விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி,கொலண்ட் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் புங்கிடுதீவை சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .
இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது .

தனது வாகனத்தில் வீடு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பொழுது ,அல்கமார் ,ரவுண்ட போர்ட் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார் .
பலியானவர் ஒரு பெண் குழந்தையின் தந்தையான டியே மாஸ்டர் என அழைக்க படும் சஞ்சிஜீவ் அமிர்தராஜா என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
குறுகிய காலத்தில் மிக பெரும் சாதனைகளை படைத்து மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒருவராக சஞ்சிஜீவ் அமிர்தராஜா காண படுகின்றார் .
இசைதான் அவனது உலகம்,வாழ்வியலின் தத்துவத்தின்
தந்தை என மக்களால் அறியப்பட்டவர்,வாழ்க்கை
புனிதமானது.வாழ்ந்து காட்டுவதே…சிறப்பு என்று.. தினம்.. சொல்லு பவன்..
அவ்வாறான அற்புத திறமையான ஒருவனை எமது மண் இழந்து நிற்பதாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .
பல கனவுகளை சுமந்து ,இசையோடு பயணித்தவன் ,இன்று இளம் வயதில் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்துவிட்டான் .
இவர் கொலண்ட் நாட்டில் வசித்து வரும் பாவலர் புங்கையூர் ராஜாவின் அருமை புதல்வனாவார் .
நாடகம் , பாடல் ,கவிதை , என பல்வேறு பட்ட ,கலை பண்புகளை சுமந்து பயணிக்கும் படைப்பாளி புங்கையூர் ராஜா ஒருவர் ,தனது மகனை இழந்து கண்ணீரில் தவித்து வருகிறார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வேளை ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தினருடன் எதிரி இணையமாகிய நாமும் பங்கெடுத்து .கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர் .
- வன்னி மைந்தன் –
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்








