Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் பேர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி ஓடியுள்ளனர் .
இலங்கைக்கு இவர்களினால் அந்நிய செலாவணி கிடைக்கும் என இலங்கை எதிர் பார்க்கிறது .

அதனால் தான் இலங்கையை விட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறவும் ,அதற்கான தொழில் வாய்பபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

உலகம் எங்கும் இந்தியர்களே இவ்விதம் தொழில் வாய்ப்பு ,விசா பெற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர் .

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

இவ்வாறான நிலையினை இலங்கை அரசு ஏற்படுத்த மறந்ததன் விளைவு ,இன்று இலங்கை இவ்விதம் சீரழிந்து போக காரணமாயிற்று .

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு வராவிடாது தடுத்துள்ளதும் ,இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருங்கடியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும், இவ்விதம் பெரும் தொகையில் மக்கள் வெளிநாடுகளுக்கு
வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற

வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 51 கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையின் போதே இந்நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி தனதுரையில்,

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை இதுவரை தீர்க்கமாக அணுகுமுறையில் செயல்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலை சிறிலங்காவை பொறுப்புக் கூற வேண்டும்

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் சிறிலங்கா எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை.

செயற்படுத்துவதற்கான விருப்பத்தையே,நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திசையோ காட்டியிருக்கவில்லை.

போரின் போது படுகொலைக்கும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நீதி தேடும் தமிழர்கள் தேடும் முயற்சியில் விரக்தியும்

மட்டும் அடையவில்லை தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விரக்தி அடைந்துள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் தொடர்ந்து அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேலும் மேலும் காலஅவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு சபையினைக் கேட்டுக்கொள்வதோடு,

தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டரைமக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை
பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுகிறோம்.
தாமதிக்கப்படட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என தெரிவித்திருந்தார்

https://youtu.be/etcPR8Nszs8
Posted in உலக செய்திகள்

பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை

பிரான்ஸ் 13 இல் 13th Marseille, France
காவல்துறையால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

காரில் பயணித்த இருபது மற்றும் முப்பது வயதுடையவர்கள் ,சிலரை கொலை செய்திடும் முகமாக நடந்து கொண்ட விபரீத சம்பவத்தை அடுத்து ,காவல்துறையினரால் அவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

காவல்துறையினர் மேற்கொண்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலியானவர்கள், சடலங்கள் மீட்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பிரான்சில் 22 பேர் இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சம்பவம் தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவிலை .பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

    Posted in உலக செய்திகள்

    ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை

    ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை

    ஈரானால் சிறை பிடிக்க கிரேக்க கப்பல் மாலுமிகள் ,ஈரானால் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

    அமெரிக்காவிற்கு எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த ,இரண்டு கிரேக்க நாட்டு கப்பல்களை, ஈரானிய கடற்படை சுற்றிவளைத்து பிடித்தது .

    இதன் பொழுது அதில் இருந்த மாலுமிகள் ,மற்றும் எரிபொருள் என்பனவையும் ஈரானால் கைப்பற்ற பட்டது .

    ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை

    கிரேக்க கப்பல் ஈரானால் சிறை பிடிக்க பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

    மத்திய தரை கடல் பகுதி அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுதே ,மேற்படி கப்பல்கள் இரண்டு சிக்கின .

    ஈரான் கடல் படையால் சுற்றிவளைக்க பட்டு, ஈரானுக்குள் சிறை பிடிக்க பட்டு இழுத்து செல்ல பட்டது .

    பல மாதங்கள் கழிந்த நிலையில், இந்த மாலுமிகள் தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

      மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

      55 வயதுடைய திருமணமாகாத தனது மகன் விபத்தில் உயிரிழந்ததை கேள்வியுற்ற எண்பத்தைந்து வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேராதனை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

      உடபேரதெனிய பகுதியைச் சேர்ந்த சுப்பையா முதுபண்டா (வயது 55) என்பவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும், அவரது தந்தை அருணாசலம்

      சுப்பையா (84) அன்றைய தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

      மகனது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் மரணம்

      இறந்தவர் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவர் எப்போதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது சகோதரி பொலிஸாரிடம்

      தெரிவித்துள்ளார். 08ஆம் திகதி வெளியில் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

      பல இடங்களில் தேடியும் அவர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

      இந்த நிலையில், மகன் இறந்ததை அறிந்த அவரது தந்தை,
      அன்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        புதிய விசா முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

        புதிய விசா, முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

        இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள் , முதலீடுகளை மேலும்

        மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

        துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் Rakibe Demet வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தார். , நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள்

        சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

        புதிய விசா முதலீட்டு விதிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு

        இந்த புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை மூலம் முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

        விவசாய இயந்திரங்கள், மருந்துகள் ,மருத்துவ உபகரணங்கள்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய துருக்கிக்கு இப்போது வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

        மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு மருத்துவ உதவிப்பொருட்கள் அடுத்த வாரம்

        இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் துருக்கிய தூதுவர் இதன்போது
        தெரிவித்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

          50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

          இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

          2022 செப்டம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

          2022 செப்டம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

          நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

          50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

          நாட்டின்ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

          மத்தியமலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ
          மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

            Posted in இலங்கை செய்திகள்

            கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

            கண்டி மாவட்டத்தில் 14 மணிநேர நீர் விநியோகத்தடை

            கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை ,14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

            கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி (13.09.2022) மு.ப. 6 மணி

            முதல் பி.ப. 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என சபை அறிவித்துள்ளது.

            ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகள் நீர்

            விநியோத் தடையினால் பாதிக்கப்படும். இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

            கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

            மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற தொலைபேசி துரித இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
              Posted in சமையல் cook

              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க,வீட்டில திரும்ப திரும்ப இது மாதிரியே பிரியாணி செய்வீங்க.

              நம்ம மக்கள் அதிகம் விரும்பி உண்பதில் பிரியாணி முதலிடம் வகிக்கிறது . இந்த பிரியாணி வகைகளில் முட்டை பிரியாணி ,மட்டன் பிரியாணி ,சிக்கன் பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,என பல வகைகள் உள்ளன .

              இவற்றில் சிறுவர் முதல் பெரியவர்கள் அதிகம் விரும்பி உண்பதில் முட்டை பிரியாணி தரமான இடத்தில உள்ளது .

              அவ்வாறு மக்கள் விரும்பும் முட்டை பிரியாணி ,ஒருமுறை இபப்டி செய்ங்க .
              வீடே மணக்கும் நம்ம வீட்டு தமிழ் சமையல் முட்டை பிரியாணி .

              வாங்க இப்போ முட்டை பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

              முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

              செய் முறை ஒன்று
              இந்த முட்டை பிரியாணி செய்முறை சாதம் ( சோறு ) குலையாமல் முட்டை பிரியாணி செய்வது ,எப்படி என்பது தான் ,இங்கே முதன்மை பெறுகிறது .

              இந்த முட்டை பிரியாணிக்கு நாம சீராக சம்பா அரிசியை பயன் படுத்த போகிறோம் .


              ஒரு கப் அளவு சீராக சம்பா அரிசி எடுத்திருங்க .இதற்கு பதிலாகா பசுமதி அரசியும் நீங்க பயன் படுத்தலாம் .

              இந்த சீராகி சம்பா அரிசியை, இரண்டு மூன்று முறை, நன்றாக தண்ணியில கழுவி எடுத்திருங்க .அப்புறம் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைத்திடுங்க .

              அப்புறமா அடுப்பில பாத்திரம் வைத்த கொள்ளுங்க .அதில எண்ணெய் விட்டிருங்க .

              எண்ணெய் சூடானது ஒரு கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,சேர்த்திட்டு நன்றாக கலக்கி விடுங்க .

              இதில் அவிச்ச முட்டை எடுத்து இது கூட சேர்த்து வறுத்தெடுக்க போகிறோம் .அந்த முட்டையை நான்கு பக்கம் வெட்டி வறுத்து எடுங்க .மசாலா முட்டையில் ஊறிடவும் ,வெடிக்காமாக இருக்கவும், இப்படி வெட்டி விடுங்க .

              செய்முறை இரண்டு

              அடுத்து குக்கர் சூடு படுத்திட்டு ,அதில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டிடுங்க .ஒரு தேய் கரண்டி நெய் சேர்த்திடுங்க .

              இந்த நெய் நன்றாக சூடானதும் ,கராம்பு பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ,ஒரு கல்பாசி ,ஒரு ஸ்டார் பூ சேர்த்திடுங்க .

              வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .
              நன்றாக வதங்கி வரும் வரை வெங்காயத்தை வதக்கி வாங்க .

              வெங்காயம் கலர் மாறியதும் ,இரண்டு பச்சை மிளகாய் ,புதினா இலை ,கொத்த மல்லி இலை சேர்த்திடுங்க .
              புதினா இலை சேர்த்திடுங்க ,அது முட்டை பிரியாணிக்கு ரெம்பவே சுவையை கொடுக்கும் .

              அரைத்து வைத்த இஞ்சி சேர்த்திடுங்க .
              அதையும் சேர்த்து வதக்கி வாங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .


              இஞ்சி பச்சை வாசம் போன பின்ன, வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,அதையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வாங்க .

              தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் ,மசாலா சேர்த்திடுங்க .ஒண்றரை கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே ஒரு கரண்டி கரம் மசாலா சேர்த்திடுங்க .

              ஒரு கரண்டி மல்லி தூள் சேர்த்திடுங்க ,கடைசியாக ஒரு கரண்டி பிரியாணி மசாலாவும் சேர்த்திடுங்க .நம்ம பயன் படுத்துவது வீட்டு தயாரிப்பு பிரியாணி மசாலா .

