யாழ் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞன் கைது

யாழ் இளைஞன் கைது


யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய

கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

திருகோணமலை நீதிமன்றம்

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,

விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்

பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது

கேரள கஞ்சா சிக்கியது கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள கஞ்சா பறிமுதல்

இதன்போது அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணை களுக்காக

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

என் செய்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் செய்வேன்

என் செய்வேன்

தொட்டு பேசிட வந்தால்
தொட முன் ஏன் முறைக்கின்றாய்
கட்டு கடங்கா காதலித்தால்
காதலை ஏன் வெறுக்கின்றாய்

முட்டி பேசிட வந்தால்
முன்னே வர மறுக்கின்றாய்
விட்டு விலகிட நினைத்தால்
விழுந்தேன் அழுகின்றாய்

தட்டி தழுவும் மழை துளியாய்
தரையில் ஏன் விழுகின்றாய்
கட்டி தழுவிட நினைத்தால்
கத்தி ஏன் முறைக்கின்றாய்

கட்டி தாலி தொழுதுவிடு
கரம் கூப்பி வேண்டுகிறாய்
இப்படி என்னை தண்டித்தால்
இதயமே என் செய்வேன் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-06-2024

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம்

6பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் ,முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.

தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்
Posted in உலக செய்திகள்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம்

மோடி ராஜினாமா கூட்டணி பேரம் இந்தியா தேர்தல் முடிவுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது மோடி கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறார் .

காணொளியில் விபரம்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம்

இஸ்ரேல் இராணுவம் தாக்குதலில் காயம் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

தெற்கு காசா வழியாக முன்னேறிய படைகளை வழிமறித்து பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கமான ஹமாஸ் நாடத்திய தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு பெரும் இழப்பது ஏற்படுத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு

என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீதிகளை புனரமைக்க நிதி
Posted in இலங்கை செய்திகள்

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி

வீதிகளை புனரமைக்க நிதி பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும்

ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய

இராஜாங்க அமைச்சர்

வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் இருந்து சுமார் 12 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, கிராமிய வீதிகளையும்,

பாலங்களையும் அமைக்கின்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எமது அமைச்சின் ஊடாக சுமார் 65 சதவீதமான பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. எதிர்வரும் நாட்களில்

இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்து கிராமங்களுக்கு அவற்றின் பலனைக்கொண்டு சேர்ப்பதற்கு அவசியமான விடயங்களை அமுல்படுத்தி வருகிறோம்.

வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறை

கடந்த வருடங்களில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதோடு மக்களின் வருமானத்தையும் உயர்த்தி, கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.

எனவே இவ்வாறு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரமும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும்.

மேலும், தற்போது நாட்டின் அதிகமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன.

எனவே வெள்ளத்தால் சேதமைடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க ஜனாதிபதி சுமார் 03 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கை

அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேப்படுத்துவதற்கான பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றோம்.

முக்கியமாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை வென்று, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்து மக்கள்

பாவனைக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

அதிகமான விபத்துகள் இடம்பெறும் வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் பணிகள் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு

நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.

அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக

நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.

முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார்.

மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார்.

இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”

என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

அதிகரிக்கும் டெங்கு அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு அபாயம்

அதிகரிக்கும் டெங்கு அபாயம்

அதிகரிக்கும் டெங்கு அபாயம் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொ க்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

“டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை

மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

இங்கிருந்து கொசுக்கள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

மேலும், கொசுப்புழுக்கள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவித்தார்

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை அரிசி

இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல்

ரொக்கட் தாக்குதலினால் அதிரும் இஸ்ரேல் எரியும் வடக்கு இஸ்ரேல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம் ஹிஸ்புல்ல போராளிகள் நூறு ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதிகள் பற்றி எரிகின்றன .

இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதலை அடுத்து தற்போது மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மோதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் கொடூர தாக்குதலை அடுத்து ,தற்போது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

மிக பெரும் ரொக்கட் தாக்குதல்

சற்றும் எதிர்பார்த்த மிக பெரும் ரொக்கட் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை திணறடித்து வருகின்றனர் .

சிவப்பு கோட்டை ஹிஸ்புல்லா கடந்து விட்டது அவர்கள் மீது அகோர தாக்குதலை நாடத்துவோம் என இஸ்ரேலை அறிவித்த 48 மணித்தியாலத்தில் ,எமது சிவப்பு கோடு இது தான் என்பதை இடித்து உரைத்துள்ளது .ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் .

இஸ்ரேல் 10 மில்லியன் டொலர் பெறுமதியான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்த 24 மணித்தியாலத்தில் சுனாமி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம்.

ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை பெறுவது எமது உரிமை.

தலைவர் மனோ கணேசன்

அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்

என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்..

இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது,

நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க

இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும். நாய், நரி, பூனை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு, மாவட்ட

இரத்தினபுரி நகரசபை

அமைப்பாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில், இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடை பெற்றது இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எனது எம்பிக்கள் அவ்வந்த மாவட்டங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களாக இருக்க்க வேண்டும். தமிழ் மொழியுடன் சிங்களமும் பேச வேண்டும்.

எமது துன்பம், துயரம், கஷ்டம், கண்ணீர் ஆகியவற்றை சிங்கள மொழியில் நாட்டுக்கு கேட்கும் விதமாக அவர்கள் உரக்க கூற வேண்டும்.

நான் அதைதானே செய்கிறேன்? அப்படிதான் எங்கள் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதைதான் வேலுகுமார் செய்கிறார்.

எங்கள் மாவட்ட அமைப்பாளர்கள் இரத்தினபுரி சந்திர குமார், கேகாலை பரணிதரன், கம்பஹா சசி குமார், கொழும்பு பாலசுரேஷ், களுத்துறை அன்டன் ஜெயசீலன் ஆகியோர் செய்வார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியாவில், வடக்கில், கிழக்கில் பிரச்சினை இல்லை. ஆனால், நாம் சிறுபான்மையாக வாழும் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிலைமை சவால் மிக்கது.

இம்மாவட்டங்களில் எமது கடும் முயற்சியால் தமிழ் பிரதிநிதித்துவங்களை எமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள் என்றார்.

இந்திய தேர்தல் இன்று முடிவு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு இந்தியாவில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார்.

மூன்றாவது பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை தொடர்பான ‘100 நாள் நிகழ்ச்சி நிரல்’ கூட்டத்தை பிரதமர் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தினார்.


பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம்

இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது

மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்றார்.

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “சித்து மூஸ்வாலாவின் பாடலைக் கேட்டது உண்டா- 295” என்றார்.

மறைந்த பஞ்சாப் மாநிலப் பாடகர் சித்து மூஸ்வாலா ‘295’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Error: View 9293b2au4w may not exist
காரைதீவில் சிரமதானம்
Posted in இலங்கை செய்திகள்

காரைதீவில் சிரமதானம்

காரைதீவில் சிரமதானம்


காரைதீவில் சிரமதானம் ,தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு

பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காரைதீவு-02, 03, 05 ம் பிரிவுகளின் தோணாவின் சூழலை தூய்மையாக்கப்பட்டதுடன் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில்

முறைகேடாக குப்பை கூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்ததுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை,

காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
Posted in இலங்கை செய்திகள்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்

மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம்

மக்களை இழுத்து சென்ற வெள்ளம் ,வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) மாலை இந்தச் சம்பவம் எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை ,சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலை களை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலை குறைப்பு

எரிவாயு விலை குறைப்பு

எரிவாயு விலை குறைப்பு நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.

5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் இந்த விலை குறைப்புக்கள் அதிரடியாக நடத்த படுகின்றன .

தேர்தல் முடிவுற்றதும் மீளவும் வானை நோக்கி விலைவாசிகள் உயர்வடையும் என்பதனை இப்பொழுதே அடித்துக்கூறலாம் .

கடந்த முறை இடம்பெற்ற தேர்தல் காலத்திலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றன .

அதே போன்று இப்பொழுது மீளவும் இந்த விடயங்கள் கடை பிடிக்கப்படலாம் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .