Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை
இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை
இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை ,முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட 01 ஆம் இலக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதுன் விதானகே இன்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில், மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த வழக்கில் ஆஜரானார்.
இந்தத் தடை உத்தரவு திலக்சிறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாணயக்காரவுக்கு எதிராக எந்தவொரு அவதூறான அறிக்கைகளை
வெளியிடுவதிலிருந்தோ அல்லது ஈடுபடுவதிலிருந்தோ தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வழக்கு ஒகஸ்ட் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு 310மில்லியன்
ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு 310மில்லியன்
ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு 310மில்லியன் ,ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 663 பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 310 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது
ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம் (OR) நிறுவிய நிதிக்கு பெறப்பட்ட ரூ. 311
2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களால்
மில்லியனில், 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 663
நபர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வகையான ஆதரவுகளின் கீழ் மொத்தம் ரூ. 310.2 மில்லியன்
வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 21 நிலவரப்படி மீதமுள்ள தொகை ரூ. 581,413.80 ஆகும்.
அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் காரணமாக 422 நபர்களுக்கு ரூ. 97.5 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.
காயமடைந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படும் 182 பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மேலும் ரூ. 98.4 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
கல்வி உதவியைப் பொறுத்தவரை, இடைநிலைப் பள்ளி கல்விக்காக 51 மாணவர்களுக்கு ரூ. 107.8 மில்லியன் வழங்கப்பட்டது, மேலும் ரூ. ஆறு நபர்களுக்கு மூன்றாம் நிலை கல்விக்காக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
கூடுதலாக, துயரத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு முதியவர்களுக்கு 2.4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் மற்றும் 2024 அக்டோபர் 14 அன்று நிறுவப்பட்ட பண வழங்கல் கொள்கையின் கீழ் தேவைகள் அடிப்படையிலான மதிப்பீட்டு செயல்முறையின்படி பணம் வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் (SC) உத்தரவின்படி
உச்ச நீதிமன்றத்தின் (SC) உத்தரவின்படி, SC (அடிப்படை உரிமைகள் [FR]) விண்ணப்ப எண் 195/2019 இல் 57வது பிரதிவாதியான இலங்கை வழக்கறிஞர்
சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு பேராயர் அலுவலக அதிகாரிகளுடன் அலுவலகம் ஒரு சந்திப்பை நடத்தியது.
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி
ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸகுட்டி ஆரச்சி இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
திஸகுட்டி ஆரச்சி
வந்தபோது, திஸகுட்டி ஆரச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தனர்.
T56துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு
T56துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு
T56துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு ,தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த
கல்கிசை நீதவான் நீதிமன்றம்
திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள்
இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார்.
ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில்,
துமிந்த திசாநாயக்க கைது
கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
துமிந்த திஷாநாயக்க விடுவிப்பு
நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை
நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை
நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை ,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவில் இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் தேசிய நிலநடுக்கம்
இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு தென்கிழக்கே சுமார்
இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இலங்கையில் அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் இருந்தபோதிலும், இலங்கை மக்கள் இது தொடர்பாக தேவையற்ற பயத்திற்கு ஆளாக வேண்டாம் என தீபானி வீரகோன் அறிவுறுத்தினார்.
தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முதியோர் கொடுப்பனவு நாளை முதல்
முதியோர் கொடுப்பனவு நாளை முதல்
முதியோர் கொடுப்பனவு நாளை முதல் ,ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின்
வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பயனாளிகள் நாளை முதல்
இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து உரிய தொகையைப் பெறலாம் என சபை தெரிவித்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் கைது ,கொஹுவல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது வீட்டில் போதை மாத்திரைக் களஞ்சியம் ஒன்றை பராமரித்து, நாடு முழுவதும்
விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் மருந்தக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரை
சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொரலஸ்கமுவ, பெல்லன்வில, ஜய மாவத்தைப் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் இந்தக் கான்ஸ்டபிளின் வீட்டில், 150 மி.கி. போதை மாத்திரைகள்
கொண்ட 21 பெட்டிகள் மற்றும் 300 மி.கி. போதை மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி என மொத்தம் 1,330,420 மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கொஹுவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இந்தக் கான்ஸ்டபிள்
விசாரணைகளில், 14 ஆண்டுகளாக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இந்தக் கான்ஸ்டபிள், மருந்தக உரிமையாளரால்
வழங்கப்பட்ட போதை மாத்திரைகளை தனது வீட்டில் களஞ்சியப்படுத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும், போதைப்பொருள் வைத்திருத்தல், கடத்தல், மற்றும் குற்றத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கான்ஸ்டபிளும் அவரது மனைவியும் 35 வயதுடையவர்கள், மருந்தக உரிமையாளர் 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசேட ரயில் சேவைகள்
விசேட ரயில் சேவைகள்
விசேட ரயில் சேவைகள் கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள்
வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ,கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு
எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை
எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள
இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதை
இது தொடர்பில் அவர் கருத்து வௌியிடுகையில், கண்டி நகரில் குறைந்தளவான மக்களே வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை
பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும்
காரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. மக்கள் பாதுகாப்பான முறையில் வீதியை கடக்க வேண்டியது அவசியம் என்பதோடு, மலர்
விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் எமது தீர்வு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை ,தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை
தொடங்குவோம் என்று ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு
கடந்த 2025 ஜூலை 22ஆம் திகதி போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக இன்று நியாயமான
பதில் கிடைக்கவில்லை எனில், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.
ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை
குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான தீர்வு காணப்படாவிட்டால் இந்த
வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு ,சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித
ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 22 ஆம்
திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யோஷித ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போது இந்த
தடயவியல் கணக்காய்வு அறிக்கை
வழக்கில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை ஆதாரமாக முன்வைத்ததோடு, கணக்காய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அடங்கிய 26 இறுவெட்டுகள் (CD), 8
USB, வன்தட்டு (Hard Disk), 1 மடிக்கணினி மற்றும் ஒரு CPU ஆகியவற்றை அணுகி ஆய்வு செய்ய அனுமதி கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு தாம் ஆட்சேபனைகளை தெரிவிக்க போவதில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த முறைப்பாடு செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச
சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி
டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை ,யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம்
உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி ,மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
ஜூலை 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி உட்பட
அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை – மாலைதீவு பரஸ்பர ஒத்துழைப்பை
மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு
மேலும், இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்யும் வர்த்தக மன்றத்தை சந்தித்து,
உரையாற்றவும் மற்றும் மாலைதீவில் வாழும் இலங்கையர்களைச் சந்திப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து ,பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு ,வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு
துப்பாக்கிச் சூடு
வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின்
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் ,கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ” நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் ஒரே மேடையில் முக்கியதிருடர்கள் ஒன்று கூடினர் .
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்
தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக
தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில்,
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு
மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்
மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் யாவரும் ஒன்று கூடி இருந்தமை குறிப்பிட தக்கது .
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ,திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட திடீர்
கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது ,காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது
திருமணச் சேவை
செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து
அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள
நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.
திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல்
தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த ஆசாமி
பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து,
அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்
நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது ,உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சட்டத்தின் முன் நிறுத்தியது “அத தெரண உகுஸ்ஸா”.
மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து
பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் அப்பாவி மக்கள்
ஆனால், நம் நாட்டில் அப்பாவி மக்கள் இன்னும் இந்த மோசடியால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது சோகமான விடயம்.
இதேபோன்று பொரளை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நிறுவனம் தொடர்பில் ஆராய,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனைப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் அந்த இடத்திற்குச் சென்றது.
நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற ஏற்கனவே ஒரு குழு அங்கு இருந்ததுடன், அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருப்பதை நாங்கள் அவதானித்தோம்.
இருப்பினும், நாங்கள் சந்தேகித்தபடி, நிறுவனத்தை நடத்துவதற்கு அங்கிருந்தவர்களிடம் எந்த உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது.
ஜா-எல பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரின் பெயரில் இடைநிறுத்தப்பட்ட உரிமத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.
போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பெரும் தொகையை அவர்கள் பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்த போலி நிறுவனத்தை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதுபோன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டத்தின் முன் நிறுத்த அத தெரண உகுஸ்ஸா மிகுந்த விழிப்புடன் உள்ளது.










































