Tag: காணாமல் போன
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.
கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .
குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கடலடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற
நீர்மூழ்கி கப்பல் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போனது .
இந்த கப்பலுக்கு என்ன நடந்து என்பது தொடர்பில் தெரியாது ,
திணறிய கப்பல் படை ,தற்போது அந்த நீர் மூழ்கி
கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
மூன்று நாட்கள் மட்டும் சுவாசிக்கும் ஓட்ஸிசன் இருந்துள்ளது ,
ஆனால் அவை தற்போது தீர்ந்துள்ள நிலையில் ,
அவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கனடா நாட்டு கப்பல் கடலடியில் சத்தம் வரும் திசையை கண்டு சென்ற பொது ,
காணாமல் போன நீர்மூழ்கி கண்டு பிடிக்க பட்டது .
அந்த கப்பலில் உடைவு காணப்படுவதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெரியவரவில்லை என்கிறது
மேற்படி சம்பவம் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு
காணாமல் போன இலங்கை இராணுவ கப்பல் கண்டு பிடிப்பு
இலங்கை கடற்படையின் நீருந்து விசை படகு ஒன்று, திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்புகள் துண்டிக்க பட்டு காணாமல் போனது .
அவ்வாறு காணமல் போன இலங்கை கடல் படை கப்பல் ,சர்வதேச கடல் பகுதியில் ,இருந்தவாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கண்டு பிடிக்க பட்ட கப்பலை மீள இலங்கை கடல்படை , தளத்திற்கு இழுத்துவரும் நகர்வில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது .
இந்த கப்பல் காணாமல் போனது தொடர்பாக, அண்டைய நாடுகளுக்கும் இலங்கை கடற்படை அறிவித்தது .
இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் ,உள்ள இலங்கை கடற்படை கப்பலை இழுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்கிறது இலங்கை கடற்படை .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

காணாமல் போன மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
காணாமல் போன் மாணவன் 10 நாட்களின் பின்னர் திரும்பினார்
இலங்கை கண்டு பேராதனை பல்கலைக் கழக்தில் கல்வி , பயின்று வந்த மாணவர் ஒருவர் அங்கிருந்து ,காணாமல் போனார் .
காணாமல் போகும் முன்னர், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருந்தார் .
தற்போது 10 நாட்களின் பின்னர் ,அதே பல்கலை கழகத்திற்கு மீளவும் திரும்பி வந்துள்ளார் என்கிறது ,அந்த கல்லூரி நிர்வாகம் .
காணாமல் போன இளைஞன்-காயங்களுடன் மீட்பு
சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன இளைஞன் ஒருவரரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், அனுராதபுரத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய 07 இளைஞர்கள் நேற்று கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி இரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.
இந் நிலையில் மதுபோதையிலிருந்த குறித்த இளைஞன் இன்று அதிகாலை 01 மணியளவில் விடுதியின் மேல்மாடி ஜன்னல் வழியாக வெளியில் குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.
இவ்வாறு சென்ற இளைஞனை கண்டு பிடிக்க கொத்தமலை பொலிஸாரும் அதிரடிபடையினரும் காட்டுப்பகுதிக்குள் தேடுதலில் ஈடுட்ட நிலையிலே ரம்பொடை ஆற்றுப்பகுதியின் கற்பாறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.


























