இஸ்ரேல் கைதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி

இஸ்ரேல் கைதிகள் பலி யாகியுள்ளதக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .பாலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளில் நால்வர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பலியான நால்வரும் வயோதிபர்களாக காணப்படுகின்றனர் .

நிரந்தர போர் நிறுத்தம்

நிரந்தர போர் நிறுத்ததை ஏற்படுத்த மறுத்த கைதிகளை விடுவித்த பின்னர் ,மிக பெரும் தாக்குதலை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் மீது நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது மக்கள் ,இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக லட்ச கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் .

கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்பு

அவ்வாறன நிலையில் தற்போது கைதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் ,கைதிகள் உறவினர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

என்ன விலை கொடுத்தாவது கைதிகளை விடுவிக்கும் படி கோரப்பட்ட நிலையில் ,அதனை தட்டி கழித்து வந்த இஸ்ரேலுக்கு தற்போது ,கைதிகள் இறப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்

எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் வாகனம்

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு

இஸ்ரேல் பாடசாலைகள் அடித்து பூட்டு

Error: View 9293b2au4w may not exist
எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்

எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல்


எண்ணிக்கையில் அல்ல எண்ணத்திலே தான் உண்மை காதல் அவள் சிதைக்கப்பட்ட சிலையாய் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்தாள்.
அச்சிலையைப் பற்றி அறியாதவர்கள் அதன்மேல் கழிவுகளைக் கொட்டி அதைக் காலால் மிதித்து மேலும் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்.


வாழ்க்கையை வலியோடு நகர்த்த முயன்று கொண்டிருந்த அந்த சிலையின் அருகே வழிப்போக்கன் ஒருவன் வந்தமர்ந்தான்.

சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி


அந்தச் சிலையின் அருமையை ஆராய்ந்து அறிந்தவன், இப்பேர்ப்பட்ட சிலையைச் சிதைத்தவன் துர்ப்பாக்கியசாலி என்று கூறி, அச்சிலையை தூசி தட்டித் தூக்கி நிறுத்தினான்.


என்னை முதன்முறை சிலையாக மாற்றியவனே சிதைத்து தூக்கி வீசி விட்டான். இவனைப் பார்த்தால் சிற்பியாகவே தெரியவில்லை என்று சிதிலமடைந்த சிலை சிரித்தது.

காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி


காயப்பட்ட சிலைக்கு கண்கள் காணும் காட்சி பிழையாகத்தானே இருக்கும் எனப் புரிந்து கொண்ட அவன், பிறந்த குழந்தையைப் போல அச்சிலையை கண்ணியமாய்க் கவனித்துக் கொண்டான்.


அரைகுறைச் சிற்பி எண்டாலும் அச்சிலையின் வலியை அழகாய்ப் புரிந்து கொண்டு மருந்திடத் தொடங்கியவன், அவ்வப்போது அச்சிலைக்கே தெரியாமல் அதன் போக்கில் அதை அழகாய்ப் புதுப்பிக்க ஆரம்பித்தான்.


வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ வந்தாலும் அச்சிலையை விட்டு அகலாமல் இருந்தவன், எப்படியோ அதன் கால்களை ஆவலுடன் தன்னுடன் சேர்ந்து நடப்பதற்கு தயார்ப்படுத்தி விட்டான்.

சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான்


காலப்போக்கில், காயமடைந்த சிலையை காதலோடு செதுக்கி கலைநயமாக வடிவமைத்தான். வலியை முற்றிலுமாக மறந்த அச்சிலையின் கண்களை மீண்டும் காதலால் நிரப்பினான்.


இரண்டாம் முறை காதல் கண்ணாடியை கையில் எடுத்து அச்சிலை மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டிருப்பதை ஆசையாய் தயங்கியபடி பார்த்து இரசிக்கத் தொடங்கியது.


நடைப் பயணமாய்….பேருந்துப் பயணமாய்….ரயில் பயணமாய்….

