Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
குளிரூட்டி இல்லாது இவை காணம்
குசினியில சமையலது பெண் பாவம்
குழாயில காஸ்இல்லா அவை சாபம்

விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு

கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு

வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு

நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்

நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்

ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா

பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
பிடரி பட சொல்லுதடா இக்காலம்
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-03-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

    இளமையில உன் ஏக்கம்
    இன்றே தனித்து விடு
    முதுமையில முதலிரவு
    முழு ஏக்கம் தனிக்காது

    வெறுமையில நீ இருந்து
    வெளியேற்றி விட்டவைகள்
    முதுமையில தேறாது
    முதுகெலும்பு தாங்காது

    வறுமை என்ற கூட்டுக்குள்ளே
    நீ தொலைத்த வாழ்விருக்கே
    மீள் எழுச்சி கொள்ளாது
    மீள உன்னை கெஞ்சாது

    வாலிபத்து அகவையில
    வாழ்க்கை பட வேணுமடி
    வரப்புயரும் நீர் போல
    வாழ்வு அமைய வேணுமடி

    கோடி பணம் சேர்த்து வைத்து
    கோட்டையிலே நீ இருந்தும்
    காணப்போவது ஏதுமில்லை
    கண் மலர்ச்சி ஏதுமில்லை

    இளமையில இல்லறத்தை
    இனிதே நீ கலந்து விடு
    இல்லையது தப்பி விடின்
    இறந்தே நீ மாண்டு விடு ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 06-03-2022

    வன்னி மைந்தன் கவிதைங்கள்

      Posted in சினிமா

      கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

      கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

      கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை

      தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
      கமல் ஹாசன்

      பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள

      ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில்

      கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

      இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக

      தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று

      தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

      கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன்

      நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

        மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

        சோழ கடலில் ஆடிய வீரம்
        சோரம் போனதுவோ – பகை
        சோர்வை அகற்ற கயவர் கூடி
        சோடனை செய்ததுவோ

        வில்லும் வாழும் பொருதியே களத்தில்
        விண்ணில் எறியவர்
        பண்ணிசை பாடியே பாமர மக்களை
        படைக்கு அழைத்தவர்

        இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
        இந்நிலை ஆடாதே
        ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
        ஓர்மம் கொள்ளாதே

        காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
        கலவரம் பிறக்காதோ
        கயவர் இவரென பகைவர் அவரென
        களமது முளைக்காதோ

        எழுவதும் வீழ்வதும்
        எழுவாய் பயனிலை
        ஏற்றம் தரித்தல்
        செயல் படு பொருள் நிலை

        வழித்தடம் விழித்திடும் போதினில்
        வழியெங்கும் பகையுடல் சரியும்
        மொழியுடன் புரட்சி வெடித்திடும்
        மொழியா புகழுடன் விடிந்திடும்

        நஞ்சு கட்டியே களமது பொருதினார்
        நாளை வந்திடுவார்
        நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
        நல் வழி செய்திடுவார் …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 30-11-2021

          Posted in சினிமா

          பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

          பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

          உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல

          நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

          பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
          கமல்
          தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்

          தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

          இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்

          அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்

          நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

          இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி

          ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.

          ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு

            Posted in Uncategorized

            வென்றுவிட ஒன்று படு

            வென்றுவிட ஒன்று படு

            வென்றுவிட ஒன்று படு …!

            சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
            சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
            சில்லறை காவடி தோள்களிலே
            சிலுக்காக ஆடுது வேட்டிகளே

            தன் மானம் இங்கே விற்று விட்டார்
            தமிழரை காலடி வைத்து விட்டார்
            தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
            தமிழரே தாமெனே கூவி நின்றார்

            வந்தேறி குந்திட வைத்து விட்டார்
            வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
            துயர் போக்க இன்று என் செய்வார்
            தூர பார்வை என்று கொள்வார்

            வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
            வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
            ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
            ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்

            இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
            இடி மின்னல் இவரை கொல்லாதோ
            இன்றே தமிழர் விழித்து விட்டால்
            இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 24-10-2021

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              இவளை எனக்கு தா

              இவளை எனக்கு தா

              உருண்டு வரும் நீரலைகள்
              உன் உடலில் மோதி விழ
              என் உடலோ நடுங்குதடி
              ஏக்கத்தில தவிக்குதடி

              கட்டியணைத்து பேரலைகள்
              கண்ட படி முத்தமிட
              விட்டு உடல் இருப்பவளே
              விடை கூறு என் செய்வேன்

              அங்கமதை தொட்டு விழி
              ஆடை உருவி பார்க்குதடி
              வேர்க்காத என் உதடும்
              வேர்த்து இன்று கொட்டுதடி

              வான் நிலவு அருவியில
              வளைந்து நீராட
              நாள் எழுதி கொடுத்தவரே
              நான் உனக்கு மாலையிட

              தேதி ஒன்று தருவீரா – என்
              சேதி சொல்லி போவீரா
              புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
              பூவை எனக்கு தருவீரா ..?

