விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு ,நேற்று இரவு வெலிகந்த மற்றும் எல்பிட்டியா பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெலிகந்த பொலிஸ்

முதல் சம்பவம், மரடன்கடவலா–திரிக்கண்டமடு சாலையில் உள்ள 92வது கிலோமீட்டர் கல் அருகே வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குள் நிகழ்ந்தது.

மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்துடன் நேருக்கு நேர்

மோதியது. வெலிகந்த மற்றும் ரத்மாலையாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட, 31 மற்றும் 55 வயதுடைய மோட்டார் சைக்கிள்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருந்த பயணியும் வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இரண்டாவது விபத்து, அன்று இரவு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 54.9 கிலோமீட்டர் கல் அருகே நிகழ்ந்தது.

கொட்டாவாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சரக்குந்து, சிமெண்ட் ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்குந்துவின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுடைய அவர்களில் இருவர், நகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

வெலிகந்த விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் ஓட்டுநரும், அதிவேக நெடுஞ்சாலையில் மோதிய முன்னணி சரக்குந்து ஓட்டுநரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வெலிகந்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டாவது சம்பவம் குறித்து எல்பிட்டிய போலீசார் மற்றும் தெற்கு அதிவேக

நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
Posted in இலங்கை செய்திகள்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம் சம்பவங்கள் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.கண்ணுக்கு தெரியாமல் நடத்த படும் இன அழிப்பாக இது காணப்படுகிறது .Tamils ​​destroyed in road accidents

வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி யாகியும், காயமடைந்தும் வருகிறார்கள்.

இறுதி யுத்தம் முடிவிற்று 16 வருடங்கள் ஆகும் இவ்வேளையில், வீதி விபத்துகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி உள்ளது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை

இது இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை என்பதை காண்பிக்கிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறுவதும், விபத்துகளில் தமிழர்களே அதிகமாக பலியாகி வருகிற சம்பவம் ,மேற்படி ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இன வெறியுடன் அலையும் ஆட்சியாளர்களும் ,இராணுவ கட்டமைப்பும் தமிழர்களை வாழ விடாது அழிக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதையே மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகிறது.

எனவே தமிழ் மக்கள் இது தொடர்பாக விழித்தெழ வேண்டும் , உடன் இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் வாயிலாக ,பேச வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

அவ்வாறு இதை பேசு பொருளாக மாற்றினால் தொடர்ந்தும்பேசவேண்டும் அவ்வாறு பேச மறுத்தால் ,இவ்விதம் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.

வீதி விபத்துகளில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துகளில் மூவர் பலி

வீதி விபத்துகளில் மூவர் பலி


வீதி விபத்துகளில் மூவர் பலி ,நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவில்

அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ – மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி

திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற

துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.

துவிச்சக்கர வண்டி செலுத்துனர்

விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு – கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்

வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்

நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய – அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, கெப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்ற இருவரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்

பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஆணும் 38 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் பின்னர் கெப் வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

48 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிரானேகம, வட்டகல சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்

வீடியோ