Author: நலன் விரும்பி
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
மொனராகலை- பிபிலை வீதியின் தொடம்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிலை வெல்லஸ்ஸ தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்ற கனுல்வெல முஸ்லிம் மஹா
வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர்
இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள்
முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது..
எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .
நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை
இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .
ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திடீர் பயணம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தை ஏவி மக்கள் போராட்டங்களை நசுக்குவதில் குறியாக உள்ள ரணிலின் இந்த பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.
இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க
மக்களை அடக்கி ஒடுக்குவதில் குறிவைத்து செயல் பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது.
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச்
சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம்
பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக
பயன்படுத்துவதை மீறும்
வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
கியூபா நாட்டின் Matanzas பகுதியில் உள்ள எரிபொருள் களஞ்சிய கூதம் மீது மின்னல் தாக்கியதில் அங்கு பணியாற்றிய 17 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளளனர் .இவ்வாறு காணாமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த எரிபொருள் களஞ்சிய மின்னல் தாக்குதல் தீ பல மைல்களுக்கு அப்பாலும் தென்பட்டது .
இங்கு இடம் இடம்பெற்ற மின்னல் தாக்குதல் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
லண்டனில் தீயில் எரிந்த கரவன் குடியிருப்பு
பிரிட்டன் லண்டன் Birchwood Road, Dartford பகுதியில் காட்டுப்புற பகுதியை அண்மித்து அமைக்க பட்டிருந்த கரவன் கூடாரங்கள் எரிந்து அழிந்துள்ளன.
அங்குள்ள கரவன் கூடாரத்தில் தீ பற்றி பிடித்ததில் அங்கிருந்த மேலும் சில கரவன் குடியிருப்பும் எரிந்து அழிந்துள்ளது .
குறித்த தீயினை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் வரவளைக்க பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் இராணுவத்தினால் பால்ஸ்தீனம் காசா பகுதியில் இலக்கு வைத்து விமான தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த விமான தாக்குதலில் சிக்கி இதுவரை 31 அப்பாவி மாக்கள் பலியாகியுள்ளனர் .
மேலு 266 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பால்ஸ்தீனம் மீது நடத்தும் இந்த தாக்குதலானது சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
எனினும் நெதன்யாகு மற்றும் தற்கால இஸ்ரேல் அதிபர் நடத்தும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.
பலஸ்தீனம் மற்றும் அங்குள்ள போரளி குழுக்களுக்கு ஈரான் பின் புலத்தில் உதவி வரும் நிலையில் இஸ்ரேல் புரியும் இந்த படு கொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படவில்லை .
வல்லரசுகளின் பண பலம் மற்றும் இராணுவ பலத்தில் வாழட்டும் கூடமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது .
எனினும் கண்துடைப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் புரிந்தது சட்டவிரோதமான தாக்குதல் என ஐநா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது .
பிரிட்டனில் டைனோசர் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு
பிரிட்டனில் டைனோசர் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு
பிரிட்டன் Sheppey, Folkestone, Herne Bay, Thanet and Dover பகுதியில் டைனோசர் என்ற மிருகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இந்த எலும்பு கூடு ஆயிரம் ஆண்டுகள் முந்தையவையாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது.
தொடர்ந்து ஆரய்ச்சியாளர்கள் தமது ஆய்வினை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறான அரிய வகை விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்க பட்ட நிலையில் ஆய்வு பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன.
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் சீனா இராணுவம் தனது இராணுவ போர் ஒத்திகையை தொடர்ந்தவண்ணம் உள்ளது .
இதனால் தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது .
தனி நாடாக தாய்வான் உள்ள போதும் சீனாவின் இந்த மிரட்டல் ஆக்கிரமிப்பு துடிப்பு உலக போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
உக்கிரேனை போன்று தாய்வான் மீதுசீனா போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் உள்ள பாடசாலைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தற்போது ஆயுத முனை பாதுகாப்புடன் பாடசாலை மீள திறக்க பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் பத்தொன்பது மாணவர்கள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த ஆயுத முனை பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் இந்த தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
“தேடல் மற்றும் கைது” பற்றிய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகள் நீக்கப்பட்டன,
உயர்நீதிமன்றத்தில் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் நீக்கப்பட்டுள்ளன.
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
இயற்கைக்கு மாறான குற்றங்கள் (சரீர உடலுறவு), இயற்கையின் ஒழுங்கிற்கு எதிரான உடலுறவு, நபர்களுக்கிடையேயான மோசமான அநாகரீகச்
செயல்கள் (ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான பாலியல் செயல்களை விசாரிக்கப் பயன்படுத்தப்படும் குற்றம்) மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய ஒழுங்குவிதிகளே நீக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜூலை 18ஆம் திகதி அவசரகாலச்
சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில்
பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும்
இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை
எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
ஹட்டனில் சிறுத்தைப்புலி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை
தோல்வியடைந்ததாக.நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (07.08.2022) காலையில் சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த
சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.
நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுத்தை ஏறிய மரமும் வெட்டப்பட்டது.
இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் ,
இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை
ஜிகாத் இரண்டாம் தளபதி இஸ்ரேலினால் படுகொலை
பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
இவ்வேளை காசா பகுதியில் பதுங்கி இருந்த ஜிகாத் தலைவர்களின் இரண்டாம் தளபதி இஸ்ரேல் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளார் .
இவரது படு கொலை அடுத்து இஸ்ரல் தலைநகர் அல் ஆவி பகுதி மீது ஜகாத் குழுவினர் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
ஜிகாத் போராளிகள் ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூல சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
என்கிறது ஆனால் காசா ஜிகாத் போராளி குழுக்களோ இஸ்ரேல் இராணுவ நிலைகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
தொடந்து இஸ்ரேல் ஜிகாத் குழுவுக்கு இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் இருபது மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய லொத்தர் சபையின் லொத்தர் குழுக்களில் இந்த பெரும் தொகையை குறித்த வெற்றியாளர் தட்டி சென்றுள்ளார் .
14 – 15 – 31 – 41 – 44 – 45
Bonus ball
20 என்ற இலக்கத்தை வழங்கி இந்த பெரும் தொகையை குறித்த நபர் அள்ளி சென்றுள்ளார்.
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் .
எம்பி பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்து தவித்த நிலையில் இலங்கையின் ஜனாதியாக மாற்றம் பெற்றுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயா மற்றும் ராஜபாக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதில் குறியாக உளளார்.
இவர்களது சொத்துக்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு ரணில் தொடர்ந்து உதவி வருகிறார்.
உலக நாடுகளில் எங்கும் தங்க முடியாத நிலையில் கோட்டபாய சிக்கி தவித்து வருகிறார் .
இவரை போர்க் குற்ற சாட்டில் கைது செய்து விடுவார்கள் என்கின்ற பீதியில் கோட்டபாய இலங்கை திரும்புகிறார்.
அவ்வாறு இலங்கை வரும் இவர்களை ஒட்டு மொத்தமாக காப்பாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க உதவி புரிந்து வருவதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
மகிந்தா குடும்பத்தினை பாதுகாக்க தவறினால் இரண்டு வருடஙக்ளுக்கு உள்ளாகவே ரணில் ஆட்சி கவிழ்க்க பட்டு அவர் ஜனாதிபதி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ரணில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார்


















