Tag: மதுபான
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி கலால் கட்டளைச் சட்டத்தின்படி, கலால் வரி செலுத்துவதை தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், உற்பத்தி
உரிமத்தை அடுத்த வருடத்திற்கு நீடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 23 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கலால் வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்த நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று
நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் மதுபான உரிமம் தொடர்பான கலால் நிலுவையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, வெலிசர டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட், குருநாகல் ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மீகொட மெக்கல்லம் ப்ரூவரி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரி செலுத்தாததால் அந்த
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு தீர்ப்புகளுக்கு அமைய, அந்த நிறுவனங்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
தற்போது செயலிழந்துள்ள லுனுவில க்ளோ பிளெண்டர்ஸ், வயம்ப ஸ்பிரிட் கம்பனி மற்றும் பயாகல கூட்டுறவு டிஸ்டில்லரிஸ் ஆகிய நிறுவனங்களின்
உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், அதன்பின் அவற்றுக்கான வரி நிலுவையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதவிர வடமாகாணத்தின் வான்கானைவில் அமைந்துள்ள வலிகாமம் மதுபான தொழிற்சாலை தொடர்பான கலால் வரி நிலுவையை செலுத்தும்
வரை மதுபான உற்பத்தியை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்
மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்
மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முந்தைய நிர்வாகத்தில் மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுமந்திரன், குறிப்பாக நாடு முழுவதும் மதுபானசாலைகள் பெருகுவது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த நிறுவனங்களைத் திறக்க பரிந்துரை செய்வதற்கு பொறுப்பான நபர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“நாடு முழுவதும் மதுபானக் கடைகளில் ஒரு பரவலான பிரச்சினை உள்ளது, மேலும் இந்த உரிமங்களுக்கு எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் ஒப்புதல் அளித்தனர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளத் தகுதியானவர்கள்.
இது எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கால பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள் சுமந்திரன் தெரிவித்தார்.
மதுபான விற்பனை நிலையங்களின் அதிகரிப்பானது இளைய தலைமுறையினருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினையாகும் என சுமந்திரன் வலியுறுத்தினார்.
மதுபானக்கடைகளை விஸ்தரிப்பதற்கு இரகசியமாக உதவிய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆதாயத்திற்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை விற்று சிலர் இலாபம் ஈட்டியதாக தகவல் இருப்பதாக அவர் கூறினார்.
“இந்த நபர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களிடமிருந்து லாபம் பெறுவதற்காக அவர்கள் அனுமதிகளை விற்றதாக நாங்கள் செய்திகளைக் கேட்கிறோம்.”
குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அதிகப்படியான பலன்களைக் குறைப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும். பொருளாதார நெருக்கடியான நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய சலுகைகளை அனுபவிப்பது பொருத்தமற்றது,” என்று அவர் மேலும் கூறினார்.
தேவையற்ற பலன்களைக் குறைத்து, ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறி, சலுகைகளைக் குறைப்பதற்கான தனது கட்சியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அவரது கட்சியின் வேட்புமனுக்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இம்முறை புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பாக பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்..
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படும் என தற்போது பரவலாகப் பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கலால் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
மதுபானங்களின் விலையை குறைக்கும் நோக்கில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதுபான விலைகள் குறைக்கப்படும் என ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளியாகி வருவதாக கலால் திணைக்கள பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மதுபானங்கள் மீதான கலால் வரியை திருத்தியமைக்க கலால் திணைக்களம் அதன் தகுதியான அதிகாரமான நிதியமைச்சகத்திடம் இருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் பெறவில்லை, எனவே மதுபானங்களின் விலை குறைக்கப்படாது என்றார்.
எனவே மதுபானங்களின் விலை குறைப்பு குறித்த செய்திகள் பொய்யானதும், அடிப்படை ஆதாரமற்றதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கலால் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், விலைவாசி உயர்வினால் நாட்டில் மதுபான பாவனை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திணைக்களத்திற்கு ரூ.232 பில்லியன் புதிய வருடாந்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
2023 ஜனவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் மதுபான உற்பத்தி 650,000 லீற்றர் குறைந்துள்ளதால் இந்த எண்ணிக்கையை அடைவது கேள்விக்குறியாக உள்ளது என குணசிறி கூறினார்.
200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்
200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்
எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.
தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
மதுபான சாலைகளுக்கு பூட்டு
மதுபான சாலைகளுக்கு பூட்டு
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு
கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர்களின் புனித திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று மதுபான சாலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பணிப்பாளர் நாயகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதன்மூலம் மதுவற்ற பொங்கல் திருநாளை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்விரு மாவட்டங்களிலும் இயங்கும் மதுபான சாலைகளில் அதிகமான தோட்டப்புற இளைஞர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமது குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
மதுபானங்களில் விலை அதிகரிப்பு
மதுபானங்களில் விலை அதிகரிப்பு
DCSL தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 90 ரூபாவாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 50 ரூபாவாலும் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் வெட் வரி அதிகரிப்பிற்கு அமைவாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
மதுபானசாலைகளை திறக்க அனுமதி-குஷியில் குடி மகன்கள்
மதுபானசாலைகளை திறக்க அனுமதி-குஷியில் குடி மகன்கள்
அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே நாடுபூராகவும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாதென்றும் அரசாங்கத்திடமிருந்து ஏதோவொரு வகையில் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடுபூராகவுமுள்ள உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என்றார்.
கிராமங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை பலர் பருகுவதுடன், அது ஆராக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.










