நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Featured

Loading...
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Featured

Loading...