Tag: சிரமதானம்
காரைதீவில் சிரமதானம்
காரைதீவில் சிரமதானம்
காரைதீவில் சிரமதானம் ,தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு
பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது காரைதீவு-02, 03, 05 ம் பிரிவுகளின் தோணாவின் சூழலை தூய்மையாக்கப்பட்டதுடன் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில்
முறைகேடாக குப்பை கூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.
இதன் போது காரைதீவு பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்ததுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை,
காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.
Featured
துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள்
மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





















