வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்
Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்(Northern Province Veterinary Officer) அவர்களை புதிய அரசு விசாரணைக்கு உட்படுத்துமா? தண்டிக்குமா?

இறதுபோன/ இறந்து கொண்டிருக்கும் கால்நடைகளுக்கு நீதி கிடைக்குமா? கால்நடை தொழிலை விட்டுச்செல்கின்ற சென்ற பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

திரு வசீகரன் அவர்கள் வடமாகாண வைத்திய அதிகாரியாக வரமுன்னர் முக்கியமாக, “பால்மாடுகளின் உற்பத்தியும் , கால்நடை பண்ணைகளின்

உற்பத்தியும் மிகவும் அதிககமாக இருந்ததோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் மிகவும் அதிகமாக இருந்தது.

ஆனால், இன்றைய நிலை அப்படியா? பல வெளிநாட்டாளர்கள் பண்ணைகளை மூடியதோடு, பண்ணைவ்தொழிலை முயற்சிக்காமலும் விட்டுவிட்டனரே.?? யார் காரணம்? நாட்டுக்கு எப்படி வருவாய் வரும்? முதலீடுகள் வரும்? காரணகர்த்தாவாக நீங்களும் ஒருவன்…!!!!😡😡

“மிகச்சுருக்கமான காரணங்களாக:
1/ யாழ் மாவட்டங்களில் இருந்து பால்மாடுகளை வேண்டிவந்து
வன்னி, மற்றும் கிழக்குமாகாணங்களில் அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் கொழுத்தனர், அந்த பால்மாடுகள் பால்கறக்கவில்லை என்று விட்டு

உரிமையாளர் இறைச்சிக்கு விற்பனை செய்த்தனர்/ செய்கின்றனர். பல விடையங்களை …கூறிக்கொண்டே போகலாம்!


” வைத்தியர்கள்/ வேலை ஊழியர்கள் கூட்டு, வத்தியர் வேலைக்கு வரமாட்டார்…கேட்டால், கண்டி / நுவரேலியா என்று மற்ற ஊழியர்கள் பொய்சொல்வார்கள், எபயாவது இதைகண்டீர்ககளா? தண்டனை வழங்கியிருந்தீர்களா,?

2: நீங்கள் பாஸ் முறைமையை கொண்டுவந்தமையால் பல Veterinari doctor மாரை கோடீஸ்வரர்களாக்க விட்டமை உதாரணத்துக்கு, 25 பால்மாடுகளை வேண்டவேண்டும் என்றனிலையில் நெடுங்கேணி ( வவுனியா வடக்கு) எனக்கு

அவர் அனுமதி தரவில்லை; மாறாக , அவரே யாழில் இருந்து அடிமாடுகளை கொண்டுவந்து விற்றதோடு ( புதிய தோடுகளையும் அடித்தார். ( இவருக்கு அனுமதி எப்படி வந்தது)


மாடுகள் பால் கறக்கவில்லை! மாறாக மாஸ் மாசாக தின்றதும் சாணிபோட்டதுமே மிச்சம். சினைப்பிடிக்கவில்லை, இறப்புக்கள் அதிகம், உற்பத்தி இல்லை! அவரிடம் மாடுவேண்டுவதை நிறுத்தியதும் , அவர்

பண்ணை பக்கமே வருவதில்லை! நோயால், மாதம் இரண்டுமாடுகள் என்றவிகிதத்தில் செத்தொழிந்தன! ( வைதியர் எனக்கு மாடு விற்ற ஆதாரங்களை வசிகரன் ஐயாவுக்கு அனுப்பினேன். விசாரணைகள் நடந்தன,

பிழை நிரூபிக்கப்பட்டது.( என்னால்) ஆனால் குறித்த வைத்தியருக்கு பதவி உயர்வு கொடுத்து மாங்குளத்துக்கு மாறம் பெற்றார்!!!! ( மாறாக என்னை

வசிகரன் ஐயா மிரட்டினார். இதுக்கு யாரை தண்டிப்பது? திரு வசிகரன் அவர்களே முழுப்பொறுப்பும்!!! ( comments) பகுதியில் கேட்டால் தருகின்றேன்.

3 : வேலை நேரங்களில் , வைத்தியர்கள் , Private ராக வேலைசெய்வது, தனியார் கிளிக்க்குகளை அமைத்து சம்பாதிக்க அனுமதித்தது மற்றும், கோழிக்குஞ்சுகள், / தடுப்பு மருந்துகள் போன்ற இலவசங்களை விற்பது/

அரசிடம் இருந்து ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் புல்லுவெட்டும் இயந்த்கிரம் போன்றவெற்றை தங்களுக்கு இசைவானவர்களுக்கு விற்பது…..???

எத்தனை எத்தை ஊழல்கள் ஐயாசாமி…..!!! மற்றும், சினை ஊசி போடுபவர் போதிய அனுபவமில்லாதவராகவும் , ஆனால் கூடிய பணங்களை பண்ணையாளர்களிடம் இருந்து திரும்ப திரும்ப அறவிடுவது( அதாவது ஒரேமாட்டுக்கு பலதடைவை வந்து சினை ஊசி போடுவது…பணம் கறப்பது…..

இதில் இவர் கவனம் செலுத்துவதே இல்லை…..இதனால், சின்ன சின்ன குடும்பங்கள் வாழ்வாதார. வறியகுடும்பங்கள் பண்ணையாளர்கக் கடும் பாதிப்பு அடைந்தனர்/ அடைகின்றனர்……( கண்டு கொள்ளாமை)

4: (இது மிகவும் கேவலமானது) கால்நடைக்கு பிரச்சனை என்றால், தொலைபேசியில் சொல்லமுடியாது. நேரில் சென்று முறைப்பாடு கொடுக்கவேண்டும். வைத்தியர் வந்து போகும் வாகனச்செலவுகள் கொடுக்கவேண்டும்,

அவர் எழுதித்தரும் மருந்தை வேண்டிவிட்டு, “மீண்டும் முறைப்பாடு, மீண்டும் வாகன செலவு. …

இதன் காரணமாக உயிரினங்களின் இழப்பு பொருளாதார தனிப்பட்ட நட்டங்கள்( பண்ணையாளர்களுக்கு சலிப்புத்தன்மை/ வெறுப்புணர்வு ஆக்கி பல்லாயிரம் கால்நடைகளை அழிக்க காரணமாக இருந்தீர்கள்!!

( பண்ணையாளர்களின் காசில்த்கான் நீங்கள் வருவீர்கள் என்றால், ( ஓசிவாகனம், ஓசி சாரதி எதர்க்கு? ) ???

5: தீவனங்களின் கட்டுப்பாடற்றவிலை, !!! உற்பத்திப்பொருட்களான , பால், முட்டை, இறைச்சிகளை, பண்ணையாளன் கடும் நட்டத்துக்கு விற்று பண்ணையாளர்களை தவிக்கவிட்டமை!


” ஒரு நிர்னய விலைகளை உண்டு பண்ண முயற்ச்சிக்காமை!
( பால் நிர்வனங்களுக்கு விலை போனீர்களா???


ஏன் கண்களுக்கு தெரியவே இல்லையா? பாலின் விலையும் தண்ணீரின் விலையிலும் எவ்வளவு வேறுபாடு? ” ஏறக்குறைய ஒரே விலைதான்!!

6: வத்தியர்களில் புகார் கொடுத்தால், கண்டு கொள்ளாமை!

7 : (அதர்க்காக எல்லா வைத்தியர்களையும் குற்றம் சொல்லவில்லை) நல்லவரைப்பற்றியும் கீழே எழுதியுள்ளேன்.


( வடக்கு கிழக்கில் கால்நடை கடும் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறது……. முக்கியமாக வடமாகாணம்! காரணம் பொறுப்பற்ற அதிகாரி) பதவியாசை….( ஐயா போங்கோ)

“அதாவது, எல்லாம் எழுத வெளிக்கிட்டால். இக்கட்டுரையை நிறைவு செய்யமுடியாது. எட்டு ஆண்டுகளாக ஒருவர் எப்படி ஒரே இடத்தில் இருக்கமுடியும்? முதலில் அனுரா அரசு இவரின் வாகனத்தை பறிக்கவேண்டும்.

பல பண்ணையாளர்களின் அழிவுக்கு வித்திட்ட ஒரு விருட்சம் இவர்” இவரை முதலில் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். ” 56 வயதாகிவிட்டது தயவு செய்து போய்விடுங்கள் ஐயா! ஏழைகளை வாழவழி செய்யுங்கள் ஐயா!

குறிப்பு: இந்த எட்டு ஆண்டுகளில், கள்ளப்பாஸ் எடுத்து விற்ற / விக்கின்ற எந்த வைத்தியரை தண்டித்தீர்கள்? காரணம் உங்களுக்கும் பங்குண்டல்லவாய்யா? கண்டும் காணாமை ?


( வைத்தியர்களின் கண்ணுக்கும் பண்ணையாளர்கள் கண்ணுக்கு சுண்மாம்பும் ஏன் தடவுகின்றீர்கள் ஐயா?


ஆக மொத்தத்தில் ( கள்கர்களுக்கு வழிவிட்ட ஒருவராக இருக்கின்றீர்கள்!!
கோடிக்கணக்கில் கொட்டி உங்களால் மரண அடியை சந்தித்த ஒரு பண்ணையாளன்( நெடுங்கேணிப்பண்ணை+ Esu Dairy farm
தெ. சுரேஷ்
27/09/24


( இதை அதிகம் share செய்தால் பல பண்ணையாளர்களுக்கு வெளிச்சம் கிடைகமுகவரி
. ஜனாதிபதி செயலகம்
காலிமுகத் திடல்,
கொழும்பு 1,
முறைப்பாடு செய்யும் முகவரி

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு ,ஐக்கிய மக்கள் சக்தியின் வடமகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமா சந்திர பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வடமகாணத்தில் மிகப்பெரும் முக்கியமான பணிகளை இந்த கட்சியில் புரிந்ததை அடுத்து ,மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டிய பெருமையை சந்திரா பிரகாஷ் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து தற்பொழுது இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுகின்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க விடயமாக இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்தி அதனுடைய வெற்றிக்கு மிகப்பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இந்த பதவியை பெற்றுள்ளார்.

வெற்றி என்ற ஒன்றை இலக்கு வைத்து நகரும் இந்த வழியில் தற்பொழுது வட மாகாணத்தின் புதிய அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு அதற்கான ஆவணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியினுடைய வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கட்சியை சரியான முறையில் வழிகாட்டி தமிழ் மக்களுக்கான வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில்,

இவர் திறம்பட செயலாற்றி வந்ததை அடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (20) திறக்கப்பட்டுள்ளது.

மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்

இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர்
திரு.ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.