Tag: கேரள கஞ்சா
கேரள கஞ்சா சிக்கியது
கேரள கஞ்சா சிக்கியது
கேரள கஞ்சா சிக்கியது கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சா பறிமுதல்
இதன்போது அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.
கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணை களுக்காக
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Featured
யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா
யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் (15) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 181 கிலோ கிராம்
எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரையை
உள்ளடக்கி, கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா
இதன்படி, யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வடக்கு கடற்படை கடற்படை பிரிவுமேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. அங்கு, 04 பைகளில் 900
கிராம் பொதி செய்யப்பட்ட 181.900 கிலோ கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) ஒரு சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது..
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 60 மில்லியன் ரூபாவாவுக்கும் அதிகம் என்றும் நம்பப்படுகின்றது.
மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29
வயதுடைய சந்தேக நபர், யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.














