Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா ,உங்கள் வாக்கை தீர்மானிப்பதற்குரிய சகல உரிமையும் தமிழனுக்கு உண்டு..
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றாக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்..
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள்.
எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழரின் கோரிக்கைகளுக்கு மன சுத்தியுடன் செவி சாய்க்க மாட்டார்கள் என்பது வரலாறு..
ஆனால் இந்த தேர்தலானது தமிழர்களின் வாக்கை மட்டுமே நம்பி இருப்பதால் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று யோசித்தேன்..
அனுராவிடன் கதைக்கும்போது இந்திமா மூலம் அவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்..
சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் அவர் அழைத்து வர சொன்னதால் கண்டியிலிருந்து கொழும்பு வந்து சென்று கதைத்தேன்..
அவர் என்னை அவர் கட்சியில் சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்..
ஒரு தமிழனாக நான் மாட்டேன் என்று சொன்னேன்..
ஆனால் அவரை ஆதரிப்பதற்கு ஒரு மக்களை அணுகக்கூடிய ஜனாதிபதியாக நான் கருதியே அவரிடம் சென்றேன்..
ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளின் விரிசலை அவர் மேலும் மேலும் வலுப்படுத்தினாரே ஒழிய இன ஒற்றுமையை அவர் அந்த மேடையில் வலுப்படுத்தவில்லை..
முஸ்லிம் அரசியல்வாதிகள் நான் மேடையில் இருப்பதை விரும்பவில்லை..
அவர் அதை கையாண்ட பக்குவம் ஒரு முதிர்ச்சியற்ற ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்டியது..
நான் மேடையில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் சொன்னேன் ஒரு தமிழனை நீங்கள் இவ்வாறு நடத்துவது உங்களுக்கு தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை இல்லாமல் பண்ணும். அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம திரும்பவும் சொல்லவும் என்று..
எனக்கு தன்னுடைய காரில் இருக்குமாறும் தான் வந்து கதைப்பதாகவும் சொல்லப்பட்டது..
அவர் காரில் ஏறி இருப்பதற்கு தமிழன் முப்பது வருடம் தன் உயிரை மாய்த்து ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தவில்லை..
அவ்வாறு நான் ஏறி இருந்திருந்தால் சில வேளைகளில் பொதுமக்கள் நான் ஏதோ டீல் கதைப்பதாக நினைத்திருப்பார்கள்..
இதனால்தான் எனது தொலைபேசிகள் எப்போதுமே ரெக்கார்ட்டில் இருக்கும்..
சுயநலவாதிகள் எனக்கு எதிராக திரும்புகின்ற போது நான் எப்போதுமே அவர் ரெக்கார்டிங் களை அவர்களுக்கு காட்டுவது வழக்கம்..
சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் கதைத்ததை நான் பொதுமக்களுக்கு காட்டுவது வழக்கம்..
மைந்தன் சிவா எனப்படுகின்ற மிகவும் ஒரு அடி முட்டாள் என்னைப் பற்றி எழுதிய பின்பு தான் அவர்கள் முஸ்லிம்களூடாக அதை பரப்பப்பட்ட போது
பாராளுமன்ற உறுப்பினர் திஸஸ அத்தநாயக்க விடம் மற்றும் ராதாகிருஷ்ணன் எம்பி இரு வருடமும் சொல்லிவிட்டு தான் நான் அந்த ரெக்கார்டிங் வெளியில் பொது மக்களுக்காக விட்டேன்..
தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை அடக்கி வைக்கும் போது எனது சுயமரியாதையை இழந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு நான் ஒருபோதும் உதவ முடியாது..
இதிலிருந்து சஜித் பிரேமதாச, தான் பக்குவம் அற்றவர் அல்லது அவரின் பின்னால் இருப்பவர்கள் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி
பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறவே முயற்சிக்கிறார்களே அன்றி அவரை ஜனாதிபதியாக மாற்றிப் பார்க்க எந்த ஒரு முயற்சியை எடுக்கவில்லை.. இவை முக்கியமாக முஸ்லிம் எம்பி களுக்கானது..
இதிலிருந்து சஜித் பிரேமதாஸ் அவர்களின் அத்தியாயம் முடிக்கப்படுகிறது..
அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்குரிய முக்கியமான காரணம் உமா சந்திர பிரகாஷ் எனப்படுகின்ற முட்டாள் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கிறது..
நான் எனது தொலைபேசிகள் அனைத்தையுமே முடிவுறுத்தி விட்டேன்…
இனிமேல் சஜித் பிரேமதாச அத்தியாயம் விடைபெறுகிறது..
ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழு தமிழ் எம்பிக்களும் டீல் அடித்து தன்னுடன் இருப்பதால் தமிழ் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து தமிழர்களின்
பிரதிநிதியாக இதுவரை காலமும் எமது பொதுமக்களை ஏமாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் வெல்லலாம் என நினைக்கிறார்கள்..
முக்கியமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னுடைய நம்பிக்கை வலயத்தில் இருந்து நான் இழந்ததுக்கு காரணம் எனது முன்னாள் சட்டவாளர் சிலஸ்டின் அவர்கள் மட்டுமே..
அவர்கள் அமைச்சரின் ஏகப்பிரதிநிதியாக எனது மற்றுமொரு சட்டவாளர் அன்டன் புனித நாயகன் அவர்களுடன் சேர்ந்து என்னை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் ஆளாக காட்டுவதற்கு திட்டமிட்ட ரீதியில் ஆஸ்திரேலியாவில்
வசிக்கின்ற எனக்கு சார்பாக உதவி செய்து கொண்டிருந்து சுமந்திரனின் அடியாளான பாலா விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து என்னை இபிடிபி ஆக காட்டி தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்காக செய்த முயற்சிகள்.
அதுமட்டுமல்ல ஏழாம் திகதி நான் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது பொதுமக்களை சந்திக்க விடாமல் அண்டன் புனித நாயகம் அவர்கள் தனது காரில் ஏற்றி அங்கும் இங்குமாக அலைத்து திட்டமிட்ட ரீதியில் மக்களை
என்மேல் கோபப்பட செய்து மறுபடியும் புதுமைதானத்தில் கொண்டே இறக்கி குழப்பம் செய்தது பாலா விக்னேஸ்வரனுடனும் அண்டன் புனித நாயகத்துடனும் எனது தொடர்புகளை நிறுத்திக் கொண்டதற்குரிய காரணம்..
இவர்கள் எனக்கு உதவுவது போன்று திட்டமிட்ட ரீதியில் என்னை எனது மக்கள் ஆதரவை குறைப்பதற்கு முயன்ற போது எல்லாம் அறிந்து கொண்ட நான் அமைதியாக இருந்தேன்…
மேலும் அஜித் எனப்படும் சாவகச்சேரியை சேர்ந்த டக்ளஸ் அவர்களின் கையாள் திட்டமிட்ட ரீதியில் என்னை வளைத்து போட முயன்றதும் அவர்களுடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்..
அது தவிர தம்பிராசா எனப்படுகின்ற எனக்கு யார் என்றே தெரியாத ஒருவர் என்னை உரிமை கூறுகின்ற போது நான் அவரிடமிருந்தும் தொடர்புகளை எப்போதோ அறுத்து கொண்டேன்..
இராமநாதன் அர்ச்சுனா எனப்படுகின்ற வைத்தியரை அரசியலால் கொலை செய்ய நடந்த சதிகள் இவை மட்டுமல்ல இதற்கு மேலும் மேலும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது..
எனக்கு ஒன்று ஒரு நம்பிக்கையான நட்பு வட்டம் சாவகச்சேரியில் இருக்கிறது..
அவர்கள் தான் என்னை சாவகச்சேரியில் தூக்கி வைத்து சந்தோசம் கொண்டார்கள்..
நான் அவர்களுடன் மீண்டும் போய் இணையும் வரை தயவுசெய்து எனது சாவகச்சேரி நட்பு வட்டம் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
இப்போது அனுராவிக்கோ சஜித்துக்கோ ரணிலுக்கோ என் சார்பில் எந்த ஆதரவும் கொடுப்பதற்கு தயாராக இல்லை..
புது வேட்பாளர் பற்றிய மக்களின் கருத்து அவர்களுடைய சுய சிந்தனை சரியாக இருந்தால் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..
ஆனால் மீண்டும் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன்…
அனுரா அவர்கள் ஜனாதிபதியானால் ரணில் அவர்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்க போவதில்லை..
அனுரா அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது இராணுவத்தால் கொல்லப்படுவார்.. அப்போது பொதுமக்கள் பாதையில் இறங்கி இந்த நாடு மீண்டும் ஒரு 1987 போன்ற பட்டலாந்து படுகொலையை சந்திக்கும்..
அதற்குரிய அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் ரணில் அவர்களுக்கு தாராளமாக உண்டு..
இராணுவ ஆட்சி நிறுவப்படுமாயின் பல தலைவர்கள் கொலை செய்யப்படலாம்..
பொதுமக்கள் கொத்துக்கொத்தாக பாதைகளில் சுட்டுக் கொல்லப்படலாம்..
இவை எனது எதிர்கூறல் மட்டுமே..
சஜித் அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அதே பாதாள லோக அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
பாராளுமன்றம் ஒருபோதும் கலைக்கப்படாது..