அச்சிலை காண நினைத்த இடங்களெல்லாம் உடன் சென்றவனிடம், அவ்விடங்களுக்கும் அதிலிருக்கும் நினைவுகளையும் தன்னையறியாமல் கூறிக் காயப்படுத்தினாலும் அதை அவன் காட்டிக் கொள்ளாமல்,

அந்த நினைவுகளிலிருந்து நிதானமாய் அச்சிலையை வெளிக் கொண்டு வரத்தொடங்கினான்.


இரண்டாவதாக செதுக்கப்பட்ட காதல் என்றாலும் இயல்பை விட இன்றியமையாத ஒன்றாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்று நினைத்துக் கொண்ட அந்தச் சிலை அவனை அவமதிக்காமல் அரைகுறைச் சிற்பி என்றாலும் ஆசையாய் அணைத்துக் கொண்டது.


ஆறுதலும் ஆதரவும் அரவணைப்பும் அக்கறையும் அன்பும் மதிப்பும் காதலின் எண்ணத்தில் உண்மையாக இருக்கிறதா என்று எண்ண வேண்டுமே தவிர எண்ணிக்கையில் எத்தனையாவது என்று எண்ணத் தேவையில்லை.


02.06.2024. நிலா தமிழ்

சேதமடைந்துள்ள வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

சேதமடைந்துள்ள வீடுகள்

சேதமடைந்துள்ள வீடுகள்

சேதமடைந்துள்ள வீடுகள் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற
காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு

உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின்

உதவியுடன் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான முழுமையான திட்டமொன்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்

பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு

தற்போது பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகங்கள், பாதிக்கப்பட்ட அனைத்து

பிரதேச செயலகங்களின் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கிராம சேவகர்கள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி,
சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும்

பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கை நிலைமைகளை பேணுவதற்காகவும் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் அரசாங்கம் உடனடியாக வழங்கும் என்றும் தெரிவித்தார்.

25 மாவட்ட செயலகங்களின் கீழ் அமைந்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தனக்கு

அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அதிப திலகரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு

முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ள இடர்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய தேவையான வாகனங்கள், படகுகள் அல்லது ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவம் என்பன அந்த பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர்

ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் கலந்துகொண்ட இச்சந்திப்பில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் டிஜிட்டல் முறையில் இணைந்து கொண்டனர்.

தேவையற்ற வகையில் வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத்
தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீர்

விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்


விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அவசர நிலைகளைத் தெரிவிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக
நிவாரணங்களை வழங்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் செயற்படும்.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் இதன் ஊடாக இணைக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அனர்த்தமுள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலகங்கள்

அனைத்திலும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் இன்று இரவு முழுநேரப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி, குருவிட்ட, ஏலபாத்த, கலவான, அயகம, கிரியெல்ல, நிவித்திகல
மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக

ஆபத்துள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது சீரற்ற காலநிலை காரணமாக 2574 குடும்பங்களில் 9398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 528 குடும்பங்களைச் சேர்ந்த 2219 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில்

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரதேச
செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி

உத்தியோகத்தர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தெரிவிக்கின்றார்.

இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மற்றும் வெளியில் தங்கியுள்ள
அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உணவு மற்றும் சுகாதாரத் தேவைகள்

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

இதேவேளை, 22 பிரதேச செயலகங்களில் நெலுவ, தவலம, நாகொட, நயாகம, வெலிவிட்டிய திவித்துறை, பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய 07 பிரதேச

செயலகப் பிரிவுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காலி மாவட்ட பதில் செயலாளர் சி.டி. ராஜகருணா கூறினார்.

