Tag: செம்மணி
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு
செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 39ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய அகழ்வில் அருகருகே
காணப்பட்ட இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் உள்ளிட்ட 13 எலும்பு கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அத்துடன், சில எலும்பு கூடுகள் குவியல் நிலையில் காணப்பட்டதுடன், சில எலும்பு கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையிலும் அடையாளம் வெளிப்பட்டுள்ளன.
குவியல் நிலையில் காணப்பட்ட எலும்பு கூடுகளுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதால், மேலதிக ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பான
முழுமையான தகவல்களை வெளியிட முடியும் என சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏற்கனவே வெளிப்பட்ட எலும்பு கூடுகளில் 3 சிறுவர்களுக்குரியவை உட்பட 4 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 93 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 444 எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணியில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு
செம்மணியில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு
செம்மணியில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்று (02) இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட
நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித
என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதைகுழிக்குள் காணப்பட்ட
அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன
. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே, அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும், நாளைய தினம் (03)
ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும், 7 ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் (04) மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு
செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு
செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு ,யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களின் பின்னர் தற்பொழுது சடலங்கலாங்களாக மீட்க பட்டுள்ளனர் .240 bodies recovered in Semmani
240 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள் .
சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது Arrested by Sinhala government terror forces
சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமாக இது காணப்படுகிறது .
இந்த எலும்புக்கூடுகள் மீட்பு சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது .
சர்வதேச விசாரணை மேற்கொண்டு தமிழர்களை தண்டித்தவர்களை நீதியின் நிறுத்துவர்களை எதிர்பார்க்கப்படுகிற பொழுதும் அது இன்னும் கட்டப்படவில்லை.
இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகள் Presidents who ruled Sri Lanka
தொடர்ந்து 800க்கு மேற்பட்ட சடலங்கள் இருப்பதாகவும் அவை யாவும் போர்க்கால பகுதியில் இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளின்
ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள்.
பாலியல் துன்பங்களுக்கு பின்னர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் காணப்படுகிறது.
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் 4எலும்புக்கூடுகள் மீட்பு ,யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.4 skeletons recovered in Semmani
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் At the Siddhupathi Hindu cemetery
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 43 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது 4 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப்
மனித எலும்புக்கூட்டு தொகுதி Human skeleton block
புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 224 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.
தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி
அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .
வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.
யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .
யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி
அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .
என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி
செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி
செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,
அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின்
எலும்பு கூடுகள்
அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள்
மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையிலும், எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு
மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி
புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின்
அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள
அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழி
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 158 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Second Phase of Excavation – Day 35
27.08.2025
During today’s excavation at the Chemmani human grave site in jaffna
During today’s excavation at the Chemmani human grave site in jaffna , three additional sets of human remains have been newly identified.
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 169
So far, 158 sets of remains have been fully excavated.




செம்மணியின் அகழ்வு பணிகள் ஆரம்பம்
செம்மணியின் அகழ்வு பணிகள் ஆரம்பம்
செம்மணியின் அகழ்வு பணிகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி அகழ்வு பணிகள்
செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தன. குறித்த அகழ்வு பணிகளே இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில்
யாழ்ப்பாணம், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள்
அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று ப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த
விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை,
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில்
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.
இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் நாளை (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம் ,வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பு
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
போராட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,
அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு
மீண்டும் செம்மணி மனிதபுதைகுழி அகழ்வு ,தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார்.
சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63
எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி
பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது 3 விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.
மனித புதைக்குழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட
தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக
முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு, உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்”. என்றார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது.
ஏற்கனவே, மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய
காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார்.
அதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு
கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது.
இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட
சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21 ஆம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். என்றார்.
குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.
செம்மணியில் இதுவரை 37மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் இதுவரை 37மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் இதுவரை 37மனித எலும்புக்கூடுகள் ,செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ்
சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்
சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளின் போது இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டு, புதிதாக அகழப்பட்ட பகுதியில் ஒரு சிறுமியின் ஆடை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது
செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள், செம்மணி மனித புதைகுழியில் கடந்த தினம் இரண்டு மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்
செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியின் பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி
இதுவரை இந்தசெம்மணி மனித புதைகுழியில் இருந்து 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பணிகளில் இந்த எலும்பு கூடுகள் மீட்ககப்பட்டுள்ளன.
இதுவரை 26க்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதிய சுயாதீன தகவல் தெரிவிக்கின்றன.
சந்திரிகா காலத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கையின் போது, புதைக்கப்பட்ட சடலங்கே தற்பொழுது தோண்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை கட்டிப் பிடித்தபடி இறந்த நிலையில் தாயின் உடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சிங்கள ராணுவ காட்டினால் மிக கொடூரமாக குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குடும்பங்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் இப்பொழுது மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகின்றது .
இவ்வாறான நிலையில் இந்த செம்மணி விவகாரம் உலக அரங்கில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள் ,செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டிய மக்கள் பேரெழுச்சி பெரும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது.
அரசியல்வாதிகளை சுற்றி வளைத்த மக்கள்
அந்த பதினாறு ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை சுற்றி வளைத்து மக்கள் விரட்டி அடித்தனர்.
அணையா தீபா போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தது இவ்வேளையில் ,அங்கு சென்ற தமிழரசு கட்சி அனுரா கட்சியை உள்ளிட்டவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .
அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிவஞானம் ,சாணக்கியன், போன்றவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .
எட்டப்பன் சுமந்திரன் செயல் தமிழர் உடைய வாழ்வியலை குழப்புற நடவடிக்கை எனவும் ,சிங்களது கைக்கூலி எனவும் அங்கு போரடத்தை நடத்தியவர்கள் உறுமினார்கள் .
தமிழர் தேசிய அரசியல் வரலாற்றை பேசுகின்ற இவர்களை மக்கள் சுற்றி வளைத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்
ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை மேற்படி விடயம் கட்டிய பட்டுள்ளது.
கூட்டு வைத்து தமிழரசு கட்சி உடைத்து நாசம் செய்த சுமந்திரன் ,சாணக்கியன் சுமந்திரன் சிவஞானம் போன்றோர் எட்டப்பர்கள் என மக்கள் விரட்டி அடித்தனர் .
ஆட்சியில் அங்கம் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் எம்பி இளங்குமரன் உள்ளிட்டவர்களும் போக்கிரிகள் என்பதை மக்கள் இந்த இடத்தில் காட்டி இருக்கிறார்கள் .
எங்களை விட்டால் காணும் என ,பிடரியில் கால்பட ,தலை தெறிக்க ஓடி உள்ளார்கள் .
கயவர் கும்பல்களுக்கு இது ஒரு மக்கள் எழுச்சி என்பதை இந்த விடயம் காண்பிக்கிறோம்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
கனடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதி அனுராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும்
கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி கெளரவ அனுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதே வேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி
ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.
இதுநிற்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால்
மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடிய தமிழர் பேரவையால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க அனுரா செயற்படுவாரா என்பது கேள்விக்குறியே.
வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.
முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.
ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்
மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.
அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.
செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,
இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்
கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,
இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.
அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,
இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.
இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.
அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.
இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு
செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு
செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு ,18 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அதிரும் படியாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் குழந்தைகளுடன் புதைக்கப்பட்டு இருந்த ,புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது .
18 எலும்பு கூடு மீட்பு
இவ்வாறு நடைபெற்று வந்த அகழ்வு பணியில் 18 எலும்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அடையாளம் காணப்பட்டுள்ள 18 எலும்பு கூடுகளில் ஐந்து எலும்பு கூட்டுத் தொகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது .அவை சட்ட வைத்திய அதிகாரியின் என் பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல சில எலும்பு கூட்டுத் தொகுதிகள் இணைந்து நில் காணப்படுவதால், அவை ஒரே இடங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது .
நிர்வாணமாக புதைக்க பட்ட மனித சடலங்கள்
இதுவரையில் மீட்கப்பட்ட நிர்வாணமாக மீட்கப்பட்டதால் அவை வெறுமையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
நிர்வாணம் ஆக்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள்புதைக்க புதைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.
திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கை என்பதாகவும் ,இராணுவத்தினரை இந்த படுகொலைகளை மேற்கொண்டு தெரிவிக்கப்படுகிறது.
அப்பாவிகளை கைது செய்து அவர்களை மிக கொடூரமாக கொலை செய்து இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது அம்பலமாகி இருக்கின்றது.
செம்மணி புதைகுழி விவகாரம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு
செம்மணியில் மேலும் எலும்பு கூடுகள்மீட்பு , செத்துப் பார்த்து இந்த மயானத்தில் கடந்த தினம் இடம்பெற்ற அகழ்வின் பொழுது எலும்புக்கூடு ஒன்று முழுமையானதாகவும், மற்றொன்று பகுதியழகன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஏழு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன .
ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன
அதனைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டு மொத்தமாக ஒன்பது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இந்த நபர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையிலும் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஆக்கிரமிப்பு இனவாத பயங்கர ராணுவத்தால் தமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதான சம்பவமே இதுவாக காணப்படுகிறது.
இது ஒரு மனிதப் புதைகுழி என மக்கள் மன்றம் தெரிவித்து வருகிறது.
மக்களை படுகொலை செய்த அரச இராணுவம்
ஆகவே மக்களை படுகொலை செய்த அந்த அரச ராணுவத்தினையும் அந்த ஆட்சியாளர்களையும் யார் கைது செய்து விசாரிப்பது என மக்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் சடலங்களாக இருந்தால் அது ஒரு கடதாசி ,சிங்களவராக இருந்தால் அதுதான் மனித உயிர்கள் என பார்க்கின்றது .
இவ்வாறு தான் பாகப்பிரிவினை இலங்கையில் காணப்படுகிறது .
அடக்கப்படுகிற ஒரு இனமாகவும் ,அடக்கி ஆளுக ஒரு இனவாகும் தமிழர்கள் காணப்படுகின்றனர் .
அதனால் தான் என்னவோ தங்களுடைய குரல்கள் சர்வதேசத்தில் ஓங்கி ஒழிக்கவில்லை என்பதாக மக்கள் மன்றம் கண்ணீரோடு தெரிவித்து வருகிறது.
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் அதிகாலை செம்மணி சிந்துபாத்தி இந்த மயானத்தில் ஒரு குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செம்மணியில் ஏழு எலும்பு கூடுகள் மீட்பு
இந்த புதைகுழிகளில் இருந்து நேற்று வரை ஏழு எலும்பு மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயதிற்கு தக்க சிறுமி எலும்புக்கூடும் காணப்படுகின்றது.
சுமார் 20 வருடங்களாக புதைக்கப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மனித எலும்பு கூடுதலாக இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து காலப்பகுதியில் படுகொலை
குறித்த பகுதியில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொடூரமாக வதைக்கு உள்ளான நிலையில் பின்னர் அங்கு வயல் வெளிகளில் புதைத்துள்ள நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
அவ்விதம் இந்த மனிதப் படுகொலை இடம் பெற்று இருக்கக்கூடும் என தெரிய வருகிறது.
தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்ட சிங்கள பேரினவாத ராணுவம் இவ்வாறான மனித படுகொலைகளை நடத்தி, தமிழ் மகளை அடக்கி ஒடுக்கி வந்தது மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
கிருசாந்தி முதல் வித்தியா வரை இடம்பெறும் பல கொலைகளுக்கு பின்னணியில் இலங்கையினுடைய புலனாய்வு அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ,
அம்பலமாக இருந்த நிலையில் இந்த செம்மணி புதைகுழி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















