மாகாண சபை தேர்தலோ உள்ளூர் ஆட்சி சபை தேர்தலோ மீண்டும் வைக்கப்படும்..
அனுரா அவர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள்..
பொதுமக்கள் கிளர்ச்சி எழும்.. மீண்டும் கொலைகள் நடந்தேறும்..
ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் அதே பாதாள கூட்டங்கள் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே தமிழ் மக்களுக்கான எதிரான கெடுபிடிகள் எப்போதுமே இருக்கும்..
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இராணுவமயமாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட்டு தமிழர்களின் இனம் அழிக்கப்படும்..
முஸ்லிம்கள் எப்போதுமே ரணிலுடன் இருப்பதால் தமிழர் எதிரான திட்டமிட்ட இனவெளிப்பு கட்டாயம் நடந்தேறும்..
கடந்த வருடத்தில் மட்டும் 80,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்..
வெளிநாட்டு உதவி உள்ள தமிழர்கள் வெளியேறுவார்கள்..
நான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுவேன்..
மீண்டும் அதே தமிழ் எம்பிக்கள் பொத்துவில் இருந்து புண்ணாக்கை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.
அதே புலம்பெயர் தமிழர் கூட்டங்கள் ஒரு சில புலிக்கொடிகளுடன் சீமானுடன் அங்கேயும் இங்கேயும் ஓடித் தெரியும்..
எல்லா கடைகளிலும் உண்டியல் வைக்கப்படும்…
மீண்டும் பொதுமக்கள் வெளிநாட்டில் குளிர்களில் உழைக்கின்ற பணங்கள் சேர்க்கப்பட்டு ஐநா சபை மற்றும் சர்வதேச உதவிகளுடன் தமிழருக்கு நீதி கிடைக்கும் என இன்னும் ஒரு இருபது வருடம் இழுத்தடிக்கப்படும்..
தமிழின விகிதாசாரம் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட்டு இன்னும் இருபது முப்பது வருடங்களில் தமிழினம் இலங்கையை விட்டு மொத்தமாக வெளியேறும்..
நானும் இதர பல தமிழர்களும் காணாமல் ஆக்கப்படுவோம்..
இவற்றிற்கு உள்ளே சிறந்த தெரிவு எதுவென்பது பொது வேட்பாளராக இருந்தால் அங்கேயும் பிரச்சனைகள் உள்ளது..
பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு ஐநாவிற்கு போய் நீதி கிடைத்த வரலாறு 2009 இல் இருந்து இன்றுவரை நடக்கவில்லை..
பொது வேட்பாளர் என சொல்லப்படுகின்ற கூட்டங்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நன்றாக பணங்களை சேர்த்து பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சாமத்திய வீடும் ரீச்சா மற்றும் ஐ பி சி போன்ற ஊடகங்களை நடத்தியும் மிச்சம் இருக்கின்ற தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்..
எமக்கென உள்ள தலைமை வெற்றிடமாக உள்ளது என சிவனடியான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்..
நல்லதொரு தலைமையை தேடுங்கள்..
அது நிச்சயமாக சுமந்திரனோ சாணக்கியனோ ஸ்ரீதரனனோ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அரிய நேந்திரனோ அல்ல..
இவைதான் எனக்குத் தெரிந்த அரசியல் அறிவு..
இவை பிழை என்றால் சரியான கருத்தை சொல்லுங்கள்..
ஒரு உண்மையான தலைமை தமிழனுக்கு கிடைக்கும் வரை யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ மிஞ்சப் போவதில்லை..
நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்..
நான் ஏற்கனவே வைத்திய சேவையில் இருந்து விலக்கப்பட்டு விட்டேன் திட்டமிட்ட ரீதியில்..
பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படுவேன்..
என்னை எதிர்த்த ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே நொந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரும்..
எனக்குத் தெரிந்தவை எல்லாம் தமிழனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே..
இருந்தேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அட்டூழியங்களை வெளியில் சொன்னேன்..
மன்னர் போய் சிந்துஜாவின் நீதியை கேட்டேன்..
அவை சம்பந்தமாக எனது தமிழ் உறவுகளாலேயே விமர்சிக்கப்பட்டேன்..
இப்போது கூட ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
உயிருக்கு பயந்து அல்ல.
உயிருக்கு பயந்தவன் முஸ்லிம் மேடையில் இருந்து இறங்கி நான் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் சஜித் பிரேமதாசவின் ஓடியோ லீக் பண்ணி இருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் இவ்வளவு விமர்சனங்களையும் தெளிவாக முகப்புத்தகத்தில் எழுத மாட்டான்..
என் தொழிலை இழந்து இருக்கிறேன்..