நெலுவவை அண்டிய பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருவதையும் அவர்
சுட்டிக்காட்டினார். எனினும், அனர்த்தம் காரணமாக 1348 குடும்பங்களைச்
சேர்ந்த 3455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இருவர் காணாமல்
போயுள்ளனரர். பிரதான பாதுகாப்பு நிலையமொன்றில் 250 குடும்பங்களைச்
சேர்ந்த 608 பேருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பதில்
மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்டத்தில்

மாத்தறை மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துரலிய,
அக்குரஸ்ஸ மற்றும் பிடபெத்தர ஆகிய பிரதேசங்கள் மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் கணேஷ் அமரசிங்க கூறினார்.

முலட்டியன, பஸ்கொட, கொட்டபொல, திஹகொட, மாலிம்படை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரிவுகளும் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளன.

03 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தங்களினால் 2731 குடும்பங்களில் 10,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் 150 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 21
குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 05 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில்

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான

சேவைகளை வழங்க பொது நிர்வாக அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் மாவட்ட
செயலாளர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் 943 குடும்பங்கள் அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 3539 ஆகும்.
களுத்துறை மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார கூறுகையில்,

ஏற்கனவே 30 தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு 606 குடும்பங்களைச் சேர்ந்த 2274 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரம் அனர்த்த நிலைமைகள் பதிவாகியுள்ளதோடு, இதன் காரணமாக 1716 குடும்பங்களில் 6839 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பிரதேச செயலாளர்களினால் 07 பாதுகாப்பான இடங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 215


பேர் தங்கியிருப்பதாகவும் கொழும்பு பதில் மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக குமார தெரிவித்தார்.

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும்
Posted in இலங்கை செய்திகள்

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும்

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்க

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் ,அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி

இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகளுக்கு நேரடியாக பங்களிக்க வேண்டிய அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் இணைப்பு மற்றும் வசதிகளை இது எளிதாக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்பாட்டு அறையின் தொலைபேசி இலக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (02) மாலை 06:00 மணி முதல் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படும் விசேட பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்பாட்டு அறை பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி

இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட செயற்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011 2 43 92 12, 011 20 130 36 அல்லது 011 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்க முடியும்.

அத்துடன் disaster.ops@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்துக்களில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்துக்களில் நால்வர் பலி

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

விபத்துக்களில் நால்வர் பலி ,நாட்டின் சில பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த சாரதி

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மகுல்பொகுன, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியின் சாரதி

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சோறு போடும் விவசாயியின் நெல்
Posted in இலங்கை செய்திகள்

சோறு போடும் விவசாயியின் நெல்

சோறு போடும் விவசாயியின் நெல்

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது.

இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மோசடி மிக்க வியாபாரி

கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம்

இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (02) திருகோணமலை, கந்தளாய் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி,

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார்.

விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள்

மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.

கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம்,

விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று,

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் அறுவடை

விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை,

பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத்

தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி,

விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம்.

தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்,

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.

நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை.

சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை.

இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில்

வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை ,இஸ்ரேல் இராணுவம் நடத்திய மனித குலத்தை அதிரவைக்கும் வதைகள் வெளியாகியுள்ளன .


பாலஸ்தீனம் காசா மக்களை கைது செய்து சென்ற இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் புரிந்த அதிரவைக்கும் படுகொலைகள் வெளியாகியுள்ளன .

நிர்வாணமாக்கி வதை


கைதான ஆண்களை கைகளை கட்டி ,அவர்களை நிர்வாணமாக்கி ,,முகத்தில் சப்பாத்தால் உதைத்து , அவர்களை சுட்டு கொன்ற கொடூரம் வெளியாகியுள்ளது .

இலங்கை முள்ளிவாய்காலில் இடம்பெற்ற மிக பெரும் மனித படுகொலை காட்சி போல் இவை காணப்படுகின்றன .

கதற கதற படுகொலை

அப்பாவி பலஸ்தீன மக்கள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பஸ்தவர்கள் மற்றும் ,வாலிபர்களை சிறை பிடித்த இஸ்ரேலிய இராணுவம் ,அவர்களை கதற கதற படுகொலை செய்துள்ள கொடூர காணொளியை வெளியாகியுள்ளது .

