மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
Posted in சமையல் சமையல் cook

மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu

மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu

மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu ,மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்..
மீனை வெட்டி உப்பு மஞ்சல் போட்டு கழுவவும் .

Fish – விளை மீன் 1kg
Onion – வெங்காயம் 1
Green Chilli – பச்சை மிளகாய் 3
Fenugreek – வெந்தயம் 1 tablespoon
Tamarind – புளி
Curry leaves – கருவேப்பிள்ளை
Chilli powder – மிளகாய் தூள் 3 tablespoon
Salt – உப்பு
Coconut milk – தேங்காய் பால்
Garlic – உல்லி 3 cloves
Cumin Seeds – சின்னசீரகம் 1 tablespoon

சிறிதளவு எண்ணெய் விட்டு கருவேப்பிளை , பெரியசீரகம் , வெந்தயம் , பச்சைமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும் பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் .


பின்னர் அதில்புளி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும், பின்னர் அதில் கெட்டியான தேங்காய் பால் விட்டு கொதிக்கவிடவும், கொதித்த குழம்பில் மீன் துண்டுகளை போட்டு வேக விடவும் ..

சிறிது நேரத்தில் சுவையான மண் சட்டி மீன் குழம்பு தயார்.

video

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry
Posted in சமையல் சமையல் cook

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry ,இந்த மீன் குழம்பு இதுபோல செஞ்சு சாப்பிட்டா வீடே மணக்கும் மக்களே .

இப்படி மீன் குழம்பு பண்றதுக்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

இது கூடவே ஒரு கைப்பிடி அளவு பூண்டு பற்கள் சேர்த்துட்டு, கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கோங்க .

ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க ,அதுல என்ன சேர்த்துக்கோங்க , மீன் குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்த்து பண்ணும்போது ,டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

கடை சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி |How to Cook MEEN KULAMBU

3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க ,. எண்ணெய் சூடான அதுக்கப்புறம் ,ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்திடுங்க , கடுகு பொரிஞ்சதும் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கோங்க ,

கூடவே கால் டீஸ்பூன் கம்மியா சோம்பு சேர்த்துக்கோங்க, தாளிதம் எல்லாம் நல்லா புரிஞ்சதுக்கப்புறமா ,ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .

அது கூடவே நம்ம அரைச்சு வச்சிருக்க வெங்காயம் பூண்டு பேஸ்ட் இருக்குல்ல அதையும் சேர்த்துருங்க ,சேர்த்துட்டு இதை நல்லா வதக்கிக்கோங்க.

கூட ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து ,நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க, உப்பு சேர்த்து வதக்கும்போது வெங்காயம் இதெல்லாம் சீக்கிரமாக வதங்கிடும் .

வெங்காயம் பூண்டோட பச்சை வாசனை முழுமையா போகணும் அதுவரைக்கும் மாத்தி மாத்தி வெச்சிட்டு வதக்கிட்டு இருக்கணும்.

வெங்காயம் முழுமையா பச்சை வாசனை போனதுக்கு அப்புறமா ஒன்னு ரெண்டா அரைச்சு வச்சிருக்க தக்காளி பேஸ்ட் சேர்த்துக்கோங்க.

Fish Curry How to Cook

மூணு மீடியம் சைஸ் அளவு தக்காளியை இந்த மாதிரி ஒன்னு ரெண்டா அரைச்சுட்டு சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,தக்காளியோட பச்சை வாசனை போற வரைக்கும் இது நல்லா வேக வச்சுக்கோங்க .

இப்ப இதுல மசாலா பவுடர் எல்லாம் சேர்த்துரலாம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க, கூடவே 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கோங்க ,

மஞ்சள் தூள்சேர்த்துட்டு லோ பிளேம்லயே வச்சு இது நல்லா வதக்கிக்கோங்க, மசாலாவோட பச்சை வாசனை போகணும்.

ரெண்டு நிமிஷத்துக்கு வதக்குனா போதும் , மசாலா எல்லாம் நல்லா வதங்கிருச்சு , இது கூட புளிக்கரைசல் சேர்த்துக்கோங்க .

அப்புறமா என்ன பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க ,அதுக்கப்புறம் தண்ணீர் சேர்த்துக்கோங்க,

தண்ணீர் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க , இப்ப நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேகவச்சுக்கோங்க .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

வாய்க்கு சுவையான மீன் குழம்பு

அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,

அதுக்கப்புறம் மீன் துண்டுகளை உள்ள சேர்த்துருங்க, மெதுவா சேர்த்துக்கோங்க ஒன்னோட ஒன்னு ஒட்டாம கொஞ்சம் தள்ளி தள்ளி சேர்க்க பாருங்க .

மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க.

மீன் வந்து சீக்கிரமாவே வெந்துரும் ,அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல எண்ணெய் பிரிஞ்சுட்டு குழம்பு சூப்பரா தயாராகி வந்து இருக்கு .

இப்ப நம்ம சுட சுட வெள்ளை சாதத்துக்கு கூட வச்சு சேவ் பண்ணலாம் இ,ந்த குழம்பு வந்து ரொம்ப ரொம்ப டேஸ்டியா இருக்கும் மக்களே .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
Posted in சமையல் cook

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி

நம்ம வீட்டில் கடை சுவையில் , சுவையாக இலகுவானா முறையில் மீன் குழம்பு செய்யலாம் வாங்க.


மீன் குழம்பு வைப்பது எப்படி ,என கவலை படாதீர்கள் ,

அனைவரும் மிக இலகுவாக மீன் குழம்பு வைப்பது எப்படி என்பாதை இதில் பார்க்கலாம் .


இந்த மீன் குழம்பு சமைத்திட தேவையானா பொருட்கள் .
மீன் ,புளி ,வெங்காயம் ,பெரும் சீரகம் ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மிளகாய் தூள் ,
கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை ,தேங்காய் பால் அல்லது தண்ணீர் .

இலங்கை வெளிநாட்டு முறையில் மீன் குழம்பி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .


முதல்ல மீனை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்திடுங்க
அப்புறம் அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,தேவையான எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .

அப்புறம் பெரும் சீரகம் ,பூண்டு ,வெங்காயம் ,பச்சை , மிளகாய் ,கருவேப்பிலை யாவரும் போட்டு வதக்கி கொள்ளுங்க .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி
மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி


அவை வதங்கி வந்த பின்னர் ,அதோடு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்க .அதன் பின்னர் வெடி வைத்த மீனை அதற்குள் போட்டு கலக்கி கொள்ளுங்க .அப்புறம் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொள்ளுங்கள் ,

அதன் பின்னர் தேவையான அளவு தேங்காய் பால் ,அது இல்லை எனின் தேவையான நன்றாக வேக வைத்திடுங்க ,சுவைக்கு ஏற்ப உப்பு பார்த்து .இறக்கிடுங்க ,அம்புட்டு தாங்க .

இந்த செய்முறையை நன்றாக உள்வாங்கி செய்து பாருங்க செம சுவையாக இருக்கும் மக்களே .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்.இலகுவான மீன் குழம்பு செய்முறை எச்சி ஊறும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
Posted in சமையல் cook

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ..? இது போல மீன் செஞ்சா வீடே மணக்கும் ,
அவ்வாறான தரணமான மிகவும் சுவை தரவல்ல மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

மீன் குழம்பு செய்வது எப்படி .

மீனை நனறாக வெட்டி கழுவி ,அதன் பின்னர் மஞ்சள் தூள் போட்டு கலக்கி நன்றாக ஊற வைத்திடுங்க .


சுவையாக மீன் குழம்பு வருவதற்கு காரணம் புளி தாங்க .அவ்வாறான புளியை நீரில் போட்டு ஊற வைத்து வடித்து எடுத்து வைத்திடுங்க .

கரைத்து வடித்த புளிக்குள்ள இப்போ ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,மூணு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி சீராக தூள் ,அரை கரண்டி சோம்பு தூள் ,
ஒரு கரண்டி உப்பு ,சேர்த்து இப்போ எல்லாத்தையும் நன்றாக் கலக்கிடுங்க .

நன்றாக் கலக்கிய பின்னர் ,அதற்குள் தேவையான பச்சை மிளகாய் ,கூடவே கருவேப்பிலை சேர்த்திடுங்க .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

அதன் பின்னர் இரண்டு தக்காளி நனறாக பொடியாகி வெட்டி தட்டு ஒன்றில் வைத்திடுங்க .

இப்போ மீன் குழம்பு செய்வதற்கு ,அடுப்பில கடாய வைத்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகா சூடாக்கிடுங்க .

எண்ணெய் சூடானதும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பெரிய வைத்திருங்க ,அதுகூட பெரிய வெங்காயம் ,பூண்டு நன்றாக பொடியாக்கி ,அது கூடவே பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,யாவரும் போட்டு நன்றாக வதக்கி வாங்க .

வெங்காயம் கலர் மாறி வந்ததும் ,மசித்து வைத்த தக்காளியை சேர்த்திடுங்க .அதன் பின்னர் கரைத்து வைத்த புளிகூட்டு கலவையை இப்போ ஊற்றி நன்றாக கலக்கிடுங்க .

மசாலா பச்சை வாசம் போனதன் பின்னர் ,இப்போ மாங்காய் ,மற்றும் மீனை போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

இப்போ மீனும் மாங்காயும் ,வேகி வருவதற்கு ஐந்து நிமிடம் விட்டிருங்க .
அதன் பின்னர்,தாளிப்பு வடகம் ,வெங்காய வடகம் எண்ணையில் பெரிய வைத்து, இப்போ இதில சேர்த்திடுங்க .

இப்போ மிக சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .

இதனை சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்டா சும்மா பிச்சுக்கிட்டு போகும் தலைவரே .

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in சமையல் cook

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

செட்டிநாடு மீன் குழம்பு வீட்டில் இப்படி செய்தால் .உடனே கறி காலியாகும் .
அம்புட்டு சுவையும் இந்த செட்டி நாடு மீன் குழம்பில் இருக்குதுங்க .

அவ்வாறான தரமான ,அட்டகாசமான ,செட்டி நாடு மீன் குழம்பு, செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செட்டி நாடு மீன் குழம்பு செய்முறை .

அடுப்பில பாத்திரம் வைத்து ,அதில் எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சின்ன வெங்காயம் உரித்து எடுத்து ,வைத்ததை அப்படியே அந்த எண்ணையில் கொட்டி விடுங்க .


வெங்காயம் நன்றாக வதங்கி வரும் வரை வதக்கிடுங்க .

இப்போ இது கூட ஐந்து பல்லு பூண்டு போடுங்க ,.இப்போ வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,கூடவே உப்பு சேர்த்திருங்க .

இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ மஞ்சள் தூள் ,காரத்திற்கு மிளகாய் தூள் ,தனியா தூள் ,குழம்பு மிளகையே தூள் ,இப்போ இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி வாங்க

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்

குழம்பு திக்காய் இருக்க .இப்படி பண்ணுங்க ,கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு வறுத்திடுங்க .

இப்போ ரெடியாகிடிச்சு ,இப்போ மிக்சியில் போட்டு தண்ணி கொஞ்சம் விட்டு அரைத்து எடுங்க .இப்போ மசாலா ரெடியாடிச்சு .

செய்முறை இரண்டு .

புளியை நீரில் ஊற வைத்து கொள்ளுங்க ,மீன் குழம்புக்கு புளி தாங்க முக்கியம் .

இப்போ அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங் கடுகு ,வெந்தயம் சீரகம் போட்டு தாளியுங்க ,வெட்டி வைத்த சின்ன வெங்காயம் ,பூண்டு ருவேப்பிலை போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் பூண்டு கண்ணாடியான பதம் வந்ததும் , அரைத்து வைத்த மசாலாவை சேர்த்திடுங்க ,நனறாக எண்ணெய் வரும் வரைக்கும் வதக்கி வாங்க .

இப்போ இது கூட கரைத்து வைத்த புளிய விடுங்க ,இப்போ இதற்கு தேவையான தண்ணீரை சேர்த்திடுங்க .
ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,தேங்காய் பால் விடுங்க .

இப்போ குழம்பு கொதிக்குது ,மீனை போடுங்க ,மீன் ஐந்து நிமிடம் வேக விட்டால் போதும் ,மீன் போட்ட பின்னர் அகப்பை அல்லது கரண்டி வைத்து கிளறி விடாதீங்க .மீன் உடைந்து போகும் .

இப்போ செட்டி நாடு மீன் குலமப்பு ரெடியாகிடைச்சி .இட்லி தோசை பரோட்டோ சோறு கூட வைத்து சாப்பிடுங்க .

இது தாங்க செட்டி நாடு மீன் குழம்பு ரெடியாகிடிச்சி .இப்படி செய்து அசத்துங்க மக்களே .

நம்ம சமையல் தமிழில் இது போல சமையலை பார்த்து சுவைத்து மகிழுங்க .

Posted in குற்ற செய்திகள்

மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

வருகிற 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த

ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 17-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த்

வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார்.

அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில்

சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு

பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.