என் குடும்பத்தை என்னால் சென்று பார்க்க முடியாது..
எனது உடலையும் பேராதனை வைத்தியசாலைக்கு இப்போதோ எழுதிக் கொடுத்து விட்டேன் முதன் முதலாக..
எனது உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டு விட்டன..
என் உயிரை தமிழனுக்காக கொடுத்திருக்கிறேன்..
என் எதிரிகளுக்கு என் என்ன வேண்டும்??
தமிழனாக தமிழனுக்கு பிறந்தேன்..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழுக்காக எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும்..
உங்களால் முடிந்தால் இவற்றில் ஒன்றையேனும் செய்து பாருங்கள்..
குடும்பம் தொழில் உயிர் உடல்..
ஒன்றையேனும் செய்துவிட்டு பதிவிடுங்கள்..
இருந்தால் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு..
எப்படி வசதி?
தமிழனின் தாகம்…..
மக்களால் அதிகம் விரும்பப்பட்ட விரும்பப்படுகின்ற தமிழ் மெடிக்கல் அட்மின்..
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம்
வெற்றியாளன் நானே அனுரா முழக்கம் .இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றியாளன் என அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .
பலத்த போட்டிகளும் வேகமான பரப்புரைகளை இடம்பெற்று வரும் கால பகுதியில் இப்பொழுது இவ்விதம் முழங்கியுள்ளார் .
தோற்க போகிறவர்களும் நாங்களே வெற்றியாளர்கள் என்ற தேர்தல் கால பகுதியில் முழங்கி வருகின்றனர் ,
ஆகவே இந்த தேர்தல் இப்பொழுது சூடு பிடித்துள்ளது
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில் ,நாடு மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குண்டு ஒன்றை போட்டு இருக்கிறார்.
எமது நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமாக இருந்தால் , வரி அதிகரிப்பதற்காகவே நாட்டையும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பலப்படுத்த முடியுமென ரணில் விக்கிரமசிங்க தேர்தல் கூட்ட பரப்புரையின் போது தெரிவித்துள்ளார் .
சர்வதேச நாணய நிதியம் வரிக்குறைப்பை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடனை வழங்கி இருந்தது.
தேர்தலை மையமாக வைத்து நடவடிக்கையில் ரணில் அரசாட்சி ஈடுபட்டது அதனை அடுத்து தற்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் தேர்தல் முடிவுற்றதும் அதில் மிகவும் அதிகரிக்கப்பட்டு மக்களது தலைகள் மீது பொருளாதார சுமைகள் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்படும் என்பதாய் அவரது பேச்சாக அமைகின்றது.
கோடிகளை கொள்ளையடித்து தமது கோட்டைகளை பலப்படுத்தி சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற அரசியல் வாதிகளுக்கு மக்கள் தொடர்பாக அக்கறை இல்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்
பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.
முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம் ,மருத்துவ மாபியாக்கள் வலையமைப்பில் வீதி உலா வரும் விருந்தகமே செந்தூரா உனக்கொரு செந்தமிழின் பதில் மடல் .
கற்றவனாக காட்டி கொள்ளும் செத்தவனே உனக்கொரு செந்தமிழன் ஏற்ற மடல் .
கோமாளிகள் இந்த மன்றில் இப்படியும் உலவி கொண்டுள்ளார்கள் என்பதற்கு உந்தன் பித்தலாட்டங்கள் ஒரு உதாரணம் என்பதை இப்பொழுது கண்டு கொள் ,
உனக்காக எழுதப்பட்ட ஒரு மடல் காதில் போட்டு வாயைஆட்டு வா .
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா ,கதறி அழுத அர்ச்சுனா வீடியோ .
எதிரிகளினால் திட்டமிட்ட சூழ்ச்சியில் சிக்கி ,மன உளைச்சலை வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சுனா கீழ் நிலையான அஒருவராக அர்ச்சுனவை சித்தரிக்க வைக்கும் நகர்வில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் .
வலிந்து சீண்டி கோபத்தை ஏற்படுத்தி அதன் ஊடக அரசுன்னாவின் வாயில் வருகின்ற தவறான வார்த்தைங்களை வைத்து ,அவரது நற்பெயருக்குகலங்காத்தை ஏற்படுத்தும் வகையில் ,எதிரிகள் நடந்து கொண்டது இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
மக்களே பாருங்கள் நம்ம அர்ச்சுனா அழுகின்றார் ,வார்த்தைகள் இடறி வீழ்கின்றன ,ஏன் அவ்விதம் பேசினார் என்பது இதில் பாருங்கள் .
இப்படி தேர்தல் முடியும் வரை எதிரிகள் செய்ய போகிறார்கள் என்பதற்கான முன் மாதிரி நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஆனால் இது போன்ற வலைகளுக்குள் அர்ச்சுனா சிக்க மாட்டார் என நம்புகிறோம் .