ஒரு இஸ்ரேலியர் மரணத்திற்கு ஆயிரம் பலஸ்தீனியர்களை கொலை செய்ய வேண்டும் என்ற மிக கோர கொலைவெறியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தமது மக்கள் மட்டுமே மக்கள் ,ஏனையவர்கள் பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் இந்த படுகொலைகள், மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தெற்கு லெபனான் போராளிகள் காட்டு பாட்டு பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பல்வேறு பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது .

தாக்குதல் சம்பவம்

இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்றின் பொழுதே, 16 மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு இராணுவ மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மிலோச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

அப்பாவி பொது மக்கள்

இந்த தாக்குதலின் பொழுதே அப்பாவி பொது மக்கள் பெரும் தொகையில் பலியாகியும் காயமாடைந்துள்ளனர் .

மேலும் பல வீடுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலடி தாக்குதல்களை, தெற்கு லெபனான் விடுதலை போராளிகள் நடத்த கூடும் எனபதால் ,இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist
5 பேரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

5 பேரை காணவில்லை

5 பேரை காணவில்லை

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவிதுள்ளதுடன் ,அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அனர்த்தங்களின் சிக்கி பலர் பலி

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் சிக்கி ,பத்து பேர் பலியாகியும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு காணாமல் போனவர்கள் ,மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

காணாமல் போனவர்களை, தேடும் பணி

பாதிக்க பட்ட பகுதியில் காணாமல் போனவர்களை, தேடும் பணியில் ,காணமல் போனவர்கள் உறவினர்கள் மற்றும் ,மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக ,பல நூறு குடும்பங்கள் பாதிக்க பட்டு வருவதுடன் ,உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவு என்பனவும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்பது குறிப்பிட தக்கது .

இவளை பார்க்க யாரும் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

இவளை பார்க்க யாரும் இல்லை

இவளை பார்க்க யாரும் இல்லை

பார்வையிழந்த இவளை பார்க்க யாரும் இல்லை ,வவுனியாவில் தனிமையில் கதறும் இளம் தமிழ் பெண் .

போரினால் பாதிக்க பட்ட ஆதரவற்ற நிலையில் ,வவுனியா கணேசபுரம் பகுதியில் தனிமையில் வசித்து வரும் இந்த பெண் ,வறுமையில் பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் .உள்ளார்

சுய தொழில் செய்து வாழ விரும்பும் இவர் ,குடி நீர் இன்றி தவித்து வருகின்றார் .

இவருக்கு குழாய் கிணறு ஒன்று நிறுவி கொடுத்தால் அதனை வைத்து குடி நீரை பூர்த்தி செய்வதுடன் ,தனது சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வார் .

கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்

அதனால் ஒரு கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளே உங்கள் ,அன்பையும் ஆதரவையும் இந்த பெண்ணுக்கு வழங்கிடுங்கள் .

கடல் கடந்து வந்த போதும் தாய் மண்ணையும் ,அந்த மக்களையும் தாங்கி பிடித்து பேருதவி புரிந்து ,பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் கண்ணீரை துடைக்கும் தாயகத்து உறவுகளை ,நல்ல மனங்களே இந்த பார்வை அற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள் .

எம ,சோதரி எம் அக்கா கதறுகிறாள் ,அவள் கண்ணீரை துடைத்து ,உங்கள் அன்பை செலுத்தி உண்பதற்கான ஒரு உத்தரவாத உழைப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

இந்த இளம் பெண்ணுக்கு உதவிட விரும்பும் அன்பர்கள் கீழ் வரும் கைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம் ,வாட்சப் ,வைபர் ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி உதவுங்கள் மக்களே .0094 77111 8129

வீடியோ

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe
Posted in சமையல் சமையல் cook

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe வீட்டில் இப்படி நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

இந்த குஸ்கா ரெசிபி Khuska Recipe செய்வது எப்படி ..? இதற்கு தேவையான பொருட்கள் என்ன .

