பராசக்தி அறக்கட்டளையின் ஊடாக அதன் ஸ்தாபகர் ,சட்ட ஆலோசகரும் மனித நேயவாதியும் ,மக்கள் நல திட்டத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கும் பிரியன் அவர்கள் வழங்கியுள்ளார் .

போராளி குடும்பத்தின் நீர் தேவை

முன்னாள் போராளி குடும்பத்தின் நீர் தேவைக்கு ,ஓம் பராசத்தி அறக்கட்டளையின் ஊடக ,ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க .பட்டுள்ளது

அந்த நிதி உதவியின் ஊடாக ,பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தில் திணறி கொண்டிருந்த ,காயமடைந்த போராளி அவர்களுக்கு இந்த நன்கொடை உதவி திட்டம் வழங்க பட்டுள்ளது .

இவ்வேளை ஓம்பராசக்தி அறக்கட்டளை நிறுவத்தாருக்கு எமது நன்றிகள்

வீடியோ

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
Posted in இலங்கை செய்திகள்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

வாய்க்காலுக்குள் தடம் புரண்ட வான்

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான் ,மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது

மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்

.இலங்கையில் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் ,மக்கள் உயிர்பலி மற்றும் காயமடைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது

வாகன சாரதிகள் வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது செல்கின்ற நிலையால் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன ,

வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்படி இழந்து வான் வாய்களுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிட தக்கது .

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை ,யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக

ஆசிரியர் கைது

பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கமைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் .

குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை அறிக்கை

மேலும் , சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி

அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , ஆசிரியருக்கு தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பற்று வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித சலனம் ஏற்பட்டுள்ளது

மாணவ்ர்களை ஆசிரியர்கள் இவ்விதம் நடத்தி கொள்வது போதை பொருள் காலாசாரார்த்தின் சீரழிவு என தெரிவிக்க படுகிறது .