சிக்கன் புரியாணி செய்யும் முறை
Posted in சமையல் சமையல் cook

சிக்கன் புரியாணி செய்யும் முறை

சிக்கன் புரியாணி செய்யும் முறை, கடை சுவையில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி வாங்க பார்க்கலாம் .

சிக்கன் புரியாணி செய்யும் முறை ..
தேவையான பொருட்கள்
அரிசி 2 கப்
சிக்கன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
நெய் 2 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
கராம்பு 4
ஏலக்காய் 4
புரியாணி இல்லை 4
அன்னாசி பூ 3
இஞ்சி 2 துண்டு
உல்லி 4 பல்லு
மஞ்சல் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
மல்லி இலை
புதினா இலை

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும், அதில் நெய் சேர்த்து கொதிக்க விடவும். அதில் கறுவா, கராம்பு, ஏலக்காய், புரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் இடித்த இஞ்சி உல்லி போட்டு சில நிமிடம் விடவும்.


பின்னர் அதற்க்குள் வெட்டிய வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும் .

பிறகு அதனுள் உப்பு மற்றும் வெட்டிய தக்காளியை போட்டு கரையும் வரை வதக்கவும்.

பின் அதனுள் மிளகாய்த்தூள் போட்டு தூள் வெக்கை அடங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் தயிர் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும் பிறகு அதில் சிக்கனை போட்டு 10-15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.


சிக்கன் ரெடி ஆகும் வரை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து 20 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை போட்டு 70% அவிய வைத்து வடிச்சு எடுக்கவும்.


பின்னர் தயார் ஆகி இருக்கும் பிரியாணி கலவையில் சோற்றை போட்டு மெதுவாக கிளற வேண்டும், இப்போ சுவையான சிக்கன் பிரியாணி தயார். அன்போடு பரிமாறவும் .

காணொளி

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்

கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம்.

ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை பெறுவது எமது உரிமை.

தலைவர் மனோ கணேசன்

அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்

என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்..

இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது,

நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க

இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும். நாய், நரி, பூனை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு, மாவட்ட

இரத்தினபுரி நகரசபை

அமைப்பாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில், இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடை பெற்றது இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எனது எம்பிக்கள் அவ்வந்த மாவட்டங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களாக இருக்க்க வேண்டும். தமிழ் மொழியுடன் சிங்களமும் பேச வேண்டும்.

எமது துன்பம், துயரம், கஷ்டம், கண்ணீர் ஆகியவற்றை சிங்கள மொழியில் நாட்டுக்கு கேட்கும் விதமாக அவர்கள் உரக்க கூற வேண்டும்.

நான் அதைதானே செய்கிறேன்? அப்படிதான் எங்கள் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதைதான் வேலுகுமார் செய்கிறார்.

எங்கள் மாவட்ட அமைப்பாளர்கள் இரத்தினபுரி சந்திர குமார், கேகாலை பரணிதரன், கம்பஹா சசி குமார், கொழும்பு பாலசுரேஷ், களுத்துறை அன்டன் ஜெயசீலன் ஆகியோர் செய்வார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியாவில், வடக்கில், கிழக்கில் பிரச்சினை இல்லை. ஆனால், நாம் சிறுபான்மையாக வாழும் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிலைமை சவால் மிக்கது.

இம்மாவட்டங்களில் எமது கடும் முயற்சியால் தமிழ் பிரதிநிதித்துவங்களை எமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள் என்றார்.