              இந்த பிரியாணி மசாலா சேர்த்து வதக்கும் போது பிரியாணி வேற லெவலுக்கு எடுத்து போகும் ,அம்புட்டு சுவையாக இருக்கும் .

              இப்போ வதக்கியதில் தயிர் சேர்த்து கொள்ளுங்க .தயிர் சேர்தவுடன் நன்றாக மிக்ஸ் பண்ணி இருங்க .
              தொக்கு மாதிரி வந்தவுடன் . தண்ணிர் சேர்த்திடுங்க .

              ஒரு காப்பு அரசிக்கு ,ஒன்றை முக்கால் கப்பு தண்ணி கணக்கா இருக்கும்,அதை கவனத்தில் வைத்து கொள்ளுங்க .

              பழைய அரசிய கண்டு பிடிப்பது எப்படி ,அதிக கழிவு வந்தால் அது பழைய அரிசியாகும் ,
              அப்படி என்றால் இரண்டு காப்பு பிரியாணிக்கு தண்ணீர் விட்டிருங்க .

              இப்போ இதற்குள் அரசி சேர்த்திடுங்க .எலுமிச்சம் பழம் பிழிந்து விடுங்க .
              கடைசியாக ஒரு கரண்டி நெய் சேர்த்திடுங்க .

              இப்போ இதற்குள்ள வறுத்து வைத்துள்ள ,முட்டை போட்டு கொள்ளுங்க .

              இப்போ அரசி வேகி வந்திருக்கு ,இப்போ குக்கரை மூடி போட்டு வேக வையுங்க .

              பத்து நிமிடம் வைச்சிருங்க .இப்போ பத்து நிமிடம் கழிந்த பின்னர் ,சுவையான சீராக சம்பா அரிசியில் முட்டை பிரியாணி ரெடியாகிடிச்சு

              இது போல நீங்களும் முட்டை பிரியாணி செய்து சாப்பிடுங்க .

              மக்களே சமையல் தமிழ் முட்டை பிரியாணி எப்படி இருக்கு சொல்லுங்க .

              இன்று முட்டை பிரியாணி செமையா இருக்கு .தலைவா .

              Posted in இலங்கை செய்திகள்

              சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

              சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

              கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

              இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு

              கிலோகிராம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

              அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
              Posted in சமையல் cook

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

              செட்டிநாடு மீன் குழம்பு வீட்டில் இப்படி செய்தால் .உடனே கறி காலியாகும் .
              அம்புட்டு சுவையும் இந்த செட்டி நாடு மீன் குழம்பில் இருக்குதுங்க .

              அவ்வாறான தரமான ,அட்டகாசமான ,செட்டி நாடு மீன் குழம்பு, செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

              செட்டி நாடு மீன் குழம்பு செய்முறை .

              அடுப்பில பாத்திரம் வைத்து ,அதில் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
              சின்ன வெங்காயம் உரித்து எடுத்து ,வைத்ததை அப்படியே அந்த எண்ணையில் கொட்டி விடுங்க .


              வெங்காயம் நன்றாக வதங்கி வரும் வரை வதக்கிடுங்க .

              இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு போடுங்க ,.இப்போ வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,கூடவே உப்பு சேர்த்திருங்க .

              இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

              இப்போ மஞ்சள் தூள் ,காரத்திற்கு மிளகாய் தூள் ,தனியா தூள் ,குழம்பு மிளகையே தூள் ,இப்போ இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

              குழம்பு திக்காய் இருக்க .இப்படி பண்ணுங்க ,கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு வறுத்திடுங்க .

              இப்போ ரெடியாகிடிச்சு ,இப்போ மிக்சியில் போட்டு தண்ணி கொஞ்சம் விட்டு அரைத்து எடுங்க .இப்போ மசாலா ரெடியாடிச்சு .

              செய்முறை இரண்டு .

              புளியை நீரில் ஊற வைத்து கொள்ளுங்க ,மீன் குழம்புக்கு புளி தாங்க முக்கியம் .

              இப்போ அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங் கடுகு ,வெந்தயம் சீரகம் போட்டு தாளியுங்க ,வெட்டி வைத்த சின்ன வெங்காயம் ,பூண்டு ருவேப்பிலை போட்டு வதக்கி வாங்க .

              வெங்காயம் பூண்டு கண்ணாடியான பதம் வந்ததும் , அரைத்து வைத்த மசாலாவை சேர்த்திடுங்க ,நனறாக எண்ணெய் வரும் வரைக்கும் வதக்கி வாங்க .

              இப்போ இது கூட கரைத்து வைத்த புளிய விடுங்க ,இப்போ இதற்கு தேவையான தண்ணீரை சேர்த்திடுங்க .
              ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,தேங்காய் பால் விடுங்க .

              இப்போ குழம்பு கொதிக்குது ,மீனை போடுங்க ,மீன் ஐந்து நிமிடம் வேக விட்டால் போதும் ,மீன் போட்ட பின்னர் அகப்பை அல்லது கரண்டி வைத்து கிளறி விடாதீங்க .மீன் உடைந்து போகும் .

