Author: நலன் விரும்பி
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்
பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்
ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.
வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து
கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு
அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.
அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்
தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்
அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக
இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.
தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு
எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு
கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக
நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்
தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,
அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.
மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .
அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.
கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு (திருமதி) எஸ்.சரணியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும்,
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக
ஆணையாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பைஷல் இஸ்மாயில் –
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .
வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?
இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .
ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.
வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட
குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி
ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.
தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பிரிட்டன் இராணுவ தளபதிகள் சந்திப்பு
இலங்கை பிரிட்டன் இராணுவ தளபதிகள் சந்திப்பு
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளேட்டன் (3)
பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையில் நிலவும்
நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற
நிகழ்ச்சிகளில் இரு நாட்டு ஆயுதப்படைகளின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
இந்சந்திப்பின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில்
பிரித்தானிய பாதுகாப்பு இணைப்பாளருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட அவர்களும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டார்.
இலங்கை இராணுவம்
காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.
கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும் இந்த பகுதிக்கு சென்று இவற்றை பார்வையிட்டதுடன் போராட்டக்காரர்களுக்கு இது குறித்து அறிவித்தனர்.
அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
கொழும்பு ரயில் சேவைகள் இரத்து
மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம்.
இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும்,
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி,
8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்
கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்
பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக பஸ் சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கவிழ்ந்த பஸ் 12 பேர் காயம் கதறிய பயணிகள்
இவ்விபத்தில் காயமடைந்த 12 பேரும், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் இதில் சிலர் மேலதிக
சிகிச்சைக்காக கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸலாவ நவகடதொர பகுதியை சேர்ந்த தம்மிக்க ஹேமந்த யாப்பா (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருவர் சுட்டு கொலை
இலங்கையில் இருவர் சுட்டு கொலை
தென் இலங்கை பகுதியில் இருவர் மர்ம ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சடலங்கள் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
அனகொண்டா பாம்பு ஒன்று வான் ஒன்றை சுற்றியுள்ள காட்சிகள்
டுவிட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த பாம்பு வானை சுற்றியுள்ள காட்சியை கண்ணுற்ற மக்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது.
அந்த காணொளியை இங்கே காணுங்கள் .
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் கென்ட் Hudson வீதியில் ஐந்து அடி நீளமான பாம்பு ஒன்று உலாவியதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
வீதியால் சென்ற தபால் காரர் ஒருவர் பாம்பை பிடித்து பேஸ்புக்க்கில் பதிவு செய்துள்ளார் .
அதுவே உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.
பிரிட்டனில் பாம்பு தொல்லை இல்லை என உலாவும் மக்களே யாக்கிரதை. இதோ பாம்பு உலவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் .
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.
அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .
ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு
அமெரிக்கா Nebraska பகுதியில் இரு வீடுகளில் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன.
இந்த சடலங்கள் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இவர்கள் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
இவ்வேளை அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் .
நாள் தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி
இலங்கைக்கு உதவுவோம் இந்தியா உறுதி
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என இந்தியா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
கம்போடியாவில் இரு நாடுகளும் இடையில் இடம்பெற்ற சந்தின்பொழுது இந்த விடயம் உறுதிப்படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது.
இலங்கை தமது நண்பன் என இந்தியா தெரிவித்துள்ளது .பலத்த நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்த பொழுது உணவு மற்றும் எரிபொருள்
மருத்துவ உதவிகளை இந்தியா முன்னின்று வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்கள் இந்நோய்க்கு வேகமாக பலியாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
20-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 55 வீதமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் பதிவாகியுள்ள 476,677 டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலைகளை மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆவர்.
நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
எவ்வாறாயினும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதால், நாட்டின் 67 வலயங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைய மழை காலத்துடன் இந்த அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்கள், பாடசாலைச் சூழல்கள், கட்டட நிர்மாணப் பகுதிகள்,
என்பனவற்றை உடனடியாகச்
சுத்தப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் அபாயகரமானதாக மாறக் கூடும் என்று அவர் சுட்டிக்கட்டினார்.
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதி அட்டையை
அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாகனம் அல்லாத பிற எரிபொருள் தேவைகளுக்கான QR. குறியீடுகளை வழங்க பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி
எண்ணிலிருந்து வியாபாரப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனப் பதிவு, அரசாங்க வாகனப் பதிவின் சார்பாக அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட பதிவு
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய வசதி செய்தல், பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் எரிபொருள் இருப்புக்களை உடனடியாக
தெரிந்து கொள்ளும் வசதிகளை உருவாக்குதல், தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வசதி மற்றும் சட்ட விரோதமாக QR குறியீடுகளை
அமைத்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான ஒன்லைன்
முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த
விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் அமைதி காத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
ரணிலுக்கு வாக்களித்த கூட்டமைப்பில் சிலர் ரகசியம் அம்பலம்
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை
தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு
இலங்கையில் இன்று நள்ளிர முதல் பேரூந்து கட்டணங்கள் குறைக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது.
மக்கள் எழுச்சியை தடுக்க இவ்விதமான விலை குறைப்பு நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
எரிபொருள் விலையினால் பேரூந்து கட்டணங்களை விலை அதிகரித்தது.
ஆனால் தபோது அதே பேரூந்து விலை கட்டணங்கள் இன்று நாளிரவு குறைக்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.



















