சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை ,சிந்துஜாவின் கணவர் அன்புள்ள தம்பி மரியராஜ் அவர்கள் காலமானதாக அறிய வருகின்றேன்.
இச்செய்து உண்மையோ பொய்யோ எனக்கு சரியாக தெரியவில்லை.
நெஞ்சம் கன கனக்கறது..


அரசியல் ஆட்டங்களால் ஒரு குழந்தையின் தாயையும் தந்தையையும் பலி கொடுத்துக் கொண்டே மன்னரர் சமூக அமைப்புகளும் இதர பல அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்..


வைத்தியசாலை தொடர்பாக சார்பாக இருந்து வழக்குகளை திசை திருப்பிக் கொண்டிருந்த சிவகரன் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊடக சந்திப்பிற்கு மரியராஜ் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது..


எது எப்படியோ..
ஒரு குழந்தையின் தாயையும் தந்தையும் கொலை செய்து சந்தோஷமடைந்திருக்கிறோம்..
மன்னார் வைத்தியசாலை விவகாரம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறே இழுத்தடிக்கப் படுகிறது.


வவுனியா வைத்தியசாலை விவாரத்திலும் இவ்வாறான ஒன்றை நடக்க விடாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட நிர்பந்திக்க வேண்டும்..
அன்புள்ள மரியராஜ் தம்பி மற்றும் தங்கை சிந்துஜா உங்கள் ஆன்மா இப்போது உங்கள் குழந்தையை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கும்..


நெஞ்சம் கனத்த படி எழுதுகிறேன்..
பிள்ளையை நான் எடுத்து வளர்க்கவும் தயாராக இருக்கிறேன்..
கர்த்தரே அந்தக் குழந்தையை ஆசீர்வதியும்..

பெண் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை ,ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு

 அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அரசியலுக்குள் வருகை தந்தது மிகப்பெரும் தவறு என கடந்த தினம் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி யோகி அவர்கள் எமக்கு தெரிவித்திருந்தார்.

 மருத்துவத்துறையில் அவர் கொடி கட்டி பறந்திருக்க வேண்டுமே தவிர அவர் அரசியலுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக அவர் தனது பதிவில் வெளியிட்டு இருந்தார்.

 அரசியலுக்கு வருவதற்கு இன்னொருவருக்கு தடைகளை விதிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு முற்படலாம் என்கின்ற கேள்வியை நாம் எழுப்பி நிற்கின்றோம்.

 கடந்த 15 வருடங்களாக மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வருவதாக கூறிக் கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம், மற்றும் ஏனைய விடுதலை புலிகளும் கட்டமைப்புகள், தமிழருக்கு இந்த 15 வருடங்களில் செய்தது என்ன என்கின்ற கேள்வியை எழுப்புகின்றோம்.

 அடித்தட்டு மக்களினுடைய அடக்குமுறைகள் வலிகள் வேதனைகள் துயரங்கள் துன்பங்களை புரிந்து கொள்ள முடியாது, தங்களது பெட்டிகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான புலிகளினுடைய காட்சிகள் ,அல்லது வியாபாரிகள் இவ்விதம் ஏன் பேசுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இப்பொழுது எழுந்துள்ளது.

 எதிர்க்கட்சி இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள்ளே அடிதடிகள் ரகளைகள் இடம் பெற்று வருகின்றன, உள் வீட்டு சண்டைகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.

 தனது பதவியே பறிபோய் விடுமோ என்கின்ற அச்சத்தில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற உருத்திர குமார் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறான தற்காலத்தில் தற்போது மக்களுக்கு இனிய விடியலுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற அர்ஜுன இராமநாதன் அரசியலுக்கு வந்தது தவறு என நாடு கடந்த அரசாங்கம் கூறிக் கொள்வது காமெடியாகவே பார்க்க முடிகிறது.

 அர்ச்சனாவை அரசியலுக்கு வருவது தவறு என மிரட்டுகின்ற இவரது மிரட்டல் நாடகங்களுக்கு ஒரு புற்றுப்புள்ளி வைக்கபடும் ,இந்த கோமாளி அரசியல்வாதிகளை மக்கள் பார்த்து .கொள்வார்கள்

வைத்தியர் அர்ஜுனா இராமநாதன் அவர்களே நீங்கள் எழுந்து நடவுங்கள் .

இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதாக நாங்கள் இப்பொழுது சொல்லிக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய பல விடையங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால்.

சிந்துஜாவின் கணவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

 சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.

 தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.

 கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

 மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி என மருத்துவர் அர்ச்சுனா நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவு பிவருமாறு ..

