Tag: மாப்பிள்ளை
பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song
பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song
பிரான்ஸ் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்த்தாச்சு| France maappilaikku Ponnu paarthaachu |506Ai Tamil Song என்கின்ற பாடலை தியாகி அவரகள் எழுதியுள்ளார் .
அற்புதமான வரிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு மாப்புள்ள திருமணம்

வெளிநாட்டு மாப்புள்ள திருமணம், நிகழ்கால சம்பவங்களை மையமாக வைத்து இந்த புதிய பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிகமான பாடலக்ளை எழுதி தற்போது முதலாம் இடத்தில தியாகி அவர்கள் நிலை பெற்றுளளர் .
ஒவ்வொரு விடயங்களை பேசும் பாடலாக உள்ளது
இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயங்களை பேசும் பாடலாக உள்ளது இவருக்கான தனி சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
தூத்துக்குடி அருகே சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான மணமகன் தலையில் வெட்டுக்காயத்துடன்
சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெகதீஷ். உப்பள தொழிலாளியான ஜெகதீஷுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.
காலையில் திருமண சடங்குகள் செய்வதற்காக வீட்டில் இருந்த மாப்பிள்ளை ஜெகதீஷை தேடிய போது அவரை காணவில்லை. இதையடுத்து
செய்வதறியாது திகைத்து போன மாப்பிள்ளை வீட்டார் அக்கம்பக்கத்தில் தேடினர். நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தனர்.
தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
இந்த நிலையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீஷின் தந்தையை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர், உங்கள் மகன்ஓடை பாலம் சந்திப்பில் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பதறிபோய் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் சென்று பார்த்த போது , மணவறையில் புது மாப்பிள்ளையாக அமர வேண்டிய மகன், தலையில்
வெட்டுக்காயத்துடன் பிணவறையில் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை கண்டு கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெகதீஷின் முன்பக்க தலையில் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கைகால்களில்
சிராய்ப்பு காயங்களோ, வேறு பலமான காயங்களோ இல்லை என்றும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலனிடம் , அவர் வீட்டில் இருந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தார் ? எதற்காக வந்தார்? யார் அழைப்பின் பேரில் வந்தார் ? தனியாக வந்தாரா அல்லது உடன் வேறு நபர்கள் வந்தார்களா ?
என்பதை கண்டறிய செல்போன் தொடர்புகளை வைத்து ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விபத்து வழக்கில் அதுவெல்லாம் முடியாது என்பது போல அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஜெகதீஷின் உறவினர்கள், அங்கிருந்த பொலிசாரிடம் இது கொலை, தங்கள் மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறான், நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து என்றும் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்
மோதியதில் தலையின் முன் வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் விபத்து பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது ஊரில் இருந்து
விபத்து இடத்தில் வரை பொறுத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்ய தெரிவித்துள்ளதாகவும், அவர் என்ன
காரணமாக வீட்டில் இருந்து இந்த பகுதிக்கு வந்தார்?
என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
அதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்
‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,
தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.
வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற
தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி
தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.
என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்
திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்
திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.








