விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி,கொலண்ட் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் புங்கிடுதீவை சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .
இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது .

தனது வாகனத்தில் வீடு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பொழுது ,அல்கமார் ,ரவுண்ட போர்ட் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார் .
பலியானவர் ஒரு பெண் குழந்தையின் தந்தையான டியே மாஸ்டர் என அழைக்க படும் சஞ்சிஜீவ் அமிர்தராஜா என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
குறுகிய காலத்தில் மிக பெரும் சாதனைகளை படைத்து மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒருவராக சஞ்சிஜீவ் அமிர்தராஜா காண படுகின்றார் .
இசைதான் அவனது உலகம்,வாழ்வியலின் தத்துவத்தின்
தந்தை என மக்களால் அறியப்பட்டவர்,வாழ்க்கை
புனிதமானது.வாழ்ந்து காட்டுவதே…சிறப்பு என்று.. தினம்.. சொல்லு பவன்..
அவ்வாறான அற்புத திறமையான ஒருவனை எமது மண் இழந்து நிற்பதாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .
பல கனவுகளை சுமந்து ,இசையோடு பயணித்தவன் ,இன்று இளம் வயதில் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்துவிட்டான் .
இவர் கொலண்ட் நாட்டில் வசித்து வரும் பாவலர் புங்கையூர் ராஜாவின் அருமை புதல்வனாவார் .
நாடகம் , பாடல் ,கவிதை , என பல்வேறு பட்ட ,கலை பண்புகளை சுமந்து பயணிக்கும் படைப்பாளி புங்கையூர் ராஜா ஒருவர் ,தனது மகனை இழந்து கண்ணீரில் தவித்து வருகிறார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வேளை ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தினருடன் எதிரி இணையமாகிய நாமும் பங்கெடுத்து .கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர் .
- வன்னி மைந்தன் –
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை







