அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா


அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.


நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.


எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .


தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.


1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..


உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….


நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..


கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..


எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை

சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..


மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…


என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்,யாழ் மண்டைதீவை பிறப்பிடமாக கொண்ட திருநெல்வேலி பால்பண்ணை வீதியை திடமாக கொண்ட 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

This image has an empty alt attribute; its file name is LETTER-353x450.png
சீமான் அர்ச்சுனா மோதல்
Posted in இலங்கை செய்திகள்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல் ,போக்கு தீவிரமடைந்து வந்த நிலையில் அவை தற்போது முற்று பெற்றுள்ளதாக கடந்த தினம் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பேசுபொழுது சீமானுடன் தான் பேசியதாகவும் அதன் பின்னர் தனது நிலைப்பாடு எப்படி உள்ளது என்கின்ற விடயத்தை தெளிவாக அர்ச்சுனா இராமநாதன் விளக்கியுள்ளார் .

சீமானுடன் நட்புறவாக அரசியலை எடுத்து செல்ல உள்ளதாகவும் ,ஆனால் அவர் பயன் படுத்தும் புலிகளது சிந்தனைகள் ,எவற்றையுய்ம் தான் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

காலம் கணிக்கின்ற பொழுது அதனை அவ்விடத்தில் சிறந்த முறையில் செய்து கொள்வேன் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து தற்பொழுது சீமான் அர்ச்சுனா இடையில் நிலவிய முறுகல் மோதல் நிலை தவிர்க்க பட்டு மென் போக்குடன் கூடிய அரசியல் பயணம் பயணிப்பதாக அறிய முடிகிறது .

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
Posted in இலங்கை செய்திகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள் ,புலிகளின் குழு ஒன்று மாலைதீவில் தீவு ஒன்றை வங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இறுதி போரில் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கப்பல் மூலம் அனுப்புவதக தெரிவித்த மேற்படி குழுவினர் .அந்த ஆயுதங்களை வாங்காது அந்த பணத்தை கொள்ளையடித்து மாலைதீவில் தீவு வாங்கியுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது

அனைத்துலகம் என்கின்ற கட்டமைப்பில் இணைந்து பயணித்த குழு ஒன்று இணைந்து இந்த தீவினை வாங்கியுள்ளது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இதுவரை அந்த போரில் விழுப்புண் அடைந்த மக்களிற்கு தீரவ்வு எதனையும் காணாது ,போராளிகளுக்கு உதவிகள் ஏதும் வழங்காது ,மக்களிடம் பணத்தை பெற்று இந்த குழுவானது சுக போக வாழ்க்கை வாழ்வது அம்பலமாகியுள்ளது .

மாவீரர் வியாபாரிகளாக மாற்றம் பெற்றுள்ள இவர்கள் அவ்வேளை அங்கு சேமிக்க படும் பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்வில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .

இவ்வாறு கோடி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்வில் வாழும் இவர்களை ,இப்படி செல்வந்தராக மக்கள் வாழவைப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது எழுப்ப பட்டுள்ளது .

மக்களே விழிப்பாக பயணியுங்கள் .இது தொடர்பான விவாதம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது அதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .

எமது டிக் டாக்கில் இணைய இதில் அழுத்துங்கள்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும் ,வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை.

அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.

அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன்.
கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது. பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.

தற்பொழுது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.

இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம்.

பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றை செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகிறன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது.

அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும் போது இன்னும் சலுகைகளை வழங்கலாம்.

அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியை குறைத்தார்.

நாட்டின் வருமானம் குறைந்தது. 2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்துள்ளேன்.

அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவை குறைப்போம்.

உற்பத்தி அதிகரிக்கும் போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்பொழுது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வருகிறோம். வடக்கு விவசாயத்திற்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கிறோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கிறோம்.

டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.

9 மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார்.

அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம்.

தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள்.

தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்.

வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு.

அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

பின்னர் அவருக்கு எதிர்க்கட்சிக்கு வரலாம். அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும்.

நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்பொழுது அஞ்சவுமில்லை. சஜித் பற்றி பேசி பயனில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்க மாட்டார்.

அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர் ,கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவியை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
Posted in இலங்கை செய்திகள்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல் ,220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.

இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும் என்றும், இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இது இவர்களுடைய டீல். இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எஹலியகொட நகரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார். அவர் தோல்வி அடைந்தமையால் தன்னுடைய 40 ஆயிரம் பேர்களின் வேலைகளை இல்லாது செய்ததோடு பதவி உயர்வுகளையும் இல்லாது செய்து பழிவாங்கி இருக்கிறார்.

அந்த வேலைகளை செய்த பதில் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் குறித்து சிந்திப்பதில்லை. அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு நிர்கதியாகியுள்ள 40 ஆயிரம் பேரையும் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், unp ஜனாதிபதிக்கு அதைச் செய்ய முடியாது என்பதால், அவர்களை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும். என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு.

அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது. தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
Posted in இலங்கை செய்திகள்

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி

34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .

மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .

அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .


மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.

வீடியோ

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்,பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.

ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்

ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்

ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார் ,ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும்

தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் தீப்பந்தங்கள் தாங்கியவாறு முல்லைத்தீவு சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த கவனயீர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர்

ரணில் விக்கிரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமா‌ர் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
Posted in இலங்கை செய்திகள்

லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி

லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி

லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி ,பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு ,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக

வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க

வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட

வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.

இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம் தட்டுமுனை-வாகரை 04/08/2024 இடம்பெற்றது ,இந்த பொது கூட்டத்தில் குணரெட்ணம்,சிறிநேசன்நடராசா,பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .

இங்கு இடம்பெற்ற இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் முக்கியத்துவம் ஏன் அவருக்கு வகைக்கு செலுத்த வேணும் என்பது தொடர்பில் பேச பட்டுள்ளது .

காலத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவார்த்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .

மக்கள் நலன் சார்ந்து பயணிக்க வேண்டிய தேவை பொருந்திய காலகட்டமாக இது உள்ளது .

    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்

ஆகையால் பொதுவேட்பாளரை சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும் எங்கன்ர விடயம் எடுத்து விளக்க பட்டுள்ளது .

    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
    பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி கூட்டம் ஏறாவூர்-5 பகுதியில் இடம்பெற்றது .

சங்கு சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் அரியேந்திரனை ஆதரித்து இந்த பரப்புரை இடம்பெற்றது .

இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில்
ஜி.சிறிநேசன்,எம்.நடராசா,வசந்தராசா,குணரெட்ணம்,ஸ்ரீமகேசன்,காணுகிருஷ்ணா,சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கினார் .

பொது வேட்பாளர் ஏன் அவசியம் மக்கள் வாக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது போன்ற தெளிவூட்டல் கருதரங்காத இது காணப்பட்டடது .

ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டி இடம்பெற்று வரும் இந்த கால பகுதியில் ,பொது வேட்பாளர் முக்கியத்துவம் அதன் ,நிகழ்வுகள் ஏன் முக்கியம் என்பது தொடர்பாகவே இங்கு எடுத்து விளக்க பட்டுள்ளதாக நிகழ்வில் ; கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியேந்திரனுக்கு ஆதரவாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
தம்பிராசா பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

தம்பிராசா பிணையில் விடுதலை

தம்பிராசா பிணையில் விடுதலை

தம்பிராசா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .சாவகச்சேரி மருத்துவமனையில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனை தேடி சென்ற பொழுது ,ஏற்பட்ட விடயம் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் முகநூல் முடக்க பட்டு ,தொலைபேசி செயல் இழந்த நிலையில் ,அர்ச்சுனா இராமநாதனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் மக்கள் அறிய ஆவலாக இருந்தனர் .

அந்த காணபொழுது ஏற்பட்ட பதட்டம் காரணமாக அந்த சம்பவத்தை ரோந்து மருத்துவமனைக்கு சென்ற பொழுது ,அதனை நேரலை செய்து இருந்தார்.

அதன் காரணமாக கைது செய்ய பட்ட தம்பிராசா ஐயா அவர்களே இப்பொழுது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .

இந்த சம்பவத்தில் தம்பிராசாவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு காணப்பட்டதும் மக்கள் கருத்துக்கள் ஊடகங் காண முடிந்தது குறிப்பிட தக்கது .

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
Posted in இலங்கை செய்திகள்

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை

10 000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.

பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
Posted in இலங்கை செய்திகள்

நீர்வளப் பிள்ளையார் புது பாடல்

நீர்வளப் பிள்ளையார் புது பாடல்

நீர்வளப் பிள்ளையார் புது பாடல் ,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நம்முடைய பாவேந்தன் கலையகம் வலையொளியில் நீர்வளப் பிள்ளையார் எனும் விநாயகர் பக்திப் பாடலை வெளியீடு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறது பாவேந்தன் கலையகம்!!!

பாடல் தயாரிப்பு :
செ.ஜெகநான்

பாடல் வரிகள் :
கவிஞர்
பசுவூர்க்கோபி (நெதர்லாந்து)

இசை :
இளங்கோ செல்லப்பா

பாடியவர் :
பாவேந்தன் இளங்கோவன்

நன்றி!!!
நாதஸ்வரக் கலைஞர், வட இலுப்பை ஆனந்தன் அவர்கள், சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.சிறந்த எடிட்டிங் சிறப்பொடு இந்த பாடல் வெளியாகியுள்ளது விசேட அம்சமாக காணப்படுகிறது .

இப்பாடலை உருவாக்க உழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பாவேந்தன் கலையகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!!!

இப்பாடலைக் கேட்டு, அதைப் பகிர்ந்து உங்களின் பேராதரவைத் தாருங்கள்!!!

https://www.youtube.com/watch?v=6tS9iD01vUE
கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி
Posted in இலங்கை செய்திகள்

கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி

கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி

கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் சந்தித்தார் எம்பி ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச . குகதாசன் அவர்களை தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில், வியாழக்கிழமை (05) சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் நிலவரங்கள் பற்றியும், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடினர்.