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை ,யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் மதிப்புக்குரிய எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்களின் பரப்புரைகள் சகலவற்றையும் தோழி உமாச்சந்திர பிரகாஷ் மட்டுமே கவனித்துக் கொள்வார் அதில் எனது பங்கு சிற்றளவும் இருக்காது என நினைக்கிறேன்.
அவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் பிரதிநிதியாக விடும் கருத்துக்களை ஒரு நொடியில் தவிடு பொடியாக்க என்னிடம் தாராளமான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன.
அவர்களின் குப்பாடி அரசியல் சஜித் பிரேமதாஸ் அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதை தெளிவாக பிரேமதாஸ் அவர்களுடன் சொல்லி உள்ளேன்.
மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோழி உமா சந்திர பிரகாஷ் சாவகச்சேரி தொகுதியில் கேட்க இருப்பது கூட அவர் எனக்கு எதிராக பொழிகின்ற கருத்துகளுக்கு காரணமாகும்.
நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல..
ஒரு சாதாரண வைத்திய நிர்வாகியாக ஒரு பொது மக்களின் நலனுக்காக உண்மைகளை வெளி கொண்டு வந்த போது சகல அரசியலும் என் குரல்வலையை நெருக்கியது..
ஆதலால் அரசியலை கையில் எடுத்து அவற்றுக்கான பதிலை சொல்லலாம் என எண்ணியது தவிர எப்போதுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை..
இருந்திருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் எம்பிபிஎஸ், இரண்டு மாஸ்டர், மூன்று டிப்ளமோ எல் எல் பி எல் எல் எம் செய்ய வேண்டிய தேவை இராமநாதன் அர்ச்சுனா வுக்கு இருந்திருக்காது என்பதை உமா சந்திர பிரகாஷ் போன்ற அரசியல் வந்து உழைக்க நினைக்கின்ற தோழிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..
தங்களின் அறிவு மிகவும் கீழ்த்தரமானது என்பதை ஒட்டி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்..
தோழி நீங்கள் சாவகச்சேரியில் தானே வாக்கு கேட்க போகிறீர்கள் பாராளுமன்றத் தேர்தலில் அப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம்..
எனக்கும் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கும் இடையான உரையாடல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பொது வழியில் சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை..
தோழி உமா சந்திர பிரகாஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெறும் ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு குப்பாடி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது..
உமா சந்திர பிரகாஷின் இவ்வாறான சுயநலமான கருத்துக்கள்
எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும் எனது ஆதரவானது இந்த காட்சி சார்பாக அற்றதும் ஆகும்.
நான் நினைக்கிறேன்
தற்போதுள்ள நிலைமையில் தமிழர்களுக்கு உரிய அடிப்படை சுய நிர்ணய உரிமைகளை கதைத்து கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஒரே ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா அவர்களை அவர்களுடைய தந்தையாரின் வரலாறுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டது மட்டுமே ஆகும்..
நேற்றைய மேடையில் ஒரு தமிழன் இருக்கக் கூடாது என அவர்கள் கருத்தில் கொண்ட போது நானாகவே கீழ் இறங்கி சென்றேன்..
அவ்வாறு சென்றது எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களின் நீங்கள் வடக்கிற்கு செல்லுங்கள் நாங்கள் அங்கே எல்லாவற்றையும் செய்வோம் என கூறப்பட்ட காரணத்தில் ஆகும்..
நான் வடக்கிக்கு வருவது உமா சந்திர பிரகாஷின் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் நிலையை நிச்சயமாக சிதறி போக செய்யும் என்பதில் அவர் கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான்…
உமா சந்திர பிரகாஷ் தனது வாக்கு வங்கி என நினைத்துக் கொண்டிருக்கும் சாவகச்சேரி எனது இதயம்..
சாவடி சேரி வைத்தியசாலைக்காக தான் முதன் முதலில் எனது வேலையை திறந்து மக்களால் தடுக்கப்பட்ட ரீதியில் சுகாதார அமைச்சின் குழுக்கள் நான் விழுந்து கொழும்பு சென்றேன் கதைப்பதற்காக..
இப்போது கூட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பிக்கு காரணம் முறையற்ற முறையில் எனக்கு எதிராக செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு துணை போனதுக்கு மட்டுமே ஆகும்..
எனது சுயலாபத்திற்காக இவற்றையெல்லாம் செய்கிறேன் என சொல்பவர்கள் முடியுமானால் உங்கள் தொழிலை பணயம் வைத்து உங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக ஒரு நன்மையேனும் செய்வதற்கு முன் வாருங்கள்..
