துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு

மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க

முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் கடந்த 19ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்
Posted in உலக செய்திகள்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார்

திசாநாயக்க இந்தியா பற்றிய சில ஒட்டும் கேள்விகளை தீர்த்து வைத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, செப்டம்பரில் தீவு தேசத்தின் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் இருந்தார்.

அவரது ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP), 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஒரு வரலாற்று வெற்றியில்

பெற்றது. வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், திஸாநாயக்கவின் வெற்றிக்கு பதினைந்து நாட்களுக்குள் கொழும்புக்கு விஜயம் செய்தார்,

அரசியல் காவலர் மாற்றத்தின் பின்னர் தீவு நாட்டிற்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தெரிவு செய்ததன் மூலம், திஸாநாயக்கா கொழும்பில் புதுடில்லியுடன் வலுவான பங்காளித்துவத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான தீர்மானத்தையும்

அடையாளம் காட்டியுள்ளார். பாரம்பரியமாக இந்திய-எதிர்ப்பு ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியுடன் அவரது தொடர்பைப் பற்றி கவலைகள் உள்ளன, மேலும் இந்தியாவை நோக்கிய அவரது அணுகுமுறை பரஸ்பர

நலன்களின் அடிப்படையில் இருக்கும் என்று புதுதில்லிக்கு உறுதியளிக்க அவரது பயணம் அடையாளமாக முக்கியமானது. அவரது விஜயத்தின் போது, ​​இலங்கையின் நிதிச் சரிவின் போது பொருளாதார உதவிகளை வழங்குவதில்

இந்தியாவின் பங்கையும், இருதரப்புக் கடனை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் “எந்த வகையிலும்” அதன் பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது தேசத்தின்

உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார் மேலும் “இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி
Posted in இலங்கை செய்திகள்

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி ,எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான

தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார்.

இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு

சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின்

வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அநுரவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது.

அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார்.

அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார்.

அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார்.

எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார்.

செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார்.

அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த திசாநாயக்க? – இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார்.

தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட

பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து)

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் ,இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த தினம் இடம்பெற்ற வாக்களிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

 நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளஅனுரகுமார திசாநாயக்க வருகையை அடுத்து இலங்கையில் பாரியளவு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 சாதாரண ஆடையில் தோன்றிய அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .

இவரது வருகையை அடுத்து நாட்டில் பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ,லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காணாமல் ஆக்கப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அடித்தட்டு மக்களின் மனங்களை வென்ற அனுரகுமார திசாநாயக்க அந்த மக்களின் அன்புக்குரியவராக இறுதிவரை செயல்படுவாரா என்பதே தற்பொழுது மக்களுக்கு கேள்வி ஆகிறது.

 இவரது பதவியேற்று நிகழ்வு முடிவடைந்தது அடுத்து பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை எப்பொழுது நடத்துவார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதுடன், லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பதறி கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.