Tag: துப்பாக்கிச்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்
செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை
துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை
இன்று (08) அதிகாலை பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விமானப்படை ரக்பி அணியில் இணைந்திருந்த விமானப்படை கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுக்கை – அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இலங்கை விமானப்படையின் வீரர் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Featured
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது















