Tag: களுத்துறை
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி ,இன்று காலை, மே 28, களுத்துறை மசூதி வீதியில் உள்ள வெட்டுமக்கடை பகுதியில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவல்துறை தகவல்படி
காவல்துறை தகவல்படி, காலை சுமார் 8:59 மணியளவில் பாதிக்கப்பட்டவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் காரில்
வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வழிமறிக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்
செல்வதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த தொழிலதிபர்
காயமடைந்த தொழிலதிபர் அவசர சிகிச்சைக்காக நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலையை விசாரிக்க மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது
களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது
களுத்துறையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக லாரி ஓட்டுநர் கைது களுத்துறை தெற்கு காவல்துறையினரால் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி அவர்களின் சீருடைகளைக் கிழித்ததாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி
காவல்துறையினரின் கூற்றுப்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளும்
ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர் பயாகலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாலைத் தடையில் நிறுத்தப்பட்டபோது
நாகொட சந்தியில் உள்ள சாலைத் தடையில் நிறுத்தப்பட்டபோது, சந்தேக நபர் கட்டுகுருந்த நோக்கி லாரியை ஓட்டிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பரிசோதனையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் சிகிச்சைக்காக நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு அதிகாரியின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு ,களுத்துறை கடல் கரையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மனித சடலத்தை மீட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும்
கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும் குறித்த சடலத்தை கண்ணுற்று அவசர காவல்துறை இலக்கத்திற்கு
தெரியப்படுத்தியதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனித சடலத்தை மீட்டுனர்.
இறந்தவர் ஏறத்தாழ 60 வயதுக்கு உள்ளிட்ட நபராக இருக்க கூடும் என கருதப்படுகிறது.
இவ்விதம் இறந்தவர் கருப்பு நிற காய்ச்சட்டை ,பெல்ட் ,மற்றும் வெள்ளை டீசேர்ட் என்பன அணிந்திருந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குற்ற பிரிவின் விசாரணைகளை ஆரம்பம்
இந்த மரண சம்பவம் தொடர்பாக தற்போது குற்ற பிரிவினர் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் நாள்தோறும் நீர்ஏரிகள் , பற்றை காடுகள், பாழடைந்த வீடுகள், மரங்கள் ஆறுகள், என்பனவற்றில் இவ்வாறு மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ,தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது படுகொலையா, தற்கொலையா, அல்லது விபத்து மரணமா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
கடல் கரையில் மீட்க பட்ட மனித சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் களுத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
கடல் நீரில் மூழ்கிய களுத்துறை ,வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா
விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு களுத்துறையில் ,களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 8 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டு கொலை
குறித்த நபர் தனது 3 பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Featured
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09)
ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ்
குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,
இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,
இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,
இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது
இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது
இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது
ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,
கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை
தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்
எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன
படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது

























