Author: நலன் விரும்பி
இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை
இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை
இலங்கையில் கடந்த இறுமாதங்களில் மட்டும் 23 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இலங்கையில் சட்டவிரோத ஆயுத பாவனைகள் தடுக்க பட்டுள்ள பொழுதும் இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த துப்பாககி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவதான குற்ற சட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது.
மிகவும் துணிகர சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இதுவரை இந்த ஆயுத தரிகள் கைது செய்யப்படாது உள்ளமை குறிப்பிட தக்கது.
இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு
இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு
இலங்கையில் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய கேட்டபாயாவை கைது செய்ய கோரி
மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
எதிர் வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் போரட்டம் மீளவும் பெரிதாக இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜபாக்ஸ குடும்பம் கைதுசெய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் அதனை இதுவரை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திடவில்லை.
ரணில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது
மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.
ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .
வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .
மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .
கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
சமையல் எரிவாயு விலை குறைப்பு
சமையல் எரிவாயு விலை குறைப்பு
சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய விலை குறித்து அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விலை திருத்தத்தின் போது எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை, திறைசேரி மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, புதிய விலை திருத்தம் செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு விலை குறைப்பு
அந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனத்தை நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான இலாபத்தை ஈட்டுகிறது.
“கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்தது” என்றார்.
முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.
யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கம் – 076 0777615 மற்றும் 074 0961230
ரணில் சஜித் மீள இணைய முடிவு
ரணில் சஜித் மீள இணைய முடிவு
இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி இரு அணிகளாக உடைந்து சிதைந்த நிலையில் மீளவும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.
பலவீன பட்டுள்ள கட்சியை மீளவும் ஒன்றிணைந்து அதன் ஊடக தனது பலத்தை நிரூபிக்க ரணில் முயன்று வருகிறார்.
எம்பிகளுடன் உள்ள சஜித் அணியினரை பலமிழக்க வைக்கும் நகர்வில் தந்திர ஆட்டத்தை ரணில் ஆரம்பித்துள்ளார்.
இந்த ஆடுகளத்தில் சஜித்தை தோல்வியடைய வைப்பதே ரணில் நோக்காக உள்ளது.
அவ்வாறு சஜித் ரணிலுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை பெற்று கொண்டால் கட்சி இரண்டாக உடைந்து பலவீன படும் என எதிர்பார்க்க படுகிறது.
கணவன் மண்டையை உடைத்த மனைவி
கணவன் மண்டையை உடைத்த மனைவி
யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது..
மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.
இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்
இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்
இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடினார் .
இவ்வாறான சூழலில் இலங்கைக்கு 11 ஆம் திகதி மீள் திரும்புகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக நபர் ஒருவர் தொடுத்துள்ள கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள் வருவது தொடர்பாக எதுவும் தெரியாது என மகிந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் மருத்துவ
தேவைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக மகிந் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
இலங்கை ; நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை ,திங்கள் ,செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம்
வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இருப்பினும் இவ்வாறான ,பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் (8)
வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை
சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை
சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக நெல்கொள்வனவுச் சபை விவசாயிகளிடமிருந்து ,ஒரு கிலோ நாடு நெல் 120விற்கும், சம்பா ஒரு கிலோ 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவை 130 ரூபாவிற்கும் கொள்வனவு
செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show
வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show
வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் !
‘சமூகவலைத்தள வழி மக்கள் அரங்கம்’
இன்று (07-08-2022 ஞாயிற்றுக்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கவுள்ளார்.
Facebook @TGTEMedia / Youube : TGTE Media https://youtu.be/F5U3MNq-n1Yஆகிய சமூகவலைத்தள பக்கங்கள் ஊடாக இணைந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்க முடியும்.
நியூ யோர்க் நேரம் காலை 11மணி ஐரோப்பிய நேரம் மாலை 5மணி சிறிலங்கா நேரம் இரவு 8:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வினை tgte.tv வலைக்காட்சியூடாக நேரடியாக காணலாம்.
நன்றி
துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
துருக்கிய இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் சிதறிய முகாம்
சிரியாவில் “Anab பகுதியில் உள்ள துருக்கி இராணுவத்தின் முகாம் மீது ரொக்கட் தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது.
இந்த துருக்கி இராணுவ முகமா மீதான ரொக்கட் தாக்குதலில அந்த முகாமில் பலமான வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது .
திடீர் ரொக்கட் தாக்குதலில் துருக்கி முகாம் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
மேலும் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்து இறந்தும் உள்ளனர் என்கிறது முக்கிய அரபு ஊடகம்.
ஆனால் துருக்கிய இராணுவமோ இந்த ரொக்கட் தாக்குதல் தொடர்பாக எதனையும் வெளியிடவில்லை.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் துருக்கி இராணுவ தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குருதீஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .
மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.
தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்
தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்
அமெரிக்கா மத்திய Pennsylvania பகுதியில் வீடு ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இந்த வீட்டிலே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் மூன்று சிறுவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் முற்றாக வீடு எரிந்து நாசமாகியுள்ளது ,இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இறந்தவர்கள் சடலங்கள் எறிந்த நிலையில் மீட்க பட்டுள்ளது எனினும் அவை உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
இது திட்டமிடப்பட்ட செயலா அலல்து விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மேற்படி தீ விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் ம் துப்பாக்கி கலாச்சாரம்
இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்
இலங்கை கம்பாக பகுதியில் நபர் ஒருவர் அருமை ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்ட நபரது சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஐயாவுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக அதிக அளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளனர் .தொடராக அவுஸ்ரேலியாவுக்கு
படகு மூலம் இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .
அவ்வாறு செல்கின்ற அகதிகளை மீளவும் இலங்கைக்கு அவுஸ்ரேலியா நாடு கடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.
வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு
வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு
இலங்கை வத்தளை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வத்தளை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது.
மீட்டக்க பட்ட ஆணின் சடலம் நாற்பது வயது இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.
10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்
மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்
அவுஸ்ரேலியா ; மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான
முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“Methagu” is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of
Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத்
தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021)
மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்
வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு” திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும்
நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது.
உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.
The movie METHAGU, which is set to be the starting point of Theera’s history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can’t hide the history.
எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு
www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள்,
செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
மெல்பேர்ன் காட்சிகள்
Dandenong – VIC
20 Aug 2022 Saturday 6.45pm
Epping – VIC
21 Aug 2022 Sunday 6pm
Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107
Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்
Tickets: Adult $20, Kid (under 12) $10
எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும்
https://www.tccau.com/2022/08/Methagu-2.html