எனது மருத்துவ கனவு எனது மருத்துவ நிர்வாக கனவு எனது குடும்பம் எல்லாவற்றையும் அடகு வைத்து பொதுமக்களின் நலன் கருதி நான் ஒரு தனி ஆளாக இந்த போராட்டத்துக்கு நின்ற போது எனக்கு பின்னால் நின்றது சாவகச்சேரி மக்கள் மட்டுமே..
நான் மன்னார் பொது வைத்தியசாலை போனது ஒரு அரசியலாக இருந்திருந்தால் நான் சிறை சென்ற பின்பு வந்து தனி அரசியல் மன்னாரில் செய்திருப்பேன்..
ஒவ்வொரு மன நோயாளர்களும் அதன் பின்பு அந்த சிந்துஜாவின் குடும்பத்தை சிதைக்கின்ற போது நான் மௌனமாகி போனதற்கு காரணம் இதில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே..
ஒரு மனச் சுத்தியான எந்த நபரும் சிந்துஜாவின் குடும்பத்தின் பின்னால் நிற்கவில்லை..
எல்லாருக்கும் ஒரு தேவை இருந்தது..
கடைசியில் அன்பு தம்பி சுதன் மரியராஜையும் இழந்திருக்கிறோம்..
மருத்துவ குறைகேடுகளுக்கான எனது போராட்டம் கடைசியில் அரசியல் மயமாக்கப்பட்டு
இப்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வெற்றிகரமாக மழுங்கடிக்கப்பட்ட போதும் இன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியலுக்கு எமது மதிப்புமிகு எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம்
அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை ஒரு கருத்தில் கொண்ட ஒரு ஜனாதிபதி என்பது மட்டுமே ஆகும்…
எது எப்படியோ உமா சந்திர பிரகாஷ் போன்றவர்கள் தனி சுயநல அரசியல் செய்பவர்கள்..
நான் தமிழன் அரசியலை செய்பவன்..
நான் நிரந்தரமாக சிறைக்கு சென்றாலும் என்றொரு நாள் காணாமல் ஆக்கப்பட்டாலும் எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசியம் எனது கொள்கை மேதகு எனது தலைவன்..
எனது தமிழ் உறவுகளுக்காக நான் நாளை மரணித்தால் கூட ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு தமிழனுக்கு பிறந்தவன்.. முஸ்லிம் சிங்கள சமுதாயங்களை சகோதரர்களாக நினைத்து வாழ்ந்தவன்..
என் இறுதி மூச்சுக்காற்று வரை என் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதவன்..
டீல் என்று நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுக்கு ஒரு வார்த்தையாக போனாலும் எந்த சுயநலமும் இல்லாமல் தமிழனுக்காக வாழத் துடித்தவனின் ஒவ்வொரு ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள் ஆகவே நான் பார்க்கிறேன்.
உங்களால் முடிந்தால் நான் இன்று வரை செய்தவற்றை தனியாக செய்து பாருங்கள்..
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா , என முகநூலில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம்
20 000ரூபா இலவசம் சஜித் அறிவிப்பு
சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம் ,நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு
உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும, மற்றும்
கெமிதிரிய ஆகிய வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலை திட்டமொன்றை முன்னெடுப்போம். உணவுத் தேவை, உணவு தேவை அல்லாத வேறு தேவைகள்
, சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய
வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பதினாறாவது மக்கள் வெற்றி கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று(26) முற்பகல் கந்தளாய், சேருவில
நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கை
திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து
நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்ற போது 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொடுத்து, வீடுகளிலேயே
அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும், வளமாகவும் முன்னெடுப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வறுமை என்பது சுமையல்ல நாட்டை கட்டி எழுப்புகின்ற பின்புலத்தை உருவாக்குகின்றவர் என்ற அடிப்படையில் இந்த நிவாரணங்களை வழங்குகின்றோம். பொய் இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷில் கிராமிய வங்கி கருத்திட்டத்தின் ஊடாகவும் உலகின் பல நாடுகளிலும் குறுகிய காலத்துக்குள் வறுமைப் பிடியிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் உண்டு. இதற்காக அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் குறித்த நபர்களின் அர்ப்பணிப்பு என்பன தேவை. நாடு
வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிவாரணங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே வழங்குவதால் அதை மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையுன்றை 5000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு,
இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம். விவசாயிகளுக்கு, மீன்பிடியாளர்களுக்கு, சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து
வழங்குனர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொரோனா அச்சுறுத்தல் நாட்டின் வங்கரோத்து நிலை என அனைத்து விடயங்களினாலும் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரமற்ற உர விநியோகம், உரத் தட்டுப்பாடு, சேதன உர மோசடி என்பனவற்றினாலும், தமது தங்க
ஆபரணங்களையும் சொத்துக்களையும் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுடைய விவசாய கடனை நாங்கள் இரத்து செய்வோம்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் நட்புறவாளர்கள், நண்பர்கள், பினையின்றி கடனைப் பெற்றுக் கொண்டு அவற்றை மீள செலுத்தாமல் கடன்களை இரத்திச்செய்திருக்கின்றார்கள். வர்த்தகர்களின் கடன்களையும் இரத்துச் செய்து இருக்கின்றார்கள். இவ்வாறான வர்த்தகர்களின்
கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தாலும், இந்த வரிய எளிய விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
தனது நட்புறவாளர்களுக்காக சட்டத்தை மீறி இரத்து செய்து, கொடுக்கப்பட்ட இந்தக் கடன் தொகைகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்
கொண்டு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.