தேவையான பொருட்கள்

Ingredients:தேவையான பொருட்கள்:
2 cups – Basmathi Rice (washed, soaked 20 mins and drained) கப் – பாசுமதி அரிசி (கழுவி, 20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி)
3 cups – water கப் – தண்ணீர்
1 Tbsp – Ghee டீஸ்பூன் – நெய்
2 Tbsp – Oil டீஸ்பூன் – எண்ணெய்
1 – Bay leaf வளைகுடா இலை
1 – Cinnamon இலவங்கப்பட்டை

2 – Cardamom ஏலக்காய்
2 – Cloves கராம்பு
1 – Star anise நட்சத்திர சோம்பு
2 – Onion வெங்காயம்
1 1/2 – Tomato தக்காளி
2 – Green Chilli பச்சை மிளகாய்

இந்த குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe எப்படி செய்வது .செய்முறைக்குள் போகலாம் வாங்க .

குஸ்கா Khuska Recipe செய்திட

இப்படி சுவையான குஸ்கா Khuska Recipe செய்திட முதல்ல அடுப்புல கடாய வைத்து கொள்ளுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

அதன் பின் கடாயில் நெய்யு, எண்ணெய் விட்டு அதற்கு அப்புறம் கராம்பு மற்றும் ,பட்டை ,பிராணி இலை ,ஏலக்காய் ,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நடச்சிரா சோம்பு ,தக்காளி போட்டி வதக்கி விடுங்க .

அப்புறம் கரம் மசாலா ,இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை ,புதினா ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி எடுங்க ,

அப்புறம் தயிரு ,தேவையான அளவு உப்பு ,3 கப் தண்ணி விட்டு கலக்கி விட்டு கொதிக்க வைத்திடுங்க .

சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe

இப்போ குஸ்க செய்முறை இறுதி பாகம் இரண்டு

கழுவி ஊறவைத்த பசுமதி அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு ,அந்த அரிசி கூடவே ,இந்த பொடி மசாலா கிரேவியை ஊற்றி அவிய வைத்திடுங்க .

இருப்பது 20 நிமிடத்தின் பின்னர் அரிசியுடன் நன்றாக் கிரேவி கலந்து அவிந்து வந்திருக்கும் ,அப்பொழுது வறுத்து வைத்த வெங்காயம் ,புதினா இலையை மேலே தூவி இறக்கிடுங்க .

அவ்வளவு தாங்க , வாயுக்கு சுவையான வீட்டு சுவையில் கடை சுவை , குஸ்கா Khuska Recipe சமையல் தயாராகிடிச்சு .

இப்படியே நாள்தோறும் குஸ்கா Khuska Recipe செஞ்சு சாப்பிடுங்க மக்களே .மீண்டும் ஒரு சமையல் குறிப்பில் சந்திக்கிறோம்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல்

இஸ்ரேல் மக்கள் பொலிஸ் மோதல் 14 போலீஸ் காயம், இஸ்ரேல் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இதில் பொது மக்கள் காவல்துறையினரை தாக்கியதில் 14 பொலிஸ் காயமடைந்துள்ளனர் .

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன் அன்சர் அல்லா போர் படைகள் ,அமெரிக்கா ஏவுகணைகள் ,விமானங்கள் என்பனவற்றை தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிப்பு .

ஆனால் கப்பல்களுக்கு சேதம் என தகவல் .

ஏவுகணை தாக்குதல்

வடக்கு இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் ,வெள்ளம் போல ஏவுகணை மழை பொழிவு இடம்பெற்றுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் கடும் யுத்தம் தடுக்க முடிய திணறும் எதிரி படைகள் ,எதிரிகளின் வரவை கணடறிந்து வீரம் செறிந்த தாக்குதல் .

பாலஸ்தீனம் யூத படைகள் தாக்குதலுக்கு அமெரிக்கா நீதவான் நீதிமன்றம் என கூறி வரும் ஜோ பைடன் தீர்ப்பு எழுதிட தயாராகி வருகிறார் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை

ஈரான் விமானஇயந்திரம் தயாரித்தது சாதனை படைத்துள்ளதாக ஈரான் விமான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்பலி யாகியுள்ளனர் .

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கொழும்பு மாவட்டம்:

  • பாதுக்கை

களுத்துறை மாவட்டம்:

  • மத்துமை
  • இங்கிரிய
  • பாலிந்தநுவர
  • புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம்:

  • குருவிட்ட
  • எலபாத
  • கிரியெல்ல
  • அயகம
  • எஹெலியகொடை
  • கலவானை
  • இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

கொழும்பு மாவட்டம்:

  • சீதாவாக்கை

அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட

  • ஹொரணை

கண்டி மாவட்டம்:

  • உடபலாத

கேகாலை மாவட்டம்:

  • தெஹியோவிட்ட
  • தெரணியாகலை

மாத்தறை மாவட்டம்:

  • முல்லட்டியன
  • பிட்டபெத்தர
  • கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

  • அமம்பகமுவ
  • கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

  • இம்புல்பே

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

காலி மாவட்டம்:

  • தவகம
  • நியகம
  • எல்பிட்டிய
  • நாகொடை
  • நெலுவ

அம்பாந்தோட்டை மாவட்டம்:

  • கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

  • தொடங்கொடை
  • அகலவத்தை

கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல

  • கங்க இஹல கோரல
  • உடுநுவர
  • கங்கவட்ட கோரல
  • யட்டிநுவர

கேகாலை மாவட்டம்:

  • யட்டியாந்தோட்ட
  • புலத்கொஹுபிட்டிய
  • ருவன்வெல்ல
  • ரம்புக்கன
  • வரக்காபொல
  • கலிகமுவ
  • அரநாயக்க
  • மாவனெல்லை
  • கேகாலை

குருநாகல் மாவட்டம்:

  • மாவத்தகம
  • ரிதிகம

மாத்தறை மாவட்டம்:

  • பஸ்கொட
  • அக்குரஸ்ஸ

நுவரெலியா மாவட்டம்:

  • நுவரெலிய

இரத்தினபுரி மாவட்டம்:

  • பலாங்கொடை
சரமாரியாக வெட்டிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

சரமாரியாக வெட்டிய கும்பல்

திடீரென புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்

சரமாரியாக வெட்டிய கும்பல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில்

நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தாக்குதல்

இன்னும் சில பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் வீடொன்றில் இருந்த பொருட்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்குள்ளாகியது.

வாள்கள் தாங்கிய சிறு குழுவொன்றின் தாக்குதல் காரணமாகவே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாச்சிக்குடா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதுடன் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வீதியில் சென்றவர்கள் மீதும் தாக்குதல்

வாள்கள் தாங்கிய சிறு குழுவானது ஒருவரை விரட்டி வந்த நிலையில் விரட்டப்பட்டு வந்தவர் அவரது சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதன் காரணமாக அவ்வீட்டினுள் நுழைந்து வாள் தாங்கிய குழுவானது அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் வாள் வெட்டிற்கு இலக்கானதுடன் சத்தம் கேட்டு வீட்டினுள் நுழைந்த அயல் வீட்டார் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் வீதியில் இருந்த மோட்டார் சைக்கிளும் தாக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்குதலால் செய்வதறியாது நிலை தடுமாறிய பொது மக்கள் சிலர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளித்தும் உள்ளனர்.

சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இச்சம்பவத்தினால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் உறைந்து போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னராக அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிசார் நிலமையினை பார்வையிட்டு சென்றுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|ஹமாஸை அழிப்போம் நெதன்யாகு|எரியும் உக்ரைன் காடுகள்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.

கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .

குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.