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 22-10-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                உயிர் பிரியும் மர்மம்

                உயிர் பிரியும் மர்மம்

                ஏ மனிதா உன் உடலில்
                ஏழடுக்கு தோலிருக்கு
                ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
                ஓர் உயிரும் பிரியாது

                கட்டை விரல் ஊடக
                கடைசி உயிர் பிரிந்திடுமாம்
                கட்டை விரல் கட்டி போடும்
                காரணங்கள் இதுவொன்றாம்

                நாடி பிடித்து பார்த்த பின்னே
                நல்ல மனிதன் செத்தான் என்பார்
                இறந்து விட்டால் கருவிழியோ
                இரண்டாக வெடித்திடுமாம்

                அரவம் மனிதன் தீண்டி விடின்
                அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
                கவிழ் தும்பை சாறெடுத்து
                காதோடு மூக்கு வழி

                உயிர் பிரியும் மர்மம்

                விட்டு பாரு பிழைத்திருப்பான்
                வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
                ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
                மரணித்தான் என்பாராம்

                இறந்தவர்கள் மூன்று நாளின்
                இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
                அதனாலே மூன்று நாள்
                அவர் உடலை வைத்திருப்பார்

                பண்டைய மருத்துவத்தின்
                பறை சாற்றல் இதில் இருக்கு
                இக்குறிப்பை எடுத்து வைத்து
                இரண்டொருவர் பகிர்ந்து விடு

                விலங்குகள் உயிர் பிழைக்கும்
                விசித்திரம் இதில் இருக்கு
                கானகத்தில் இம் மூலிகையை
                கண்டு உண்டு உயிர் வாழும்

                பார்த்தாயா என் மனிதா
                படைத்தவனின் படையலதை
                வீரப்பன் காட்டில் வாழ்ந்த
                விசித்திரம் இது தானோ ..?

                கடாறிந்த பழங்குடியின
                கை வைத்தியம் இதுவன்றே
                ஏ மனிதா கை கூப்பி
                எமை படைத்தவனை வணங்கி விடு …!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 21-10-2021

                வன்னி மைந்தன் கவிதைகள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இன்றே மன்னித்து விடு

                  இன்றே மன்னித்து விடு

                  வாயோடு வாய் வைத்து
                  வந்து வழி பேசி நின்றேன்
                  நீயுரைத்த மொழி கேட்டு
                  நீர் விழியோடு யான் தவித்தேன்

                  ஆறாத என் மொழிகள்
                  ஆறாண்டாய் வாட்டியதோ …?
                  சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
                  சூட்டோடே சொல்லி விடு

                  வார்த்தையால் உனை கொன்று
                  வாழ்வதென்ன வாழ்வோ …?
                  வளர் பிறையின் முழு நிலவே
                  வாழும் போதே புரிந்து விடு

                  திட்டமிட்டு வாயில் வந்து
                  திட்டுவது யான் அல்ல
                  திட்டங்களை மூழ்கடிக்க
                  திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்

                  உச்சி முதல் உள்ளம் வரை
                  உயிரே வலிக்குதடி
                  பகுத்தறிவை படித்து வைத்து
                  பக்குவத்தை நட்ட பின்னர்

                  உன்னை வசை பாட
                  உயிரே நான் நினைத்ததில்லை
                  என் உயிலில் மாற்றமதை
                  எண்ணுறவே கண்டு விடு

                  எட்டாண்டு உயிர் வாழும்
                  என் உடலோ புரிந்து விடு
                  இறக்கும் முன்னர் ஒரு முறை
                  இன்றே மன்னித்து விடு

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 19-10-2021

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    இன்றே இவரை விரட்டு

                    இன்றே இவரை விரட்டு

                    சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
                    சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
                    ஒற்றுமை பேனா தமிழனை – தலை
                    ஒடித்து போடடா காட்டிடை

                    லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
                    நக்கியே பிழைக்கும் நாய்களை
                    கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
                    கோடிகள் வாழ்ந்திட புரியடா

                    அறத்தினை கொன்றவன் நாட்டிடை
                    அண்டியே வைத்தால் தீட்டடா
                    வாலாட்டும் இந்த நாய்களால்
                    வையத்தில் முளைக்குத்து கேடடா

                    வீடே முதலெனே நினைப்பவர் – இன
                    விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
                    தூவெனெ துப்படா – இந்த
                    துரோகியை இன்றே வீழ்த்தடா

                    கோபத்தில் களையாய் பொங்கடா
                    கொடியோர் செயல் விழ பாயடா
                    நாளை தமிழர் ஆளவே
                    நம்பிக்கை நட்டு வையடா ….!

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 18-10-2021

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      உன்னை காதலிக்கிறேன்

                      உன்னை காதலிக்கிறேன்

                      குப்பையில கிடந்த என்னை
                      குளிப்பாட்டி எடுத்தவளே
                      மனிதனாக நட்டு வைத்து
                      மறந்தின்று போவதெங்கே ..?

                      இதய வங்கியில
                      இன் முகத்தை வைத்தேனே
                      அங்கமெல்லாம் உனை தொடர
                      அன்பே சிறை பட்டனே

                      சுட்டெரிக்கும் வெயில் பட்டு
                      சுடுகின்ற என் உடலில்
                      குளிர்கின்ற உன் நினைவு
                      குழந்தை போல் கத்துதே

                      தேகமதில் தென்பு தந்து
                      தேர்வெழுத வெல்ல வைத்து
                      நட்பை நட்டவளே – உனை
                      நான் மறந்து போவதுவோ ..?

                      எல்லாமும் செய்தவளே
                      என் மனதை காணலையோ ..?
                      உன்னிடத்தில் வச பட்டேன்
                      உள் மனதை புரியலையோ ..?

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 17-10-2021

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                        வீழ்த்தடா அவன் தான் பகைவன்

                        முப்படை தாங்கியே எழுந்தார்
                        முன் தினம் விழ நின்றார்
                        இப் படை ஆட்சியில் நன்றே
                        இடை அடி கழுவி நின்றார்

                        குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
                        குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
                        இத்தரை தமிழ் நிலம் எங்கும்
                        இது போல் தொடர்நிலை இன்றேன் ..?

                        வல்வையில் பிறந்தான் ஒருவன்
                        வைத்தொரு போரை செய்தான்
                        இப் புவி தமிழன் ஆழ
                        இல்லம் வந்து தொழுதான்

                        முத்தி பெற்றிட முன்னே
                        முன் நிலை அறியா அவனை
                        வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
                        வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!

                        வன்னி மைந்தன்
                        ஆக்கம் 16-10-2021

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                          வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்

                          தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
                          தொட்டதை விட்டான் கடல் எழ
                          வன புலி என்றே இவன் எழ
                          வாடினர் பகைவர் விழி அழ

                          நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
                          நெய்திட அன்றே வந்தான்
                          கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
                          கொடி நாட்டே போர் செய்தான்

                          கடலென தரையென விரிந்தவர்
                          கடுகதி வானிடை ஏறினர்
                          முப்படை தாங்கியே விண்ணிடை
                          முப் போரினை விரித்தனர்

                          அப்படை தளபதி அரியணை
                          அத்தனை வந்ததுமே குந்தினர்
                          எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
                          எங்களின் மறவரே தரித்தனர்

                          இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
                          இப்படி விழும் படி சிரித்தனர்
                          இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
                          இப் புகழ் நிலை விடியலிடும் …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 11-10-2021

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            அழுகுரல் கேட்கிறதா

                            அழுகுரல் கேட்கிறதா

                            அந்தி பொழுதில் நந்தி கடலில்
                            அழுகுரல் கேட்கிறதா?
                            அவல சாவின் ஆவிகளின்
                            ஆத்மா துடிக்கிறதா

                            ஓடிவந்தவர் கூடி நின்றவர்
                            ஒரு நொடி வீழ்ந்தனரே
                            ஓடி வந்த கந்தக கூண்டில்
                            ஓர் நூறாய் கிழிந்தனரே

                            பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
                            இது தான் படையெடுப்போ ..?
                            பகலும் இரவும் மாறி வரும்
                            பகைமை உணர்வீரா

                            ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
                            ஓடிடும் பகைமைகளே
                            ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
                            ஓடி அழுவீரே

                            விதைத்தவன் வினையை
                            விரைவில் அறுப்பான்
                            விளைச்சல் இது தானே – இந்த
                            விபரம் தெரிவானே

                            எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
                            எப்படி வாழ்ந்திடுவான்..?
                            ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
                            எப்போ வெடித்திடுவாய்..?

