Tag: மருமகன்
மருமகன் ரிஷி சுனக்கின் “நல்ல இந்திய கலாச்சார விழுமியங்கள்” பற்றி சுதா மூர்த்தி பாராட்டினார்
மருமகன் ரிஷி சுனக்கின் “நல்ல இந்திய கலாச்சார விழுமியங்கள்” பற்றி சுதா மூர்த்தி பாராட்டினார்
மருமகன் ரிஷி சுனக்கின் “நல்ல இந்திய கலாச்சார விழுமியங்கள்” பற்றி சுதா மூர்த்தி பாராட்டினார்
பிரபல எழுத்தாளரும், ராஜ்யசபா எம்பியுமான சுதா மூர்த்தி தனது மருமகன் ரிஷி சுனக், இங்கிலாந்தில் தனது பெற்றோரின் வளர்ப்பில் இருந்து “நல்ல இந்திய கலாச்சார விழுமியங்கள்” கொண்ட ஒரு பிரிட்டிஷ் குடிமகனைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.
சனிக்கிழமை மாலை லண்டனில் நடந்த பாரதிய வித்யா பவனின் ஆண்டு தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினராக ரிஷி சுனக் மற்றும் அவரது மகள் அக்ஷதா மூர்த்தி ஆகியோருடன் சுதா மூர்த்தி இணைந்தார்.
பிரிட்டிஷ் இந்திய முன்னாள் பிரதம மந்திரி உஷா மற்றும் யஷ்வீர் சுனக் ஆகியோரின் பெற்றோர்களும் பார்வையாளர்களில் இருந்தனர், பவன் UK மாணவர்கள் பல்வேறு இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன வடிவங்களை காட்சிப்படுத்தினர்.
“நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, உங்கள் பெற்றோர் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்: ஒன்று நல்ல கல்வி, அது உங்களுக்கு இறக்கைகளைத் தருகிறது, நீங்கள் எங்கும்
பறந்து குடியேறலாம்; இரண்டாவது சிறந்த கலாச்சாரம், உங்கள் பூர்வீகம் இந்திய வம்சாவளி அல்லது வேர்கள். நீங்கள் உங்கள் பெற்றோருடன் பாரதிய வித்யா பவனில் வரலாம்” என்று சுதா மூர்த்தி தனது முக்கிய உரையை நிகழ்த்தினார்
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் (04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாமாவை வெட்டிக்கொலை செய்த மருமகன்
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும், சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
மாமனாரை கொலை செய்த மருமகன்
மாமனாரை கொலை செய்த மருமகன்
குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமியை வெட்டி கொன்ற மருமகன்
மாமியை வெட்டி கொன்ற மருமகன்
இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .
குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது




















