முல்லைத்தீவில் விபத்தில் நான்கு பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் விபத்தில் நான்கு பேர் பலி

முல்லைத்தீவில் விபத்தில் நான்கு பேர் பலி

முல்லைத்தீவில் விபத்தில் நான்கு பேர் பலி முல்லைத்தீவில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் பலி.

பரந்தன்-முல்லைத்தீவு பிரதான சாலையில் முரசுமோட்டைப் பகுதியில்

பரந்தன்-முல்லைத்தீவு பிரதான சாலையில் முரசுமோட்டைப் பகுதியில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில்

நான்கு பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

காரின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள்

காரின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். மற்றொரு கார் பயணி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

32, 34 மற்றும் 46 வயதுடையவர்கள் விசுவமடுவைச் சேர்ந்தவர்கள்.

பேருந்தின் ஓட்டுநரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்

முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்

முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம் தமிழர்கள் அழிக்க பட்ட முல்லைத்தீவு மாவட்டத்த்தில் உடைந்த பாலத்த புனரமைக்க இந்தியா இராணுவம் ஈடுபட்டுள்ளது .

விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை

விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரிந்த இதே இந்திய இராணுவத்தினர் தற்போது

இலங்கையில் தரை இறங்கியுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள்

வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள் இரண்டு புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார்

முல்லைத்தீவில் மர்மசடலம் திணறும் பொலிஸார் ,முல்லைத்தீவு பகுதியில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்ட சடலத்தை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று வியாழக்கிழமை (22) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம், என முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொண்ணூறு ஆயிரம் ஏக்கரில் மட்டும் குடி கொண்டுள்ளார்கள் எனவும் ,ஏனைய பகுதிகள் யாவும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்தார் .

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி ,சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் நிலை கொண்டுள்ளது .

இறுதி போர் முடிவடைந்ததை அடுத்து தமிழர் முதன்மையான பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இராணுவம் அகல கால் ஊன்றியுள்ளது குறிப்பிட தக்கது .

முல்லைத்தீவில் 67 விகாரைகள் எம்பி ரவிகரன் காட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 67 விகாரைகள் எம்பி ரவிகரன் காட்டம்

முல்லைத்தீவில் 67 விகாரைகள் எம்பி ரவிகரன் காட்டம்

இலங்கை முல்லைதீவில் 67 புத்தவிகாரைகள் அமைக்க பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் முல்லைதீவு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்த்துள்ளார் .

இறுதி யுத்தம் முடிவுற்ற கால பகுதியின் பின்னர் இந்த புத்த விகாரைகள் முல்லைதீவு பகுதியில் நிறுவ பட்டுள்ளதாக கடந்த தினம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் நேரலையில் பேசும் பொழுது ரவிகரன் தெரிவித்தார் .

தமிழர் பகுதிகளை பவுத்த தேசமாக மாற்றும் நடவடிக்கையில் சிங்கள இனவாத அரசு செயல்பட்டு வருவதாகவும் ,இதனை தமிழரால் தடுக்க முடியாத சூழல் இடம்பெறுவதாக கவலை வெளியிட்டார் .

அடக்கு முறைக்குள் தமிழர் தேசம் அமிழ்த்த பட்டு பேரினவாத சிந்தனை மேலோங்கி நிற்பதாக அவர் குற்றம் சுமத்தினார் .

இவை இலங்கை பவுத்த தேசம் என்பதையும் ,தமிழர்கள் பவுத்தர்களாக மாற வேண்டும் என்பதை காண்பிப்பதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Click here joint our Tiktok

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு ,பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக

இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான்,

புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ,ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று (21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு , கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதிபன் முன்னிலையில் சட்ட அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர்கள் முன்னிலையில் இந்த அகழ்வ பணி இடம்பெற்றது.

இதன்பொழுதே இந்த புதைகுழியில் இருந்து 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை விடுதலைப் புலிகள் உடைய சீருடைகள் அடங்கிய உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து மீட்கபட்ட அனைத்து போராளிகள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என தெரிய வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கழிந்து வருகின்ற பொழுதும் இலங்கை அரச ஆக்கிரமிப்பு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன .

தமிழ் மக்களை கொன்று புதைத்து தனது வெறியாட்டத்தை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினருக்கு இவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

இந்த புதைகுழியில் இருந்து மீட்கப்படுகின்ற சடலங்கள் உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் அரசுகள் தயாராகி வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

ராஜபக்ச ஆட்சியின் அங்கீகாரத்தில் ஆட்சியை நடத்தி வருகின்ற ரணில் விக்கிரமசிங்காவினால் இந்த புதைகுழிகள் உரிய விசாரணைகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

15 ஆண்டுகள் கழிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காது இழுத்தடித்து வரும் இலங்கை அரசாங்கத்தின் படுகொலைகள் ,என்று விசாரிக்கப்படுவது எப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ட்ர​க் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின்

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில்

கணவனை இழந்துவிட்ட நிலையில், தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா.

இவ்வாறான பிண்ணனியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் குறித்த வீட்டின் கூரையை பிரித்து நேற்று முன்தினம் (04) இரவு 11.00 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள் கைகளை கட்டிவிட்டு வீட்டில் கொள்ளையிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

மகளிர் சிறு சேமிப்பு குழுவின் தலைவியான குறித்த பெண்ணிடம் மக்கள் வழங்கிய பணம், பாடசாலை வகுப்பு தலைவியான மகள் பாடசாலை மாணவர்களிடம் பாடசாலையில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு சேமித்த பணம்,

வாழ்வாதாரத்துக்காக அவர்கள் நடாத்திவரும் சிறு கடையின் வியாபார பணம் என 90,000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையிடப்பட்டுள்ளது.

அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு

பவுனுக்கும் அதிகளவான நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்

இரவு 11.00 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த கொள்ளையர்கள் அதிகாலை 3.00 மணிக்கு பின்னரே வீட்டை விட்டு சென்றதாகவும், தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து

கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்

முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எம்மை பொலிசுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளனர் என அந்த தாய் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முல்லைத்தீவில் பெண் புலி உடல் மீட்ட பகுதி அகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் பெண் புலி உடல் மீட்ட பகுதி அகழ்வு

முல்லைத்தீவில் பெண் புலி உடல் மீட்ட பகுதி அகழ்வு

முல்லைதீவு பகுதியில் பெண் புலி ஒருவரது உடல் பாகங்கள் மீட்க பகுதியில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன .

நீதிபதி பிரதீபன் தலைமையில் தோண்ட படுகிறது .இந்த அகழ்வு பணியை பார்பதற்கு தமிழ் ,அரசியல் கட்சி பிரமுகர்களும் அங்கு பயணித்து இருந்தனர் .

முல்லைத்தீவில் கரும்புலி நாள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கரும்புலி நாள்

முல்லைத்தீவில் கரும்புலி நாள்

முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.

தூயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார்,புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.

தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.

குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்

செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.

அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.

குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.

இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.

அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.

No posts found.
பாலம் அருகில் மனித சடலம் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.

உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர்
உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,

அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது

குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்

இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்

முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

    முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை

    முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

    இதில் மிகவும் வறுமையான குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 15,857 குடும்பங்களுக்கு அரிசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

    இன்னும் எங்களுக்கு அது வந்து சேரவில்லை. அதேபோல் பால்மாவை பொறுத்தவரையில் 3,964 குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட

    குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தெரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. உண்மையில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியானவர்களாக

    இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டது 15,857. ஆகவே இதற்குள் அவர்களை தெரிவு செய்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

    வழங்கியிருக்கிறோம். அந்த தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு பொருட்கள் வந்து சேரும் பட்சத்தில் அதனை நாங்கள் அவர்களுக்கு உடனடியாக
    வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

      முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

      முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்

      வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது


      இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

      மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது