போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்
Posted in இலங்கை செய்திகள்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை

இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள்

பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட

முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட

மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி

நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார்

சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றுமாறும், அதற்கான விசேட வேலைத்திட்டம்

முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .

இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .

இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வீதி விபத்தில் வாலிபர் பலி

பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .

அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .

இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.

உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.

கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்
Posted in இலங்கை செய்திகள்

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி, வெள்ளிக்கிழமை (08) மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம் யாழ் -மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.

தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை யானது.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிசார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பொலிசாருடன் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்

குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் லோர் மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

இலங்கை பிம்பர வைத்தியசாலைக்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ,ஒருவர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in Uncategorized

17 மோட்டர் சைக்கிளுடன் திருடன் சிக்கினான்

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 78

வயதுடைய நபரொருவர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய மேலும் பல மோட்டார்

சைக்கிள்களை சந்தேகநபர் திருடி பல்வேறு பிரதேச நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Home » மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை

மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (18) மாத்திரம் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள்

தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

திட்டமிடப்பட்டகுழுவினால் இந்த திருட்டுச் சம்பவங்கள்

முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தமது மோட்டார் சைக்கிளை

பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.