அத்தோடு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதோடு, பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரமான ஒப்பந்தங்களின் ஊடாக விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு கொள்ளையடித்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள்.
எனவே இந்த விவசாயிகளின் நெல்லுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தி, அவர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்வதோடு, நுகர்வோருக்கும் தகுந்த
விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளும் விதமாக விலைசூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

பலியான மனைவி கணவன் கைது
பலியான மனைவி கணவன் கைது
பலியான மனைவி கணவன் கைது ,குடும்ப தகராறு காரணமாக தனது ஆசை மனைவியை கணவன் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது.
இலங்கை எப்பாவல பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வந்த முறுகல் தகராறு காரணத்தை அடுத்து சீற்றமுற்ற கணவன் தனது மனைவியை அடித்து படுகொலை செய்துள்ளார்.
கணவன் தாக்குதில் 63 வயது உடைய மனைவி பரிதாபகரமாக பலியானார். அதனை அடுத்து இந்த படுகொலை செய்த 66 வயதுடைய கணவர் தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கணவர் மனைவி தற்பொழுது தமது இறுதி காலங்களில் ஒன்றாக வாழ்ந்து வந்த காலப்பகுதியில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்த படுகொலைய இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வயதான காலத்தில் உடல் சோர்வு காணப்படும் இவர்களினால் உளவியல் கேள்விக்கும் காணப்படுகின்றனர் காலப்பகுதியில் ஒருவருக்கு ஒருவர் இடையில் இவரோட கருத்து முதல் அதிகமாக காணப்படுகிறது.
கைது செய்யப்பட்ட கணவர் தற்போது விசேட விசாரணையின் பின்னர் தற்பொழுது கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் படுத்தப்பட்டுள்ளார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி ,கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை
வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.
குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி
ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியும் நெளுக்குளம் பொலிசிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிசிற்கு சென்று
நோயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை
பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை
பௌசிக்கு கடூழிய சிறைத் தண்டனை ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
ஏ. எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா
பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின்
சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் ஃபௌசி தனது வழக்கறிஞர் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்போது, 62 வருட அரசியல் அனுபவமுள்ள சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு செயற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எனினும் அவர் முதல் சந்தர்ப்பத்திலேயே இலஞ்சம் வாங்கிய குற்றத்தை
ஒப்புக்கொண்டதையும், தற்போது 86 வயதான முதியவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
ஏ. எச். எம்.பௌசியின் கைரேகைகளைப் பெறவும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா
தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா ,திருகோணமலை தேர்தல் மேடையில் சஜித் பிரேமதாசாவுடன் தேர்தல் மேடையில் ஒன்றாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் வீற்றிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கீழே உள்ள காணொளியில் இவற்றை பார்க்க
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .
விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .
அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .
இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .
அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .
அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .
அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 1000 முறைப்பாடுகள் ,ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

காதுகளால் வாகனம் இழுத்து சாதனை
காதுகளால் வாகனம் இழுத்து சாதனை
காதுகளால் வாகனம் இழுத்து சாதனை ,தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம் 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று (25) காலை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டார்.
இதேவேளை, தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மேற்கொள்ள முடியும் எனவும்,
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன
சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன ,மன்னர் மாவட்டட மருத்துவமனையில் ,மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சிந்துயா கணவர் தற்கொலை செய்துள்ளார் .
இவர் மருத்துவ மாபியாக்களினால் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்றம் பேசிக்கொள்கிறது .