              இப்போ செட்டி நாடு மீன் குலமப்பு ரெடியாகிடைச்சி .இட்லி தோசை பரோட்டோ சோறு கூட வைத்து சாப்பிடுங்க .

              இது தாங்க செட்டி நாடு மீன் குழம்பு ரெடியாகிடிச்சி .இப்படி செய்து அசத்துங்க மக்களே .

              நம்ம சமையல் தமிழில் இது போல சமையலை பார்த்து சுவைத்து மகிழுங்க .

              நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்
              Posted in சமையல் cook

              நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

              நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

              நெத்தலி கருவாடு பொரியல் ,சமையலில் வீடே மணக்கும் வல்லமை பொருந்தியது , அந்த நெத்தலி கருவாடு .எப்படி வீட்டில்
              பொரிப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.

              நெத்தலி கருவாடு வறுவல் அல்லது பொரியல் செய்வது எப்படி .வாங்க நெத்தலி கருவாடு பொரியல் செய் முறைக்குள் போகலாம் வாங்க.

              செய்முறை ஒன்று

              நெத்தலி கருவாடானு அரை கிலோ நாம எடுத்துள்ளோம் .இப்போ இந்த நெத்தலி கருவாட்டின் தலைகளை அகற்றியுள்ளோம் .

              நெத்தலி கருவாடு இப்போ தலை இல்லாது தயார் செய்ய பட்டுள்ளது .

              அந்த நெத்தலி கருவாடு குடலையும் எடுத்திருங்க ,.கருப்பு கலரில் உள்ளதை அப்படியே எடுத்திருங்க ,கசப்பு இல்லாம இருக்க இப்படி பண்ணுங்க.

              அப்புறம் கருவாட்டை ஐந்து முறை வடிவாக கழுவுங்க .நெத்தலியில் மண் இருக்கும் ,வடிவாக கழுவிடுங்க ,இல்லைன்னா ,மண் நெத்தலி பொரியலில் கடிபடும் .

              அதாங்க வடிவாக கழுவுங்க ,

              நன்றாக கருவாடு கழுவிய பின்னர் ,வேறு பாத்திரம் ஒன்றில் வைத்து கொள்ளுங்க.

              இப்ப கடாயில ( சட்டி } எண்ணெய் ஊற்றிடுங்க ,கருவேப்பிலை ,பெரிய வெங்காயம் .கூடவே 10 பள்ளு நசுக்கிய பூண்டு .

              சேர்த்து இப்போ நன்றாக வதக்கி வாங்க .வதங்கி வந்த பின்னர் வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .

              வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கி வந்த பின்னர் ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .

              நெத்திலி கருவாடு பொரியல் செமயா இருக்கு வாங்க சாப்பிடலாம்

              உப்பு அதிகம் சேர்த்திடாதீங்க .

              இப்போ கழுவி வைத்த கருவாடு செத்திடுங்க ,மஞ்சள் தூள் கூடவே செத்திடுங்க .

              மூன்று நிமிடம் வரை வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்திடுங்க

              ,வதங்கி வந்த பின்னர், தண்ணி கொஞ்சம் தெளித்து ,மூன்று நிமிடம் வேக வையுங்க .

              நன்றாக வெந்து வந்ததும் ,நெத்தலி கருவாட்டை எடுத்துக்கலாம் .

              இப்பொழுது நெத்தலி கருவாடு சாப்பிடும் நிலைக்கு ரெடியாகிடிச்சு .

              இப்போ இந்த நெத்தலி கருவாட்டை சோறு,பரோட்டோ,தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம் .

              நெத்தலி கருவாடு செமையாக வந்திருக்கு ,.இதுபோல நீங்களும் முயற்சித்து சமையல் செய்து பாருங்க .

              நம்ம சமையல் தமிழ் எப்படி இருக்கு என்பதை சொல்லுங்க .

              வீட்டில செம்மையான ,அட்டகாசமான நெத்தலி கருவாடு பொரியல் ரெடியாகிடுச்சு .மாப்புள்ள

              Posted in உலக செய்திகள்

              துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

              துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

              துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

              வடக்கு ஈராக்கில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவத்தின் பலம் பொருந்திய Turkish Baberni முகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

              குருதீஸ் போராளிகள் இந்த ஏவுகணை தாக்குதலை, துருக்கி இராணுவம் முகாம் மீது சரமாரியாக நடாத்தியுள்ளனர் .

              குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ,துருக்கிய இராணுவம் முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ,பல துருக்கிய இராணுவம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

              குருதீஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், தாக்குதலை நடத்தி வரும் வேளையில் ,குருதீஸ் போராளிகள் துருக்கிய இராணுவத்தின்
              கேந்திர முக்கியதத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

                Posted in உலக செய்திகள்

                எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்

                எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்

                எலிசபெத்தை மகாராணி இறந்த நிகழ்வில் கலந்து கொள்ள ,இளவரசர் கரி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒன்றாக வருகை தந்தனர் .

