இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் ,லெபனானை இலக்கு வைத்து, இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் வாழ்விடங்கள் ,பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அந்த நாட்டுப்படைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் யூத படைகளோ எதிரிப்படைகளான லெபனான் போர்படைகள், மற்றும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தனது எதிரிகளை அழித்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என கருதும் யூத படைகள் , தற்பொழுது ஹிஸ்புல்லா கொல்லா போர்படைகளின் ,மிக முக்கியமான தளபதிகளை அழித்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாகவே இந்த தாக்குதலை இப்போது நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது.
யூத படைகள் நடத்திய இந்த இன அழிப்பு தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
தொடர்ந்து நீடிக்கும் இந்த போர் மிகப் பெரும் ஆபத்தையும், மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க கூடிய நிலைக்கு இந்த, தாக்குதல் சம்பவங்கள் எடுத்துச் செல்லும் என்பதாகவே பார்க்க முடிகிறது.