மாமி ,மற்றும் சிசுவை விட்டு பிரித்து சென்ற மருத்துவ மாபியா கும்பல் ,இவரை மிரட்டி அச்சுறுத்தி அதன் பின்னர் படுகொலை செய்துள்ளதாவே நிகழ்வுகளை வைத்து நோக்க முடிகிறது என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
காணொளியில் மேலதிக முழுமையா விடயங்கள்
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்
தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்
தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல் ,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள் ,நாம் தமிழர் கட்சி உடைய சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக தற்பொழுது அர்ச்சுனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு எமது நாட்டில் எமது தமிழ் மக்கள் சிங்கள அரசு பயங்கரவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் உதயமானது நாம் தமிழர் கட்சியாகும்.
அந்த கட்சியினுடைய வருகையை அடுத்து தமிழகத்தில் புலி கொடி கட்டி பறந்தது. முப்படைகளை கட்டி ஆண்ட எங்கள் தலைவர் பிரபாகரனுடைய கொள்கைகளை எடுத்து சீமான் உலக பரப்பில் பரப்பினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய கோட்பாடுகள் கொள்கைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில் ,
அதனை தாங்கி பிடித்து தூக்கி பிடித்து விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் எவ்வாறு எழுச்சி இருந்ததோ அதை எழுச்சியை தக்க வைத்துக் கொண்டவர் சீமான்.
விடுதலை புலிகளுடைய ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது, அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் ,அந்த ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த கள காட்சிகள் போல,
சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் முழங்கியதே தமிழ் மக்கள் மத்தியில் அவர் கடவுளாக பார்க்க வைத்தது.
அவ்வாறான காலப் பகுதியில் 15 வருடங்கள் கழித்து தற்பொழுது இலங்கை ஈழ மண்ணில் சீமானாக அர்ச்சனா வெடித்து பறந்து இருக்கின்றார் .
அவ்வாறான அர்ச்சனாவை மக்கள் இரண்டாவது சீமானாகவே இன்று வரை பேசி வருகின்றனர்,ஏற்று கொண்டனர் .
அண்ணன் சீமான் மூத்தவராகவும் , தம்பி சீமான் அர்ச்சுனவாகவும் இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றார்.
இரண்டு பேரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் அவர்கள் எங்களுடைய விடுதலை நோக்கி பயணிக்கிறார்கள் ஆதலால் இந்த மண் ,மக்கள் ,விடுதலை மிக விரைவில் வெற்றி கொடி கட்டு என்பதாகவே.
சீமனோடு ஒன்றித்த பயணிக்க போவதாகவும் அவரை அவரை நான் அவர்கள் அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்பொழுது அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது அவருக்குள் ஏற்பட்ட ஒரு புரிதலாக பார்க்கின்றோம்.
விடுதலைக்காகவே சீமானும் போராடிக் கொண்டிருக்கின்றார் அந்த விடுதலைக்காகவே அர்ச்சனா ராமநாதன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இருவரும் இரு நாடுகளில் ஒரே கொள்கையோடு பயணிக்கிறார்கள் இதுதான் எங்களுடைய ஒற்றுமையை காண்பிக்கின்றது.
ஆம் என் தம்பி அர்ச்சனா மக்களுக்காக போராடுகிறான் அவர்கள் ஆதரவாக போராடுகிறான், அதனால் அவளுடன் நான் ஒன்றித்த பயணிப்பேன் .
என்பதுதான் அண்ணன் சீமான் உடைய நினைவாகவும் கொள்கையாகவும் இருக்கும் .
நாங்கள் முடிந்தால் அன்னான் சீமானுடன் பேசுவோம் இருவரும் ஒன்றித்த பயணிப்பதற்காக நாங்கள் கண்டிப்பாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம் என்பதை மீளவும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தடம் மாறாத திசையில் எங்களது இனமான விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்களும் ,அண்ணன் அர்ச்சுனா அவர்களும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் .
அவர் பின்னால் இந்த இரண்டு பேரை ஆதரிக்கின்ற இந்த ஈழ மக்களும் இந்த உலகத் தமிழர்களும் ஒன்றாக நிற்போம் என்பதை உறக்க இந்த அரங்கில் எடுத்துரைத்திருக்கின்றார் எங்களது அர்ச்சனா.
தடம் மாற பயணிப்போம் தடைகளை உடைத்தெறிந்து இனமானம் காப்போம் .இப்பொழுது எங்களோடு இரு சீமான்கள் .
ஈழ தாய் இப்பொழுது தான் கொஞ்சம் புன்னகை விடுகிறாள் .விதைகள் முளைக்கின்றன ,கிளைகள் வெடிக்கின்றன ,இலைகள் முளைக்கின்றன .இனமான காற்று இப்பொழுது புயலாக வீசுகிறது .
-வன்னி மைந்தன் –
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது









