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் 10-10-2021

                            வன்னி மைந்தன் கவிதைகள்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              இதை சொல்ல உன்னால் முடியுமா

                              இதை சொல்ல உன்னால் முடியுமா

                              இன்றே உலகம் படித்து விட
                              இணையம் வந்திடவா
                              எதிரி அந்த பகைவன் கொலையை
                              எழுதி வைத்திடவா

                              அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
                              அலசி வந்திடவா
                              சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
                              சுழற்றி கூட்டிடவா

                              விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
                              விடு கதை சொல்லிடவா
                              அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
                              ஐ பீ சி கொழுத்திடவா

                              ஆதவன் அன்றே ஆடி நின்றார்
                              ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
                              நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
                              நேர்த்தி இவர் அல்லவா

                              காலை கதிரில் மாலை மலரில்
                              கண்ணீர் கதையல்லவா – நீ
                              வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
                              வீர கேசரியா

                              இதை சொல்ல உன்னால் முடியுமா

                              மனிதம் இல்லா மனிதன் அறிவில்
                              மறதி முதல் அல்லவா
                              பதிவு செய்தி பதியா மருவும்
                              பகலவன் இவர் அல்லவா

                              லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
                              லட்சங்கள் பார்த்துவிடு
                              இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
                              இழிநிலை செப்பிவிடு

                              புதின பலகையில் சங்கதி ஏறி
                              புதினம் தந்திடுமா ..?
                              தேனியில் ஏறி கூடு கட்டி
                              தேன் வலம்புரி வந்திடுமா ..?

                              யாழில் ஏறி அதிரடி ஓட -புது
                              யாழ் பிறந்திடுமா ..?
                              உதயனில் ஓடி தினக்குரல் பாட
                              உதயம் பொங்கிடுமா ..?

                              இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
                              இன்றே எண்ணிவிடு
                              இந்த துணிவு எவருக்கு வரும்
                              இருந்தால் சொல்லி விடு …!

                              வன்னி மைந்தன்
                              ஆக்கம் 09-10-2021

                              வன்னி மைந்தன் கவிதைகள்

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                ஓடும் அந்த அருவி பக்கம்

                                ஓடும் அந்த அருவி பக்கம்

                                ஓடம் காத்திருந்தேன்
                                நீ வருவாயென பார்த்திருந்து
                                நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
                                அருவி பாடிய ஓசையில – உன்

                                ஆடல் கேட்கவில்லை
                                அந்த வேளையில் கண்ணுறக்கம்
                                அன்பே தெளியவில்லை
                                மூணு நாளா எடுத்து வைத்த

                                முன்னோட்டம் கரைந்திருச்சு
                                ஆள் மனதில் முளத்த ஆசை
                                ஆற்று மண்ணா கரைந்திருச்சு
                                உன் மீது குற்றமிட

                                உண்மையில் முடியவில்லை
                                உள்ள வேதனை மறைத்துவிட
                                உருளும் விழிக்கு தெரியவில்லை
                                நான் வரைந்த ஓவியத்தின்

                                நனையும் மையா நீயிருந்தாய்
                                உனை வரைய எனை வைத்து- நீ
                                ஊமையாகி ஏன் போனாய் …?

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் 08-10-2021

                                வன்னி மைந்தன் கவிதைகள்

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  எப்படி வாழ்வில் உயர்வாய்

                                  எப்படி வாழ்வில் உயர்வாய்

                                  மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
                                  மெலிந்த கடலலை ஆடி எழ
                                  இரட்டை எருதுகள் கால் விழ
                                  இங்கொரு துயர் முளை எழ

                                  உழவு செய்வான் விவசாயி – இந்த
                                  உயர் வதை செய்வான் அவன் பாவி
                                  எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
                                  வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?