,என்னை கொல்வதற்குரிய ஒலிப்பதிவு கிளிநொச்சியில் இருந்து ஒரு நபரால் கதைக்கப்பட்டது என்னுடைய கைக்கு வந்துள்ளது..


வெகுவிரைவில் சம்பந்தப்பட்ட நபரின் விபரத்துடன் போலீஸ் கம்ப்ளைன்ட் ஒன்றை இட்ட பின்பு மக்களுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கிறேன்..


என்னை கொல்வதற்கு தன்னுடைய ஆட்களிடம் 25 கோடி வந்துள்ளது என காசு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்று அவர் கதைத்துள்ள ஆடியோ ஆதாரம் என்னுடைய கையில் உள்ளது.


பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்புலம் இருப்பதாக நான் அறிகிறேன் போலீசார் அதனை விசாரணையில் கொண்டு வருவார்கள் என நினைக்கின்றேன்..

என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .மக்கள் ஆதரவை பெற்ற அரசியல் வெள்ளை வேட்டிகளை ஓடவிட்டு கொண்டிருக்கும் ,வீரமகன் அர்ச்சுனாவை எவ்வாறு எனினும் இல்லாது அழிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கட்சிகள் ஈடுபட்டுள்ளதை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது .

இந்த தகவல் வெளியானதை அடுத்து மக்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்
Posted in இலங்கை செய்திகள்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர்

மனைவிக்கு ஆப்பு சுகுணன் வைத்தியர் ,வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கலான் ஆராய்ச்சியாளர் சுகுணன் குணசிங்கம் எப்படியான ஆள்? என்ன செய்யிறவர்?? என்று கேட்டுத் தெரிஞ்சு கொள்ளச் சொன்ன காரணத்தினால் திருமதி.பிரசாந்தி சுகுணனுக்கு அப்போது தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாணவன் ,அவரது தாய் ஆகியோரை டீச்சர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுதியது .

அதனை அடுத்து தற்போது கல்வி அமைச்சினால் மாற்றம் செய்ய பட்டுள்ளார் .மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

இதனை அடுத்து தற்போது அவசரமாக மாற்றம் எய்யப்பட்டுள்ளதுடன் ,கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தியுயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இருந்து மக்களை மிரட்டி அடக்கும் நோக்கில் இவர் ஈடுபட்டு வருகிறார் என்ற விடயம் , தற்போது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்க பட்டுள்ளது .

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு

பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .

புதிய தொழில் நிறுவங்களை உருவாக்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லாது அவர்களை இலக்கு வைத்தே வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அவர் தெரித்துள்ளார் .

கண்ணீரோடு அலைகின்ற பெண்களுக்கு அவர்களது கண்ணீரை துடைத்து எமது நாட்டில் வைத்தே சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அரசின் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த போதே இதனை தெரிவித்த்தார் .

இவரது இந்த பேச்சை கேட்ட மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதனை அடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர் .

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்
Posted in இலங்கை செய்திகள்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம்

அடிப்படைச் சம்பளத்தை 57 500 வரை அதிகரிப்போம் ,இதுவரை நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழ்மையினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டிருப்பதால் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள்.

மொத்த நாட்டு மக்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரவேசித்திருக்கிறது.

இதுவரை காலமும் அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு நஷ்டமானவர்களாகவும் சுமையானவர்களாகவும் இந்த அரசாங்கம் கருதி வந்தாலும், தற்பொழுது இந்த

அரசாங்கத்திற்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியமானவர்களாக மாறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் சந்தர்ப்பவாதமே ஆகும். தமது இடத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இனிப்பு பண்ட அரசியலை மேற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச சேவையால் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிட்ட இவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை வழங்காது. சொல்வதையே செய்கின்றது.

பொய்யான வாக்குறுதிகளுக்கு பதிலாக சரியான திட்டங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் யுகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அவை நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள விசேடமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயல்படுத்துவோம்.

அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17,800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 வரை அதிகரிப்போம்.

அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57,500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பத்தாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (23) பிற்பகல் வரகாபொல நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் போலவே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது காணப்படுகின்ற வரிக் கொள்கையினால் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கமே பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

தற்பொழுது அரச ஊழியர்களின் பெரும்பாலானவர்களின் சம்பளத்திற்கு அறவிடப்படுகின்ற வரி 6 – 36% வரையிலான உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் 24% வரை குறைக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 சிறந்த அரச சேவைக்காக பல சலுகைகள்.

அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்படுவதோடு மேலதிக வருமானங்கள் இல்லை. சம்பளத்திற்கான வரி அளவிடப்படுகின்ற போது அவர்களால் சிறந்த அரச சேவையை வழங்கக்கூடிய மனநிலை கிடைப்பதில்லை.

அதனால் நாம் இந்த சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக அரச சேவையை நவீன மயமாக்கி e-ஸ்ரீலங்கா, e-கவர்ன்மென்ட் வேலை திட்டங்களின் ஊடாக சிறந்த அரச நிர்வாகத்தையும்,

சிறந்த பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் பாதுகாப்பும் வழங்கப்படும். இவை வாக்குறுதிகள் அல்ல. நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நாட்டையும் அதிகாரத்தையும் கைப்பற்ற விரும்புகின்ற மத நம்பிக்கையற்றவர் மத உரிமைக்கும் அழுத்தம் விடுகின்றார்.

புத்தசாசன அமைச்சின் ஊடாக கிராமங்களிலும் சந்திகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றே இது நடந்து வருகிறது. இதே கணக்கடுப்பு ஏனைய இனங்களுக்கும் வரலாம். ஏனைய இனங்களில் மதஸ்தானங்களை கணக்கெடுக்கும் நிலை ஏற்படலாம். மதசார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கவே முயற்சிக்கின்றார்கள்.

இன்று பௌத்த தர்மத்திற்கே இவ்வாறான ஆணைகளை பிறப்பிக்கின்றனர். நாளை ஏனைய மதங்களுக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். மக்களின் மத உரிமையை இல்லாமல் செய்கின்ற முயற்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு, தனது தந்தை புத்த சாசன அமைச்சையும் ஏனைய மதங்களுக்கான தனித் தனி அமைச்சுக்களையும் உருவாக்கினார்.

இன்று தற்போதைய அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை பெற முற்படுகின்ற மதசார்பற்றவர்கள் மதங்களைப் பின்பற்றும் உரிமையை இல்லாத செய்ய முற்படுகின்றனர். இந்த வெட்கங்கெட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிப்பதாக தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு.

இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு மதச்சார்ப்பற்ற நிலையை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்
Posted in இலங்கை செய்திகள்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்

சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய் ,லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் ஒருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுவன் அடிக்கப்பட்டு கடிக்கப்பட்டு பல வகையான சித்திரவதைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளார்.

அதே சமயம் நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிய தாயார் பொலிஸாரினால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தினர். விசாரணைகளை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவால் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயார் ஒரு குழந்தையின் தாய் மாத்திரமல்லாது தற்போது கர்ப்பிணி தாயாரும் கூட. கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதோடு சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது

11 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ,தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

வேட்பாளர்களின் மாத வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம் ,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் மாத வருமானம் வெளியாகி உள்ளது.

இதில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் மாத வருமானம்
வேட்பாளர்களின் மாத வருமானம்

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
Posted in இலங்கை செய்திகள்

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி ,நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் பொக்காராவில் இருந்து கத்மண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனா ஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பயணிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில், பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து பஸ் அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது.

காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி

விஜயை வீழ்த்த நடக்கும் சதிகள் அடித்து நொறுக்கிய சீமானின் பதிலடி,தமிழீழ விடுதலைக்கு சீமான் போல இளையதளபதி விஜய் பேச ஆரம்பித்துள்ளார் .

அவரது கோடியில் யானை மற்றும் வாகை பூ உள்ளது ,இந்த பூவானது விடுதலை புலிகள் பயன்படுத்தியதாகும் .

அதனால் இப்பொழுது எழுந்துள்ள சர்ச்சை .காணொளியில் சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ள இந்த பேச்சை பாருங்கள் .

வீடியோ

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு

அரியநேத்திரனுக்கு சிறீதரன் ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை ,பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ,யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.

தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிஹாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம்

தலதாவின் முடிச்சால் தடுமாற்றம் ,இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள போதிலும் அது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இதனால் வெற்றிடமான பதவிக்கு தனது எம்.பி.யில் இருந்து ஒரு எம்.பி.யை நியமிப்பது சிக்கலாக மாறியுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் கூறுகிறார்.

இந்நிலையில், வெற்றிடமாக உள்ள எம்.பி பதவி குறித்து குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியவில்லை என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட விருப்புப் பட்டியலின் படி முன்னாள் எம்.பியான தலதா அத்துகோரளவுக்கு அடுத்தபடியாக கருணாரத்ன பரணவிதான உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு

அங்கஜன் துஷ்மந்த ரணிலுக்கு ஆதரவு,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி

துஷ்மந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களது ஆதரவினை வழங்கினர் .

கொழும்பு, ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளனர் .

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல்

உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது

தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார்.

அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .

சாரதி துஷ்மந்த மித்ரபால, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது