Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மொனராகலை பகுதியில் மாமி மற்றும் மனைவி மீது கணவன் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார் .
கணவனின் தாக்குதலில் மாமியார் சம்பவ இடத்தில் .பலியானார் ,பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி ,சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார் .
குடும்ப தகராறு
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி மற்றும் மாமியாருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வந்துள்ளது .
அவ்வேளை சீற்றம் அடைந்த கணவன் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
கணவன் நடத்திய தாக்குதலில் ,தாய் ,மகள் பலியான சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கூட்டு குடும்பம்
கூட்டு குடும்பமாக வாழும் இக்காலத்தில் ,ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்ல வேண்டும் .
அவை இல்லாத பட்சத்தில் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாது என சமூக நல மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
அதிகரித்த படுகொலைகள்
இலங்கையில் வழமைக்கு மாறாக தற்போது ,இவ்விதமான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
அவ்வாறான கொலைகளை விசாரிப்பதற்கே தனி விசாரணை படைகளை இலங்கை காவல்துறை அமைக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ள பட்டுள்ளது .
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மாமி மற்றும் மனைவி மீதான தாக்குதலும் நீண்ட நாள் வன்மத்தின் உச்சமே காரணம் என ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர் .
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் இவ்வாறான கொலைகள் ,இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது .
இலங்கையில் எற்பட்டடுள்ள பொருளாதார சீர்கேடு ,அதனால் ஏற்பட்ட உளவியல் அழுத்தங்கள் காரணமாகவும் ,இவ்விதமான கொலைகள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது .
அரசும் அதன் நிர்வாகமமுமே ,மக்கள் வாழ்வியல் சுமைகளை குறைத்தால் இவ்விதமான விடயங்கள் நீர்த்து போகும் எனப்படுகிறது .
கோபத்தின் விளைவு இன்று தாய் ,மகள் மரணம் ,கொலை குற்றத்தில் கணவன் தற்பொழுது சிறை சென்றுள்ளார் .
இவர்களது பெற்ற பிள்ளைகள் அனாதைகளாக மாற்றம் பெற்றுள்ளனர் .
எதை எங்கு யாரிடம் சொல்லவேண்டும் ,எதை சொல்லக்கூடாது என்ற விடயம் இல்லாது ,தாங்களே புத்தியீவிகள் என்ற கணக்கில் ,கட்டவிழ்த்து விட படும் கதைகளும் .புனைவுகளும் இந்த கொலைகளுக்கு காரணமாக மற்றம் பெற்றுள்ளதை காணமுடிகிறது .
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம் ,சீவல் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய காவல்துறை செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மன்னார் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியை சேர்ந்தஹ் சீவல் தொழிலாளி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சீவல் தொழிலாளியான இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பதான குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில் ,இவர் மீது பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழு பொதுமகனுக்கும் காவல்துறைக்கும் இடையில் ,ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பிறிதொரு நபர் வாழங்கிய தகவலை பெற்று கொண்ட காவல்துறையினர் ,பொதுமகன் மீது பொய்யான குற்ற சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக ,தாக்குதலுக்கு உள்ளான பொதுமகன் தெரிவித்துள்ளார் .
ஆனால் காவல்துறையினரோ பொதுமகனை தாம் விசாரித்து கொண்டிருந்த பொழுது ,அவர் எம் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்த பொழுது ,அவர்கள் காவல்துறையினரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர் .
மக்களை தாக்கும் காவல்துறை
இலங்கையில் சமீப காலமாக மக்கள் மீது இலங்கை காவல்துறைனர் தாக்குதல் நாடத்துவதும் ,அதனால் மக்கள் இவ்வாறு காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்க படும் செயல் பாடுகள், அதிகரித்து காணப்படுகின்றன .
இவ்வாறான நிலையில் மன்னர் அடம்பன் பகுதியில் சீவல் தொழிலாளி மீது நடத்த பட்ட தாக்குதல் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள இனவாத ஆயுத படைகள் ,அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டு ,மக்களை அடக்கி ஒடுக்கி வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு வழங்குவதற்கு நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02) தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர் அப்பகுதி மக்கள்போராட்டம்
இந்த நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அதிகளவிலான காவல்துறையினரின் பிரசன்னம் இருந்தததாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார் .