                                  முக்கி வதங்கி மூச்சடக்கி
                                  முக்கால் வயிறு பசியடக்கி
                                  முன்னே வாயால் நுரை தள்ள
                                  முன்னே தன் பலம் அது தள்ள

                                  அரை ஏக்கர் உளவு
                                  அன்றைய தினம் பிளவு
                                  ஓய்வு என்பது ஒரு மணிதான்
                                  ஓல வாழ்வு அனுதினம் தான்

                                  மதத்தில் சைவம் என்பானே
                                  மாதா மாட்டை மிதிப்பானே
                                  இப்படி வதைகள் இவர் விதைத்தால்
                                  எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!

                                  வன்னி மைந்தன்
                                  ஆக்கம் 07-10-2021

                                  வன்னி மைந்தன் கவிதைகள்

                                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                    நீ தமிழனா

                                    நீ தமிழனா

                                    தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
                                    செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
                                    வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
                                    வழியில் பெரும் சதி செய்தார்

                                    விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
                                    வீரம் உலகில் சொன்னார்
                                    வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
                                    வேளையில் தமிழர் கொதித்தார்

                                    போரிலே வென்றிட வேண்டும்
                                    பெரும் பலம் ஆளணி என்றார்
                                    வரும் பகை வழியில் எய்தே
                                    வாழ்வோம் நலமுடன் என்றார்

                                    நீ தமிழனா

                                    செய் நெறி வாய்மை கேளார்
                                    செந்தணலாகி கொதித்தார்
                                    வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
                                    வாளை சுருட்டி கொண்டார்

                                    எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
                                    ஏறி பறையடி அங்கே
                                    வந்தனர் பகைவர் வாயில் -கை
                                    வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?

                                    முன் தினம் வீரம் எங்கே
                                    முரசொலி தமிழ் எங்கே
                                    விண் புகழ் ஏறிய வீரம்
                                    வீரரை கொய்தாய் நன்றோ ..?

                                    எம் தமிழ் மானம் இன்றோ
                                    எமனவன் காலில் நன்றோ
                                    இது தான் தமிழ் நில பண்போ
                                    ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?

                                    வன்னி மைந்தன்
                                    ஆக்கம் 06-10-2021

                                    வன்னி மைந்தன் கவிதைகள்

                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                      உண்மை சொல்

                                      உண்மை சொல்

                                      மூச்சு முட்ட மூச்சு முட்ட
                                      முன்னே வந்து நிற்கிறாய்
                                      முத்தத்தாலே உன்னை தைக்க
                                      முன்னே ஏனோ ஊந்துறாய் ..?

                                      ஆலயத்தின் சாமிகளாய்
                                      ஆடை இன்றி நிற்பதா ..?
                                      இயற்கை தந்த பேரழகை
                                      இயமனுக்கே விற்பதா ..?

                                      ஆசைகளை தூண்டி விட்டு
                                      அருகில் வந்து இரசிக்கிறாய்
                                      அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
                                      ஆராத்தி எடுக்கிறாய் ..?

                                      கலைந்து போன கூந்தலில்
                                      கை வைத்து போனது யார்
                                      கட்டி வைத்த பேரழகை
                                      கடத்தி இன்று விற்றது யார் ..?

                                      விற்பனைக்கு சந்தையில
                                      விண்ணிலவை வைத்தது யார் ..?
                                      விவரமாக சொல்லி விடு
                                      விசாரணைக்கு வருகிறேன் …!

                                      வன்னி மைந்தன்
                                      ஆக்கம் 05-10-2021

                                      வன்னி மைந்தன் கவிதைகள்

                                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                        தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

                                        தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

                                        சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
                                        வேங்கை படை இல்லையா ?
                                        கரிகாலன் ஆண்ட பூமியில்
                                        காக்கை வன்னியரா

                                        கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
                                        கொள்கை சொல்லிடவோ
                                        அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
                                        அரியணை ஆண்டிடவோ

                                        செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
                                        செம்மண் மிதிபடவோ
                                        வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
                                        வம்சம் அழிப்பதுவோ

                                        கந்தக தீயில் வெந்திட இலங்கா
                                        கலகம் பிறந்திடுமா
                                        கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
                                        கொடும் பகை தகர்ந்திடுமா

                                        வான் படை காவியே வானில் ஏறிய
                                        வரி புலி வந்திடுமா ?
                                        வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
                                        வாயில் வந்திடுமா ..?

                                        வன்னி மைந்தன்
                                        ஆக்கம் 24-09-2021

                                        வன்னி மைந்தன் கவிதைகள்