Tag: ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாகொட காவல் நிலைய அதிகாரிகளுக்கு 2025.10.06 அன்று மாலை, கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் .
தன்னியக்க துப்பாக்கி
தயாரிக்கப்பட்ட பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கி, 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகத்தின் பேரில் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் நாகொடவின் அளுத்தானயம்கொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது.
செய்யப்பட்டார். சந்தேக நபர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.
நாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பருடன் ஒருவர் கைது
அம்பருடன் ஒருவர் கைது
அம்பருடன் ஒருவர் கைது அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று
(10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து சுமார் 3 கிலோ கிராம் கோர்டைட், 9 கிலோ கிராமுக்கு மேற்பட்ட அம்மோனியா, 15 வோட்டர் ஜெல்
என்ற வெடி மருந்து, 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 22 அடி நீளமான நூல் ஆகியவை மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் ரக்வானை பகுதியை சேர்ந்த 78 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது
ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்
ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன்
ஒருவர் கைது உள்நாட்டு துப்பாக்கியுடன் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.துப்பாக்கி கலாச்சாரம் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்த விடயம் அம்பல படுத்தி நிற்கிறது .
வகாரகளே பிரதேசத்தில் உள்ளூர் முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அவரது வீட்டை போலீசார் திடீரென சுற்றி வளர்த்தனர். அதன் பொழுதே இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
49 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களாக இலங்கையில் துப்பாக்கி உடன் அலைகின்ற .பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் .இந்த கைதுக்கான நடவடிக்கை தொடர்பாக தெரிய வரவில்லை.
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இதுவரை 28க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளமை அனுரா அரசினுடைய சட்ட சீர் இன்மையை காண்பிக்கிறது.
பேருந்து விபத்துக்கள்
பேருந்து விபத்துக்கள் ,வாகன விபத்துக்கள் ,தொடர்பாக நாள்தோறும்ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சட்டவிரோதமான துப்பாக்கி பாவனை என்பன இலங்கையில் அதிகரித்து காணப்படுகின்றமை, இந்த விடயத்துடாக மேலும் ஒருமுறை அம்பலமாகி உள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவரை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
நுவரெலியா அம்பேவல 7 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸாருக்கு
குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை
சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை
இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .
அவ்வைந்தாம் சட்டவிரோதமாக ஆயுதம் பயன்படுத்தினால் ,அதை பயன் படுத்தியவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை வழக்கும் புதிய சட்டம் காண படுகின்ற பொழுதும் ,இவ்விதமான ஆயுதங்கள் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது .
Featured
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை (12) , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை
பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





