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு
இதனால் துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் நாளில் உறவுகளால் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் கடந்த வருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது துரைராசா ரவிகரன் ,மக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மக்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்
அளம்பில் பகுதியில் குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் ஒரு புறத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினையும் (தனியார்
காணியினையும்) மற்றைய புறத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினையும் சிறிலங்கா இராணுவத்தின், சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்காக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கையகப்படுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினை நிரந்தரமாக கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லக் காணியில் இராணுவத்தினர் உணவகம் ஒன்றை மாத்திரமே தற்போது வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணியினை உயிரிழந்த தமது உறவுகளினை நிம்மதியாக நினைவுகூர தருமாறு மக்கள் பலதடவை கோரியும் இராணுவம் இவ்வாறு தொடர்ச்சியாக அபகரிக்க முயன்றுவரும் நிலையில் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று இராணுவத்துக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக முல்லைத்தீவு காவல்துறையினர்
குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு தொடர்பாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துளளார் .
காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் ,முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை விசாரணைக்கு வந்தது .
கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராகவனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அடாவடி
1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய
காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை
குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் அவர்களும் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,
ரவிகரன் அரச அதிகாரிகள் தர்க்கம்
இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனால் இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.
வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்
இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற யூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது என ரவிகரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .
வனஜீவராசிகள் திணைக்களம் செயல்பாட்டுக்கு எதிராக ரவிகரன்
தமிழர் காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் செயல்பாட்டுக்கு எதிராக ரவிகரன் அவர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்தவேளை அங்கு முறுகல் நிலை காணப்பட்டது .
அப்பாவி தமிழ் மக்கள் காணிகளை அபகரிக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயல்படு திட்டமிடப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பாக உள்ளதை இதன் ஊடக காணமுடிகிறது .
மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு. ,மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் வெட்டி கொலை .
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ,வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கொலை நடந்தது எப்படி
இவர் எப்படி வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது, பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில் ,தற்போது மனைவி தற்கொலை புரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மனைவி நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இந்த இருவரது மரணங்களும் படு கொலையா என்ற நோக்கில்,பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க .பட்டுள்ளன
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வெட்டி படுகொலை சம்பவங்கள் ,தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
இவை இலங்கையில் குற்ற சமூகம் ஒன்று உருவாகி வருவதையும் ,மக்கள் வாழ்வியலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
சஜித்பிரேமதாசா நோர்வே தூதுவர் சந்திப்பு
சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு .நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் அவ்வேளை சஜித் பிரேமதாசா அணியினர் நடத்த உள்ள நகர்வுகளை தொடர்பில் நோர்வே கேட்டு அறிந்து கொண்டனர் .
ஸ்ரீலங்காவில் யார் ஆட்சியில் நிலை பெறவேண்டும் என்பதை ,சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு எடுத்து காட்டுகிறது .,அரேபிய நாடுகள் முடிவை எடுக்கின்றன என்பதற்கு ,இந்த சந்திப்புக்கள் கட்டியம் இடுகின்றன .
ரணில் விக்கிரமசிங்காவுடன் முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெம் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளார் .
அவ்வாறன நிலையில் அவர் ஊடக பல்வேறு பட்ட விடயங்கள் நோர்வேக்கு தெரிய படுத்த பட்டிருக்கும் .
எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஹஸாவின் தேர்தல் நிலைய தடுக்க அல்லது ,மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை ,இதன் ஊடக நோர்வே நகர்த்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்,வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மோட்டார்சைக்கிள் டிப்பருடன் மோதியதில் காயமடைந்துள்ளார் .
வவுனியா நெடுக்குளம் பகுதி பொலிஸ் அதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிள் ,டிப்பருடன் மோதியதில் ,காயமடைந்துள்ளார் .
காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுயனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள்
இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள் சம்பவங்களினால் ,நாள்தோறும் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,பலர் காயமடைந்து வருகின்றனர் .
வீதி விதிமுறைகளை சாரதிகள் முறையாக பின்பற்ற தவறியாமையே ,இந்த பேரழிவிற்கான காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .
விழிப்புணர்வு அற்ற சமுதாயமாக இலங்கையில் புதிய சந்ததி காணப்படுவது கவலை தருகிறது .
ஐரோப்பிய நாடுகளில் ,வீதி ஒழுங்கு முறைகளும் ,வாகன ஓட்டிகள் விதி விதி முறை பின்பற்றல் காரணமாக ,விபத்துக்கள் தவிர்க்க படுகின்றன .
ஆனால் இலங்கையில் இவ்விதமான நிலை காணப்படவில்லை என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்
சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்
இந்தியா தமிழக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகர் ,இந்திரஜித் அப்பா தம்பி அழகிய குடும்பம் இவங்க தான் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகரான இந்திரஜித் பதுளை இலங்கையை சேர்ந்தவர் ,.
ஜீ தமிழ் தொலை காட்சியில் இந்திரஜித் பாடல் பாடுகிறார் ,சரிகமபா பாட்டு போட்டியில் ,போட்டியாளராக கலந்து சிறப்பாக அசத்தி கொண்டுள்ளார் .
மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்
அழகிய மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்தின் அப்பா, தம்பி ,இந்திரஜித் தொடர்பாக நெகிழ்ந்து பேசி உள்ளார்கள் .
இந்திரஜித்துக்கு மூன்று சகோதரர்கள் ,இந்திரஜித் அவர்கள் குடும்பத்தில் இரண்டாவது மகனாவார் .
வீட்டு சுமைகளை வேலைக்கு சென்று சுமந்தவராம் .அதானல் கல்வியை இடையில் விட்டு சுமையை சுமந்தவன் இன்று ,அப்பாவின் பாடல் ஆசையை நிறைவேற்ற களம் புகுந்துள்ளார் .
இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித்
இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித் ,மலையக மைந்தன் ,இந்திரஜித் சரிகமபாவில் பாடி கொண்டு இருக்கிறார் என மக்கள் இந்திரஜித்தை கொண்டாடிய வண்ணம் உள்ளனர் .
பாட பாடா இந்திரஜித்துக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் குவிகிறது .
சரிகமபாவில் முதல் பாடல் பாடி இந்திரஜித் அசத்தி உள்ளார் ,மதுர குரலின் மலையக மைந்தன் ,வலி கடந்து வந்த பாதையில் பயணிக்கும் இலங்கை பாடகன் இந்திரஜித் வெற்றி பெற நாமும் வாழ்த்துகிறோம் .
மலையகத்தை சேர்ந்த அசானி சரிகமபாவில் திறனோடு பாடி அசத்தி இருந்தார் .
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதல் அசானிக்கு உலகளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு கிட்டியது .
அவருக்கு பல லட்சக்கணக்கான பணமும் சரிகமபா நிகழ்வின் பின் திரட்ட பட்டது .
அவ்வாறான நிலையில் மீளவும் மலையக பாடகன் மதுர குரலவன் இந்திரஜித் ,சரிகமபாவில் பாடி அசத்த ஆரம்பித்துள்ளார் .
திறமைக்கு வறுமை ஒரு தடையாக உள்ளதை இந்த நிகழ்வுகளில் இருந்தும் ,இவர்கள் பேச்சில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது .
உள்ளத்தின் வழிகளை இறக்கி வைத்து மகிழ்வோடு சரிகமபா அரங்கை ,ஆட்கொள்ளும் மலையக மைந்தனுக்கு மீளவும் எமது .வாழ்த்துக்கள்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் பிரிந்து கிடந்தது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த குழுக்களை ஒன்றிணைத்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் காட்சியை உருவாக்கினர் .
அதற்கு தலைவராக இரா சம்பந்தன் அவர்களை தெரிவு செய்தனர் .
இவ்வாறு தமிழீழ விடுதலை புலிகளினால் தமிழ் அரசியல் தீர்வு தொடர்பாக நகர்ந்து செல்ல ஒருங்கிணைக்க பட்ட கட்சிகள் ,உடைக்கும் நகர்வில் சட்டத்தரணி சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார் .