                இளவரசர் பட்டத்தை துறந்து பறந்து சென்ற, கரி மீண்டும் மேர்கானுடன் ஒன்றாக வருகை தந்துள்ளார் .

                நீண்ட நாட்கள் விரிசலின் பின்னர் இருவரும் ,ஒன்றாக வருகை ,தந்துள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                இளவரசர் பட்டம் வேண்டாம் என ,பிரிட்டனை விட்டே ,இளவரசர் வில்லியம் சென்றனர்

                இப்போது மீளவும் ,ராணி எலிசபெத்
                இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.

                  Posted in உலக செய்திகள்

                  தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு

                  தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு

                  தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு .
                  உக்கிரேன் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்ய படைகளை ,தமது இராணுவம் துரத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

                  இந்த மாதம் மட்டும் ,ரசியாவிடம் இழந்த மூவாயிரம், சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு மீட்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

                  தற்போது உக்ரேன் முக்கிய பகுதி ஒன்று, ரசியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது எனவும் ,விரைவில் அவையும் ரஷ்ய படைகள் வசம் இருந்து, மீட்க பட்டு விடும் என்கிறது உக்கிரேன் இராணுவம்.

                  தொடர்ந்து உக்கிரேன் ,ரஷ்ய இராணுவத்திற்கு இடையில் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

                  லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

                  பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ,ரணில் விக்கிரமசிங்கா லண்டன் பயணமாகவுள்ளார் .

                  எதிர் வரும் 17 திகதி பிரிட்டன் செல்லும் அவர் 19 அம திகதி மகாராணியின் இறுதி நிகழவி கலந்து கொள்வார். என தெரிவிக்க பட்டுள்ளது .

                  லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க ராணியில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வார்

                  பிரிட்டன் செல்லும் ரணில் விக்கிரமசிங்க ,பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சிலதுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                  இலங்கை ஜனாதிபதியானதும் ,ரணில் விக்கிரமசிங்கா செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிட தக்கது .

                    Posted in உலக செய்திகள்

                    தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை

                    தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை

                    தூத்துக்குடி அருகே சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான மணமகன் தலையில் வெட்டுக்காயத்துடன்

                    சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

                    தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெகதீஷ். உப்பள தொழிலாளியான ஜெகதீஷுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.

                    காலையில் திருமண சடங்குகள் செய்வதற்காக வீட்டில் இருந்த மாப்பிள்ளை ஜெகதீஷை தேடிய போது அவரை காணவில்லை. இதையடுத்து

                    செய்வதறியாது திகைத்து போன மாப்பிள்ளை வீட்டார் அக்கம்பக்கத்தில் தேடினர். நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தனர்.

                    தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை

                    இந்த நிலையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீஷின் தந்தையை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர், உங்கள் மகன்ஓடை பாலம் சந்திப்பில் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

                    பதறிபோய் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் சென்று பார்த்த போது , மணவறையில் புது மாப்பிள்ளையாக அமர வேண்டிய மகன், தலையில்

                    வெட்டுக்காயத்துடன் பிணவறையில் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை கண்டு கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

                    விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெகதீஷின் முன்பக்க தலையில் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கைகால்களில்

                    சிராய்ப்பு காயங்களோ, வேறு பலமான காயங்களோ இல்லை என்றும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

                    முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலனிடம் , அவர் வீட்டில் இருந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தார் ? எதற்காக வந்தார்? யார் அழைப்பின் பேரில் வந்தார் ? தனியாக வந்தாரா அல்லது உடன் வேறு நபர்கள் வந்தார்களா ?

                    என்பதை கண்டறிய செல்போன் தொடர்புகளை வைத்து ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

                    விபத்து வழக்கில் அதுவெல்லாம் முடியாது என்பது போல அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

                    இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஜெகதீஷின் உறவினர்கள், அங்கிருந்த பொலிசாரிடம் இது கொலை, தங்கள் மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறான், நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

                    சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து என்றும் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்

                    மோதியதில் தலையின் முன் வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் விபத்து பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது ஊரில் இருந்து

                    விபத்து இடத்தில் வரை பொறுத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்ய தெரிவித்துள்ளதாகவும், அவர் என்ன

                    காரணமாக வீட்டில் இருந்து இந்த பகுதிக்கு வந்தார்?
                    என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

                      மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்
                      Posted in சமையல் cook

                      மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

                      மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

                      மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

                      வாங்க அப்படி பட்ட தரமான ,சுவையான, மீன் குழம்பு ,எப்படி இந்த முறையியல், சமையல் செய்வது என்பதை பார்க்கலாம் .

                      வீடுகளில் மீன் குழம்பு சமையல் ,சில வேளைகளில் தவறானதாக சுவை இல்லாமல் போகும் .

