யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை

யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை

யாழ் திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை திகிலூட்டும் பின்னணி! சிறையில் இருந்தே திட்டமிட்ட சதி! 6 பேர் கைது.


யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீதியில் துரத்தித் துரத்தி இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

படுகொலையின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சிறைச்சாலையில் உருவான கொடூரத் திட்டம்!


கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல்

கைதி ஒருவரின் முழுமையான திட்டமிடலுடனும், அறிவுறுத்தலின் பேரிலுமே நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கொலை நடப்பதற்கு முதல் நாள் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாக்குதலுக்கான ஒத்திகை (Trial Run) கூட நடத்தப்பட்டுள்ளது!


பல வருட பகைக்கு இரையான இளைஞன்:


கொல்லப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வரும் இரு வன்முறைக் கும்பல்களுக்கு இடையேயான பகையின் தொடர்ச்சியாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக, கொக்குவில் சந்தைக்குள் ஒரு இளைஞனைத் தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தன்னைக் கைது செய்யக் காரணமாக இருந்தவர்கள் மீது பழிவாங்கவே சிறையில் இருந்த நபர் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.


சந்தர்ப்பம் அறிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, தகவல்

பரிமாற்றத்திற்காகப் புதிய சிம் அட்டைகள் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நடந்தது என்ன?

மழையில் நடந்த மிரட்டும் கொலை!


சம்பவ தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை), இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, திருநெல்வேலி சந்தைக்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறிக்க முயற்சித்துள்ளது.


இளைஞன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீதியில் ஓடியபோது, வழிமறித்தவர்களும், பின்னால் துரத்தி வந்தவர்களும் வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.


தப்பிக்க வழியின்றி, வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த இளைஞனின் காலை, கொலையாளிகள் கணுக்காலுடன் வெட்டித் துண்டித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்தார்.


காவல்துறையின் துரித நடவடிக்கை:


கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் துரித விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர், தாக்குதலாளிகள் வாகனமொன்றில் வன்னிப் பகுதிக்குள் பயணித்த வேளையில் மடக்கிப் பிடித்தனர்.


தற்போது, இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உதவிய வாகனச் சாரதி, திட்டமிட்ட கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த நபர், மற்றும் வேவு பார்த்தவர்கள் ஆகியோர் அடங்குவர்.

தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த வன்முறைக் கலாச்சாரம் குறித்தும், யாழ்ப்பாணத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்தும் உங்கள் கருத்து என்ன?.

ஆயுதங்களுடன் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் இளைஞன் கைது

ஆயுதங்களுடன் இளைஞன் கைது

ஆயுதங்களுடன் இளைஞன் கைது ,கொட்டாவை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) போதைப்பொருள் தொகை மற்றும் பெருமளவிலான ஆயுதங்களுடன் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் சிறப்புப் படை (STF) நடத்திய சோதனை

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலிஸ் சிறப்புப் படை (STF) நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது

செய்யப்பட்டார், இதன் போது அவரிடம் 75.4 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து 458 உயிருள்ள வெடிமருந்துகள், ஒரு T-56 மகசின், 30 போலி வாகன எண் தகடுகள், 15 வருவாய்

உரிமங்கள், 15 காப்பீட்டு ஆவணங்கள்

உரிமங்கள், 15 காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர் மொரட்டுவை, அங்குலானையில் வசிக்கும் 24 வயதுடையவர்.

அவர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

16பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது

16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது ,மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது

பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை

அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள்

முறைப்பாடு செய்ததற்கு அமைய முன்னெடுத்த விசாரணையில் குறித்த இளைஞனே அதனை திருடியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.

தங்க ஆபரண விற்பனை நிலையம்

இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இளைஞன் வீட்டில் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 16 பவுண்கள் கொண்ட 8 தங்க காப்புக்களை திருடி எடுத்துக் கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து அதனை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை

ஒன்றில் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு அதில் 6 இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி ஒன்றையும் வாங்கியதுடன்,

ஏனைய பணத்தில் உடைகளை வாங்கியுள்ள அதேநேரத்தில், உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்

இளைஞன் கடத்தி தாக்குதல்

வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.

வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் ,யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேரூந்து

https://www.youtube.com/@vannimainthanநிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ்

நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயதான இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்

, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட

ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது

இளைஞன் அடித்துக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் அடித்துக்கொலை

இளைஞன் அடித்துக்கொலை


இளைஞன் அடித்துக்கொலை ,கெட்ட பொல என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் பொல்லுகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இளைஞனை பொல்லுகளால் அடித்து கொலை செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில்,கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தர என்றழைக்கப்படும், 25 வயதுடைய சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், திருமணமாகாத நபராவார்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், இவர், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு கடத்தலில்

ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கடைக்கு முன்னால் நடத்தப்பட்ட சூதாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவரது மாமாவால்

பொல்லுகளால், தாக்கப்பட்டதில் மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம் ,வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறித்த நபர் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன்

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இளைஞன் ,அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்

விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்

விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் ,ராகமவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்

ராகம, தெவத்தையில் இருந்து தம்புவ சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம, கண்டலியத்த பலுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் ,சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

யாழ் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞன் கைது

யாழ் இளைஞன் கைது


யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய

கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

திருகோணமலை நீதிமன்றம்

இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,

விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்

பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர், நேற்று

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்

பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்

காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.

மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்

சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இளைஞனை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக
வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

No posts found.