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன்
இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு செய்ய பட்டதில் , இருந்து இன்றுவரை சிறிதரனுக்கு எதிராக சட்ட மிரட்டல் விடுத்த வண்ணம் உளளார் இந்த எடுபிடி எம் ஏ சுமந்திரன் .

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண போகிறோம் , இலங்கை அரசுடன் பேச போகிறோம் என கூறும் சுமந்திரன் ,இன்று அதே மக்களினால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர்கள் ஊடக தெரிவு செய்ய பட்ட தலைவரை ஏற்க மறுத்து ,சிறிதரனுக்கு சதிகளை அவிழ்த்து வருகிறார் .
கட்சிக தோழமைகளே மிரட்டும் சுமந்திரன்
என்னை எதிர்க்கும் யாவருக்கும் சிறை காத்துள்ளது என்பதே சுமந்திரன் நிலை பாடாக உள்ளது .
சுமந்திரன் சிறந்த இராய தந்திரி எனவும் ,தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார் என பல அரசியல் கட்சியின் தலைகள் ,வாடகை வாய்களும் பேசுகின்றன .
விரிவாக கூறுவது என்றால் அவருக்கு பரிந்து படுகின்றன .கடந்த தேர்தலில் ஆசனங்களை இழந்து வீடு செல்லும்நிலைக்கு சென்ற சுமந்திரன் ,சம்பந்தன் மயிரிழையில் தப்பினர் .
அதன் பிற இப்பொழுது ஆளும் அதிகார வர்க்கத்தை தன்னக்தே வைத்தும் ,சட்டத்தை வைத்தும் ,பல குளறு படிகளையும் ,சக கட்சி தோழர்களையும் திரைமறைவில் மிரட்டி வருகின்றாராம் .
இதனை வெளியில் கூற முடியாது பல தலைகள் சுழல்கின்றன .சட்டத்தை வைத்து மிரட்டுவதே சட்ட குற்றம் என்பது சட்டம் படித்த சட்ட மேதை சுமந்திரனுக்கு தெரியவில்லை போலும் .
பதவி ஆசைகளுக்கு அலைவதை விடுத்து ,மக்களின் விடியலுக்கு போராடுங்கள் மிஸ்ட்டர் சுமந்திரன் .
நீங்கள் தான் துணிந்தவர் ஆயிற்றே ..சிங்கம் சிங்கிளா தானே வரும் .வாருங்கள் நேரலையில் விவாதிப்போம் ,கேட்பதற்கு நிறைய உள்ளன .பலமுறை கேட்டு விட்டோம் .ஏன் ஊடகங்களை சந்திக்க பயந்து ஓடுகின்றீர்கள் .
ஏனைய கட்சி பிரமுகர்கள் அழைத்தால் ,திருப்பி அழைத்தும் பேசுகின்றனர் ,தமது தரப்பு நிலை பாட்டை தெரிவிக்கின்றனர் .
தனி நபர் சுமந்திரனுடன் எமக்கு எவ்வித கருத்து முரணும் இல்லை ,மக்கள் அரசியல் பொதுத்தளத்தில் பயணிக்கும் உங்கள் மீது எதிர் தரப்பால் இவ்விதமான குற்ற சாட்டு வைக்க படுகிறது .அதற்கு உங்கள் பதில் என்ன மிஸ்ட்டர் சுமந்திரன் ..?
–வன்னி மைந்தன் –
வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
பிரபல வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார் என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரபல வெளிநட்டு தமிழ் வியாபாரியின் கருத்துக்கள் பல்வேறு பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன .
தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத ,அரசியல் ரீதியாக வீழ்த்த பட்ட பின்னர் ,தற்போது அந்த வெற்றிடம் தொடர்ந்தும் நீள்கிறது .
தமிழீழ விடுதலை புலிகளிகள் அமைப்பானது ,ஒழுக்கம் கட்டுகோப்பான தனித்துவமானஅமைப்பாகும் . அவர்களது சிந்தனை வடிவத்திற்குள் ,இன்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகளினால் பயணிக்க முடியவில்லை .
வலையில் சிக்கிய முதலைகள்
இலங்கை வீசிய வலையில் பெரும் முதலைகள் சிக்கி விட்டன .,இவற்றுக்கு பிரதான தமிழ்கட்சிகளும் ஆகும் .
