Tag: பொலிஸ் அதிகாரி
பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்
பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்
பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவரை
காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம்
கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு
இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை
கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கொம்பனித் தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் ,பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம்
ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,
மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில்
பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது
சிறைக் கதவு கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு
சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும்,
சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
சனத் நிஷந்தவுடன் இறந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பு வழங்க பட்டுள்ளதக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
இராயங்க அமைச்சருக்கு காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கே இந்த இழப்பீடு வழங்க பட்டுள்ளது .
இவர் இறந்த பின்னர் பொலிஸ் தலைமையாகத்தால் பதவி உயர்வு வழங்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு
அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்
தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
இலங்கை பொலிஸ் சார்யன் தர அதிகாரி ஒருவர் பொலனறு மாதூறு ஓயா ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் பயணித்த உழவு இயந்திரம் , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .
இதன் போது உழவு இயந்திரத்தில் நசியுண்டு அவர் பலியாகியுள்ளார் .
இவருடன் கூட பயணித்த இருவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ..
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இறந்த பொலிஸ் அதிகாரி சடலம் சுழியோடிகள் துணையுடன் மீட்க பட்டுள்ளது .
Featured
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
இலங்கை ஹொரண மில்லனிய பகுதி காவல்துறை ஓ ஐ சி ஒருவர் திடீர் இடமாற்றம் செய்ய பட்டுளளார் .
இவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலி நாடா ஒன்று ,சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ,இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது .
இலங்கை காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ,அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக ஒன்பதாயிரம் முறைப்பாடுகள் பாதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது .























