Tag: காணாமல் போன
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.
கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .
குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
Featured
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கடலடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற
நீர்மூழ்கி கப்பல் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போனது .
இந்த கப்பலுக்கு என்ன நடந்து என்பது தொடர்பில் தெரியாது ,
திணறிய கப்பல் படை ,தற்போது அந்த நீர் மூழ்கி
கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
மூன்று நாட்கள் மட்டும் சுவாசிக்கும் ஓட்ஸிசன் இருந்துள்ளது ,
ஆனால் அவை தற்போது தீர்ந்துள்ள நிலையில் ,
அவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கனடா நாட்டு கப்பல் கடலடியில் சத்தம் வரும் திசையை கண்டு சென்ற பொது ,
காணாமல் போன நீர்மூழ்கி கண்டு பிடிக்க பட்டது .
அந்த கப்பலில் உடைவு காணப்படுவதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெரியவரவில்லை என்கிறது
மேற்படி சம்பவம் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு
காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு
இலங்கை கடற்படையின் நீருந்து விசை படகு ஒன்று, திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்புகள் துண்டிக்க பட்டு காணாமல் போனது .
அவ்வாறு காணமல் போன இலங்கை கடல் படை கப்பல் ,சர்வதேச கடல் பகுதியில் ,இருந்தவாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கண்டு பிடிக்க பட்ட கப்பலை மீள இலங்கை கடல்படை , தளத்திற்கு இழுத்துவரும் நகர்வில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது .
இந்த கப்பல் காணாமல் போனது தொடர்பாக, அண்டைய நாடுகளுக்கும் இலங்கை கடற்படை அறிவித்தது .
இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் ,உள்ள இலங்கை கடற்படை கப்பலை இழுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்கிறது இலங்கை கடற்படை .
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
காணாமல் போன் மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
இலங்கை கண்டு பேராதனை பல்கலைக் கழக்தில் கல்வி , பயின்று வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்து ,காணாமல் போனார் .
காணாமல் போகும் முன்னர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருந்தார் .
தற்போது 10 நாட்களின் பின்னர் ,அதே பல்கலை கழகத்திற்கு மீளவும் திரும்பி வந்துள்ளார் என்கிறது ,அந்த கல்லூரி நிர்வாகம் .
காணாமல் போன இளைஞன்-காயங்களுடன் மீட்பு
சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன இளைஞன் ஒருவரரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், அனுராதபுரத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய 07 இளைஞர்கள் நேற்று கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.
இந் நிலையில் மதுபோதையிலிருந்த குறித்த இளைஞன் இன்று அதிகாலை 01 மணியளவில் விடுதியின் மேல்மாடி ஜன்னல் வழியாக வெளியில் குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.
இவ்வாறு சென்ற இளைஞனை கண்டு பிடிக்க கொத்தமலை பொலிஸாரும் அதிரடிபடையினரும் காட்டுப்பகுதிக்குள் தேடுதலில் ஈடுட்ட நிலையிலே ரம்பொடை ஆற்றுப்பகுதியின் கற்பாறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.


