தமிழ் தேசிய அரசியல் பாதையை மறந்து ,தமது தனி குடும்ப நலன் வளர்ச்சியில் கட்சிகள் மிளிர்கின்றன.
தமிழ் தேசியம் என பேசும் இதே காட்சிகள் ,தேர்தல் வரும் பொழுது மட்டும் வீதி இறங்கும் நிலையும் ,அவ்வப்போது வெடி கொளுத்துவதுமாக உள்ளனர் என்கின்ற குற்ற சாட்டை கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .
மக்களின் அரசியல் அபிலாசைகளை மறந்து பயணிப்பதாகவும் ,இவர்களின் ஒன்று படுத்தும் ஒருமை கிழிந்ததினால் , இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ,தொழில் அதிபரும் ,சிறந்த வியாபாரியாக விளங்கி வரும் கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .
மிக முக்கிய தொழில் அதிபராக காணப்படுவதுடன், இலங்கையில் பாதிக்க பட மக்களுக்கும் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார் .
பதில் இன்றி தடுமாறும் காட்சிகள்
பிரபல வியாபரியின் இந்த அதிரடி நேர்கோட்டு சில கேள்விகளுக்கு பதில் இன்றி பல கட்சிகள் தடுமாறுகின்றன .
மேலும் இவர் தமிழ் கட்சி ஒன்றில் இணைந்து ,அரசியலில் போட்டியிட போவதாக தனது ஆசையை மறைமுகமாக வெளிக்காட்டியுள்ளார் .
புதிய இளம் அரசியல் வாதிகள் நுழைய வேண்டும் எனவும் ,அப்பொழுது தான் ,இலங்கை தமிழ் அரசியல் முதிர் நிலை பெறுவதுடன் ,புதிய பாதை நோக்கி பரிணமிக்க முடியும் என்கிறார் .
இவரது கருத்து என்னவோ நேரடி பார்வைக்கு சரியானதாக பார்வைக்கு காணப்டுகிறது .
ஆனால் களத்தில் ,நிலத்தில் மிக பெரும் முதலீட்டை செய்துள்ள இந்த தொழில் அதிபரின் சொத்துக்களுக்கு ,இலங்கை அரசு கெடுதல் விளைவிக்காது பார்த்து கொள்ள வேண்டும் .
அப்படி என்றால் இவரால் எப்படி தமிழ் தேசிய பரப்பில் ,நேரடியாக புலிகள் பாணியில் ,தேசிய அசரசியல் சமன் நிலை பெறும் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ஆக மொத்தம் குளம் கலக்க படுகிறது ,குட்டையில் மீன் பிடிக்க பட போகிறது .சிக்கப்பபோவது மீன் குஞ்சுகளா ,….? அல்லது ..எதுவென்ற கேள்வியோட களம் நகர்கிறது .
ஊது பத்திக்கும் ..ஊந்துகணைக்கும் …வாசம் இரண்டாம் ..என…நாம் பேசிய சில அரசியல் தலைகள் இப்படி ஆட்டுகின்றன .- வன்னி மைந்தன் –
மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு ,யாழ்ப்பாணம் புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (02) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் கடற்கரை பகுதியில் மனித எலும்பு
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.
அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,
அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் வியாழக்கிழமை(02) நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு உபுல் ரோஹன, வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நட்சத்திர ஹோட்டல்களுக்குக் கூட தொலைபேசி அழைப்பெடுத்து வலய பொது சுகாதார பரிசோதகர் போல் நடித்து பணம் கேட்கின்றனர்.
சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த முறைப்பாடுகள் ஏராளம். சமீபகாலமாக பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளன.
எனவே இது போன்ற தொலைபேசி அழைப்புக்கள் ஏதும் வந்தால் பணம் வழங்குவதை தவிர்த்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடவும்” என்றார்.
மாணவன் அடித்து மாணவன் பலி
மாணவன் அடித்து மாணவன் பலி
மாணவன் அடித்து மாணவன் பலி ,இந்த படுகொலை ,கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொரு மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (வயது 13) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் திடல் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், திங்கட்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ,மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் ,இந்த மாத இறுதிக்குள் மக்களுக்காண காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.,
கொட்டகலை பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.
ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.
கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.
வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்
அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.
எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணிக்ளுக்கான உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு .பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக
அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சம்பள நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான
வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதன்படி, நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் “அத தெரண” இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கத்திடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, தற்போதைக்கு குறித்த சம்பள உயர்வை வழங்க முடியாது என தெரிவித்தார்.
“ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையை மிக வேகமாக இழந்து வருகிறது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
செலுத்த முடியாத ஒன்றை விரும்பினால், சட்டரீதியான பிரச்சினை ஏற்படும். முன்மொழிவு முற்றிலும் நேர்மாறானது. வர்த்தமானி வந்திருப்பது தெரியும்.
எதிர்காலத்தில் என்ன செய்யாலம் என்று பார்ப்போம்” என்றார்.
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்
திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.
ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.
தேர்தல் நிகழ்த்த படவுள்ளதை அடுத்து தற்போது ,ஆளும் அரசு பொருட்களின் விலைகள் முதல் யாவும் குறைப்பு செய்து வருகிறது குறிப்பிட தக்கது .
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன் ,அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க
நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு ஆதரவளிப்பதே தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.
தாம் ரணிலின் தேவைக்காக கடைக்குப் போகவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் கடைக்குப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி அரசியல்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“71 இடதுசாரி அரசியல் கட்சியான திருமதி சிறிமாவோ அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, மக்கள் விடுதலை முன்னணி கலவரங்கள் செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது.
அன்று அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டுவர உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய
இராணுவம் கொண்டுவரப்பட்டபோது ஜே.ஆரை எதிர்த்து அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற திருமதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு உழைத்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்த வெற்றிக்காக உழைத்தார்கள்.
அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, நாட்டில் 71 கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.
அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி போடப் போகும் போது என்ன சொன்னார்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வெறும் வதந்தியைக் கதைத்தார்கள் .
மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்.
உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்டபோது, சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறின.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய ஒருவர் வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றோம். அப்போது, வெறும் வாய்ப் பேச்சு பேசும் அனைவரும் இதை ஏற்க அஞ்சினார்கள்.
அதற்குள், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து மக்களைக் கொன்று இந்த நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சித்தது.
மொட்டுக் கட்சியின் ஆதரவு
அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும் தான் இந்த நாட்டை நான் பொறுப்பேற்பேன், மொட்டுக் கட்சியின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார். நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவும் முடிவுகளை மட்டுமே எடுப்பேன் என்றார்.
அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது.
இதைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் நாங்கள் அல்ல. அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம்.
2022 மே மாதத்தின் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க
நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார்.
எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் கடைக்கு போகமாட்டேன்.
இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் போகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.
நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம்.
மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம். மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை கிழவன், கிழட்டு மைனா என்று அழைக்கிறார்கள்.
பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது
அடுத்ததாக, இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று திருமதி சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள்.
கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும் என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
கிழவர்கள் என்று சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம்
இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை
அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், அந்தந்த முகாம்களில் கிட்டத்தட்ட 1,600 வீரர்களை தயார் நிலையில் வைக்க முப்படைகளின் தலைவர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
நடைபெறலாம் என்பதாலே இந்த பாதுகாப்பு பலமாக இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வானில் ஒருவர் கடத்தல்
வானில் ஒருவர் கடத்தல்
வானில் ஒருவர் கடத்தல் ,நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய ஷொருகம பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை
அப்பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வேன் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக 2 தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) – 0718 591 260
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி – 0773 528 325
மக்கள் காணியை அபகரித்த பிக்கு
காணியை அபகரித்த பிக்கு
மக்கள் காணியை அபகரித்த பிக்கு ,திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்
விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு
சிறுபோக நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் காணியை அபகரித்த பிக்கு
1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும்
விவசாயக் காணிகள்
திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்பு த் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வர்த்தமானி அறிவித்தல்
2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா
கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
























































