வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது ,வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இலங்கை சந்தேக நபர்கள் படகில் இந்தியா வந்தடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை அன்று சட்டவிரோதமாக படகில்

வெள்ளிக்கிழமை அன்று சட்டவிரோதமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்தடைந்த இரண்டு இலங்கை நாட்டவர்களை இந்திய கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சிக்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்,

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்ட அந்த இருவரையும் கண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணையின் போது, ​​அவர்கள் இலங்கையின் வத்தளையைச் சேர்ந்த 31 வயதான ஜி. விக்னேஸ்வரன் மற்றும் 30 வயதான எம். லூசிநாத் என அடையாளம் காணப்பட்டனர்.

கடற்படை காவல்

மேலதிக விசாரணைக்காக அவர்கள் கடற்படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பது விசாரணையில் தெரியவந்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அவர்கள் இருவரும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களைக் காவலில் வைக்கக் கோரி இலங்கை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில்,

சந்தேக நபர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வத்தளை பகுதிகளில் குவிக்கப்பட்ட STF
Posted in இலங்கை செய்திகள்

வத்தளை பகுதிகளில் குவிக்கப்பட்ட STF

வத்தளை பகுதிகளில் குவிக்கப்பட்ட STF

வத்தளை பகுதிகளில் குவிக்கப்பட்ட STF ,ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து

அனைத்து வீதிகளையும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இதன் விளைவாக, இந்தப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு உட்பட தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன் ,ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் இலங்கை வத்தளையை சேர்ந்த விஜய் லோசன் பாடல் பாடி அசத்தியுள்ளார் .

விஜய் லோசன் முதல் பாடல்

விஜய் லோசன் முதல் பாடல் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடியிருக்கிறார் .அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார் .

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் ,இலங்கையில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளனர் .

பதுளையை சேர்ந்த இந்திரஜித்

அதில் மலையகம் பதுளையை சேர்ந்த இந்திரஜித் ,சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா ,ஆகிய மூவரும் கலந்து சிறப்பித்து வருகின்ற்னர் .

கில்மிசா ,அசானி கலந்து கொண்டு அசத்தி சாதனை நிலை நாட்டிய பின்னர் ,தற்போது இவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வு மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

தமிழகம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா

எமது இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கனவுகளை சுமந்து இந்த சரிகமபா நிகழ்வில் கலந்து கொண்டு பாடும் இந்த பாடும் குயில்கள் வெற்றி பெறவேண்டும் .

முதலாவது இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்பது நோக்கல்ல ,இந்த சரிகமபா மேடையில் ஏறிவிட்டாலே அதுவே பெருமை என்பதே இன்றைய நிலையாக உள்ளது .

ஈழ தமிழர்கள்

அதற்காக உலகம் தழுவிய ஈழ தமிழர்கள் ,தமிழக தொலைக்காட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .

அவ்விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் விஜய் லோஷன் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் .

இலங்கை வத்தளை மக்களுக்கு சரிகமபா பாட்டு அரங்கின் ஊடக, விஜய் லோசன் பெருமை தேடி தருவார் என மக்கள் எதிர் பார்க்கின்றனர் .

மிகவும் இறுக்கமான இந்த போட்டி , இலங்கை வாலிபர்கள் நின்று தாக்கு பிடித்து வெல்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது .

இந்த சரிகமபா நிகழ்வில் ,போட்டி கொண்ட திறமை சாலிகள் மோதி கொள்ள போகின்றனர் என்பதே போட்டியாளர்களை பார்க்கும் பொழுது தெரிகிறது .

full video

Posted in இலங்கை செய்திகள்

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

இலங்கை வத்தளை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

வத்தளை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

மீட்டக்க பட்ட ஆணின் சடலம் நாற்பது வயது இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.