                      அப்படியானால் அங்கே விடுகின்ற தவறு என்ன ,அதை திருத்தி இப்படி நம்ம சமையல் கலை நிபுணர் செய்து அசத்துறாங்க .

                      வாங்க இப்போ மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

                      செய்முறை ஒன்று
                      நீங்க வாங்கும் எந்த மீன் என்றாலும் ,இந்த முறையில செய்துவாங்க ,அந்த மீன் குழம்பு ,செம சுவையாக இருக்கும் .
                      வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .

                      மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

                      முதல்ல இந்த மீன் குழம்பு செய்திட ,மிக்சியில் நான்கு வெங்காயம் போடுங்க ,கூடவே பூண்டு ,மிளகு ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,தக்காளி ,மூன்று மேசை கரண்டி அளவு மல்லி தூள் ,சேர்த்திருங்க .

                      இங்கே நாம் சேர்த்திருப்பது தனி குழம்பு மல்லி தூள் .நீங்க வேண்டும் என்றால் தனி மல்லி தூள் சேர்த்துக்கலாம் .

                      கூடவே இப்போ காரமான மிளகாய் தூளும் சேர்த்து கொள்ளுங்க .கூடவே தேவையான உப்பு , அதன் பின்னர் அரை கப்பு தண்ணி சேர்த்திட்டு நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளுங்க .

                      இந்த அரையல் தான் மீன் குழம்புக்கு சுவையும் ,மனமும் கொடுக்க போகுது ,பார்க்கும் போதே அழகா இருக்கு பாருங்க .

                      ஒரு பாத்திரத்தில் மீன் குழம்புக்கு தேவையான, புளி எடுத்து ஊற வைத்து கொள்ளுங்க .இந்த புளியயை சூடு தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .சூடு தன்ணியில ஊற வைத்தால் சீக்கிரம் ஊறி வந்திடும் .

                      ஊறிய புளியை கை வைத்து நனறாக பிசைந்து கரைத்து கொள்ளுங்க .திக்க வரணும் .அது தான் மீன் குழம்புக்கு சுவையை அள்ளி தரும் .

                      செய்முறை இரண்டு

                      அடுத்து கடாய ( பாத்திரம் ) சூடாக்கி கொள்ளுங்க .இப்ப இதில நல் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க.,அதன் பின்னர் கடுகு பொரிந்ததும் ,வெந்தயம் சேர்த்திருங்க ,கூடவே சீரகம் சேர்த்திடுங்க .
                      இப்போ சிறிதாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .கூடவே பச்சை மிளகாய் ,பூண்டு சிறிதாக வெட்டி இதில் போட்டு வதக்கி வாங்க .

                      வெங்காயம் ஓரளவு வெந்ததும் ,கருவேப்பிலை போடுங்க .கருவேப்பிலை நன்றாக பொரிந்து வரும் வரைக்கும் காத்திருங்க .
                      அப்புறம் கூடவே உப்பு சேர்த்து வதக்குங்க ,உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமா வதங்கிடும் .மீன் குழம்புக்கு கொஞ்சம் எண்ணெய் கூட செலவாகும் ,ஆனால் சுவையாக இருக்கும் .

                      வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் ,வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .அப்படியே வதக்கி வாங்க ,தக்காளி வதங்கியதும் ,அரைத்து வைத்த பொருளை இதில் ஊற்றி வதக்கி வாங்க .

                      ரெம்ப நன்றாக மசாலா வந்ததும் ,இப்போ புளி சேர்த்திடுங்க ,தேவையான தண்ணி கொஞ்சம் சேர்த்திடுங்க .

                      குலமப்பு நன்றாக கொதித்து வரும் பொழுது ,தேங்காய் பால் சேர்த்து கொள்ளுங்க .
                      ஒரு கொதி வந்த பின்னர் ,மூடி போட்டு மூடி , காத்திருங்க .

                      கறியில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் ,மீனை சேர்த்திடுங்க .மீன் சேர்த்த பின்னர் இரண்டு நிமிடம் காத்திருங்க .மீன் மூன்று நிமிடத்தில் வெந்திருக்கும் .

                      ரெம்ப நேரம் மீன் வெந்தால் மீன் உடைந்து போகும் .
                      மெல்லிய நெருப்பில விட்டுடிருங்க .அப்புறம் அடுப்பை ஆப் பண்ணிருங்க
                      இப்போ மீன் குழம்பு ரெடியாடிச்சு .

                      இப்பொழுது இந்த மீன்குழம்பை ,சாதம் கூட சேர்த்து சாப்பிடுங்க
                      மீன் உடையாமல் இருக்க மீனை கடைசியாக தான் சேர்க்கணும் ,அது தான் மென் கறிக்கு உள்ள தந்திரம் ,

                      மீன் போட்ட பின்னர் கறிக்குள்ள மீனை கரண்டி போட்டு வார கூடாது .இப்போ தரமான மீன் குழம்பு இப்போ ரெடியாடிச்சு .

                      உண்மையிலேயே இந்த மீன் குழம்பு செமை தாங்க .இது மாதிரி இனி நீங்க செய்து வாங்க ,அட்டகாசமாக தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும்..

                      வாயூறுது தலைவரே ,செம பசி ,ஒரு புடி புடிக்கலாம் வாங்க .

                      இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க
                      Posted in சமையல் cook

                      இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

                      இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

                      இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

                      காலையில் வெறும் 10 நிமிடத்தில், நம்ம வீட்டில் இப்படி ,முற்றிலும் புதிய சுவையில்,
                      ஈசியா செஞ்சு அசத்துங்க.இந்த டிபன் .

                      இந்த காலை நேர உணவுக்கு ,நேரத்தை மித படுத்தி ,சுவையாகவும் அதிக சத்து நிறைந்த ஒன்றாகவும் ,மலிவாகவும் செய்து அசத்துங்க

                      வாங்க இப்போ இந்த சத்தான உணவு ,ஈசியாக எப்படி, செய்வது என்பதை பார்க்கலாம் .

                      இட்லி தோசையை விட ,வேகமாக எப்படி, இந்த காலை நேர உணவு செய்வது, என்பதை பார்க்கலாம் வாங்க .

                      இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

                      செய்முறை ஒன்று
                      அடுப்பில பாத்திரம் ஒன்றை வைத்து ,தண்ணி ஊற்றி, அதனை சூடாக்குங்க

                      .ஒரு காப்பு அளவு அல்லது உங்களுக்கு தேவையான அளவு ,
                      சோயா எடுத்து கொள்ளுங்க .அந்த சோயாவை தண்ணியில் போட்டிருங்க ,தக்காளி ,
                      இஞ்சி ,மிளகாய் என்பன போட்டு சூடாக்குங்க .

                      சுமார் எட்டு நிமிடம் வரை இதனை சூடாக்குங்க .வேகி வந்ததும் .
                      வடிகட்டி போட்டு வடிச்சு எடுத்துங்க .

                      சோயாவை அழுத்தி ,அதில் ஊறிய தண்ணியை உத்தியோ அல்லது அழுத்தியோ எடுத்திடுங்க .
                      தண்ணி வடிந்த பின்னர் ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .

                      தக்காளி ,வெங்காயத்தை ,எடுத்து வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் ,
                      அதற்கு வெங்காயம் ,தக்காளியை வெட்டி போடுங்க .தக்காளி தோலை எடுத்து வீசிடுங்க .
                      அப்புறம் எல்லாத்தையும் ஒன்றாக ,மிக்சியில் போட்டு அரையுங்க .தண்ணீர் ஏதும் சேர்க்காதீங்க.

                      இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ,தண்ணி விட்டு திக்காக கரையுங்க .மிகவும் சத்தான, உடலுக்கு ஆரோக்கியமான புதிய உணவு இதுங்க .
                      நன்றாக திக்காக கரைந்து வந்ததும் ,பொடியாக வெட்டி வைத்துள்ள, கொத்த மல்லி போட்டிருங்க.
                      அப்புறம் அடுப்பில தோசை கல்லை வைத்து, பரோட்டா அளவுக்கு, மாவு ஊற்றி சூடாக்குங்க .

                      குழந்தைகள் இந்த உணவை ,அதிகம் விரும்பி உண்ணுவாங்க .
                      எண்ணெய் சுற்றியவர ஊற்றி அதனை சூடாக்குங்க .செம சுவையாக இருக்கும்.

                      இப்போ கொஞ்சம் தேங்காய் சட்னியோட , அல்லது வெங்காய சட்னி வைத்து சாபபிடுங்க ,செம சுவையாக இருக்கும்.காலை நேரத்தில மிக வேகமாக ,ஈசியாக செய்யவல்ல உணவு இதுங்க .

                      இப்படி நீங்களும் குழந்தைகளும் மற்றும் பெரியவர்களுக்கு செய்து கொடுங்க .இட்லி தோசையை விட ,வேகமாக புதிய சுவையில், இந்த டிபன் இருக்குங்க.
                      நாள் தோறும் ,தோசை, இட்லி, சாப்பிட்டு போர் அடிச்சு போகலாம் .

                      அவ்வாறான வேளையில், இட்லி ,தோசைக்கு ,பதிலாக இப்படி செய்து சாப்பிட்டு வாங்க ,உடல் ஆரோக்கியமாக இருக்கும் .

                      நாம் உண்ணும் உணவுகளே .எமது வாழ் நாளை தீர்மானிக்கிறது .அப்போ ,நாங்க தாங்க சத்துள்ள உணவுகளை, நாள் தோறும் உடலுக்கு வழங்கி வரணும் .

                      எனக்கு இந்த புதிய டிபன் பிடிச்சு போச்சுங்க .உங்களுக்கு மக்களே .
                      ஏன் என்றால் மிக ஈசியாக உள்ளது .அது தாங்க மேட்டர்

                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
                      Posted in சமையல் cook

                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெ

                      சப்பாத்தி இட்லி தோசைக்கு நம்ம வீட்டில், பக்காவான தக்காளி குருமா.10 நிமிடத்தில் ரெடியாச்சு .

                      நாள் தோறும் தமிழ் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான, சப்பாத்தி இட்லி தோசைக்கு , தக்காளி குருமா சேர்த்து ,சாப்பிட்டா செமையா இருக்கும் .
                      தவிர ,உடல் ஆரோக்கியம் ,மல சிக்கல் என்பன தீர்த்து போகும்

                      நாம் உண்ணும் உணவுகள் ,எமது உடலை பாதுகாக்கின்றன .நோயில் இருந்து நாம் நீண்ட தூரம் விலகி வாழ்ந்திட, நாம் உண்ணும் உணவுகள் முக்கியமானவை .

                      அதனால் தான் நம்ம தமிழர்கள் அதிகம் சப்பாத்தி இட்லி தோசை சாப்பிடுறாங்க .
                      சரி வாங்க இப்போ இந்த தக்காளி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான செய்முறை ஒன்று

                      பொடியாக வெட்டிய தேங்காய் ,மூன்று ஏலக்காய் ,சோம்பு ,முந்திரி ,ஒரு பச்சை மிளகாய் ,தேவையான தண்ணி சேர்த்து மிக்சியில் அரைச்சிடுங்க

                      அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ சூடானதும் ,பிரிஞ்சி இலை ,சோம்பு ,கூடவே சின்ன துண்டு பட்டை ,கறுப்பு ஏலக்காய் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி வதக்கி வாங்க .
                      சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

                      இப்போ ,இது கூட மூன்று பல்லு பூண்டு போடுங்க .பூண்டு பச்சை வாசம் போன பின்னர் .வெட்டிய தக்காளி போடுங்க .இப்போ இது கூடவே மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் பண்ணுங்க .

                      தக்காளி கூட வதங்கிய பின்னர் ,மிளகை தூள், மல்லி தூள் ,கரம் மசாலா சேர்த்திருங்க .இதில் மசாலா நனறாக வாதங்கணும் .மசாலா பச்சை வாசம் போன பின்னர் தண்ணி கலந்திருங்க .

                      இப்போ வெட்டிய தேங்காய் சேர்த்திருங்க .கட்டியாக வேண்டும் என்றால் தண்ணி சேர்க்காதீங்க .மூடி போட்டு மூடி வைத்து வேகி வரும் வரை காத்திருங்க .
                      இப்போ பொடியாக்கி வெட்டிய கொத்த மல்லி இலை போடுங்க .இப்போது தக்காளி குருமா சாப்பிட ரெடியாடிச்சு .

                      சப்பாத்தி செய்வது எப்படி செய்முறை மூன்று

                      சப்பாத்தி செய்திட கோதுமை மாவு ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க .உப்பு மாவில் கலந்து கொள்ளும் படி கலந்திருங்க .இப்போ மாவில் தேவையான தண்ணி விட்டு கொள்ளுங்க .
                      மாவிலை தண்னி கூட கூடாது .மாவை நன்றாக பிசைந்து வாங்க ,நன்றாக பிசைந்தால் தான் ,சப்பாத்தி ஈசியாக வரும் ,பொங்கி நன்றாக வரும் .

                      இப்போ மா மேலே எண்ணெய் போட்டு பிசைந்து வாங்க .அதன் பின்னர் ,இப்போ பூரி கட்டையில் போட்டு பிசைந்து வாங்க .
                      நன்றாக அழுத்தி பிசைந்து கொள்ளுங்க ,மா நன்றாக சாப்டா வரணும் ,அப்போ தான் சப்பாத்தி நன்றாக வரும் .

                      மாவை நன்றாக உருட்டி போட்டு சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து கொள்ளுங்க .மாவை நன்றாக உருட்டி வைத்திருங்க .

                      மாவை நன்றாக மடித்து உருட்டுங்க .இப்போ பூரி கட்டையில் வைத்து .மேல கொஞ்சம் கோதுமை மா தூவி, பூரி கட்டை வைத்து தேய்த்து கொள்ளுங்க

                      முடிந்த வரை பூரி கட்டையை வைத்து வட்டமா சப்பாத்தியை எடுத்து கொள்ளுங்க .இப்படி பண்ணிறதால நல்ல சப்பாத்தி கிடைக்கும் .

                      இந்த சப்பாத்திக்கு , தோசை கல்லை சூடாக்கி ,அதில் போட்டு ,இரண்டு பக்கம் பொங்கி வரும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்.

                      வேகி வந்ததும் அதை எடுத்து கொள்ளுங்க .இப்போ சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு .
                      இப்போ இந்த சப்பாத்தி குருமா வீட்டில் உள்ளவங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .செமையான சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு ,

                      வாங்க நண்பர்களே சுவைத்து சாப்பிடலாம் .