Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 99 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அம்பாறை,தெஹியத்தக்கண்டி,அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 சுற்றிவளைப்புகளில், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 25 வழக்குகளில் 17 வர்த்தகர்களுக்கு 99 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால்
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

    முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

    முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக , நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

    நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில்விற்பனை செய்யப்படுவதுடன் ,ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி

    1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும். கோழி இறைச்சிக்கான


    நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

      கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

      கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

      கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

      இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.

      கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்

      ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

      கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை,
      எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும்.

        Posted in இலங்கை செய்திகள்

        அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்

        அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்

        தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர உறுதிப்

        பத்திரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

        பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி

        குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வீட்டு உறுதிப் பத்திரம் வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

        தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

        இதேவேளை, உறுதிப் பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் இதுவரை உறுதிப் பத்திரங்கள வழங்கப்படாத பயனாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப்

        பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும், தற்போது தயாரித்துவரும் பத்திரங்களை, வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

        இந்த ஆண்டில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்; சட்டப் பிரிவுக்கு உறுதிப் பத்திரங்கள் தொடர்பாக 2,033 கோப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் 1,996

        கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,035 உறுதிப் பத்திரங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

        இது தவிர தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிப் பத்திரங்களின் எண்ணிக்கை 822 எனவும், 961 உறுதிப் பத்திரங்களின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு

        வருவதாகவும் தேசிய வீடமைப்பு
        அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

          சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை
          Posted in இலங்கை செய்திகள்

          சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

          சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

          காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

          இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்

          த பாடசாலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

          குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு

          சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.

          சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை

          இந்த நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றினைந்து குறித்த சிறுவன் மீது தாக்கியள்ளார்.

          வீடு சென்ற சிறுவனின் உடலில் தழும்புகள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

          இதனையடுத்து காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11)

          முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்துள்ள ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

          அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய
          குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

            எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்

            இலங்கையில் இன்னும் சில தினங்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய படி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

            இந்த எரிபொருள் கப்பல் வருகையுடன் மக்கள் நிரையில் நின்று எரிபொருள் பெற்றிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் அமைச்சர்.

            மக்களி குஷி படுத்த எரிபொருள் துறை அமைச்சர் இவ்வாறான பல விடயங்களை தொடராக கூறி வருகிறார் .

            குறித்த எரிபொருள் கப்பலுக்காண பணம் மத்திய வங்கியினால் செலுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

              சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
              Posted in இலங்கை செய்திகள்

              சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

              சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை

              சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று இந்கு கடல் பரப்பிற்குள் வருவதற்கு ன் அனுமதி கோரியது .இந்த அனுமதியை இலங்கை மேலிடம் இதுவரை வழங்கவில்லை என கடல்படை தெரிவித்துள்ளது.

              இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுபட சீன அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சீனாவின் இந்த ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதிக்கும்படி கோரியது .

              இந்த நிலையில் குறித்த சீனா கப்பல் இலங்கை உள்ளே நுழைவதற்கு தொடர்ந்து அனுமதி வழங்காது இலங்கை உள்ளது .

              இதனால இலங்கை சீனாவுக்கு இடையில் முறுகல் அதிகமாகியுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

                வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

                இலங்கை மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி அடித்து செல்ல பட்ட நபர் ஒருவர் சில தினங்களின் பின்னர் சடலமாக மீட்க பட்டுளளார்.

                இவருடன் மூவர் நீரில்அடித்து செல்ல பட்ட நிலையில் சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தீவிர படுத்த பட்டன.

                அவ்வாறான தேடுதலின் பொழுதே திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்.


                தொடர்ந்து காணாமல் போன ஏனையவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

                  தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

                  இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

                  தாய்லாந்துக்கு தப்பி சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச அங்கு மூன்று மாதம் மட்டுமே தங்க வைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது.

                  சிங்கப்பூரில் கோட்டபாய ராஜபக்ச வாசிப்பதற்கான விசா வழங்குதல் நிறுத்த பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .

                  கோட்டபாயவுக்கு விசா வழங்குதலை நிறுத்துமாறு முக்கிய வல்லரசு நாடு ஒன்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையியல் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் அந்த வல்லரசு ஈடுபட்டுள்ளது.

                  சீனாவுடன் ஒட்டி உறவாடிய நிலையில் கோட்டபாயவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                  தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்ட இதே கோட்டபாய ராஜபக்ச இன்று நாடு நாடாங்க ஓடும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது.

                  தமிழர் சாபம் கோட்டபாய ராஜபக்சாவை துரத்துகிறது என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்

                    கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்

                    இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கையில் இருந்து மக்களினால் துரத்த பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தங்கியுள்ள இவர் தாய்லாந்துக்கு தப்பி ஓட திட்டமிட்டுளளார்.

                    சிங்கப்பூர் நாட்டில் கோட்டபாயவுக்கு பாதுகாப்பு வழங்க பாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக தாய்லாந்துக்கு கோட்டபாய செல்ல திட்டமிட்டுள்ளார் .

                    இலங்கைக்கு மீள வந்தால் அங்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தாய்லாந்துக்கு செல்லும் நகர்வினை கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                      மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                      அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                      கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்

                      விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                      அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

                      மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                      குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                      இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

                      இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்

                      மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
                      கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்

                        ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்

                        ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


                        பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

                        மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை.

                        இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

                        கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை தயாரிக்க முடியவில்லை.


                        இம்மாதம் 15ஆம் திகதி மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாவது கப்பலும் வந்தடைய

                        உள்ளது. எனவே, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

                        அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மண்ணெண்ணையை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,


                        மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

                          ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

                          ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு

                          உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல

                          பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

                          சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட்

                          கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                          34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

                            ஆட்கடத்தல்
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

                            ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

                            இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு

                            அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர்.

                            இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            இதன்காரணமாக, குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய

                            அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற அடிப்படையில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

                            சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் 2022 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துதுடன், மேலும் மலேசியாவில் உள்ள

                            சட்ட அமலாக்க முகவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மூலம் செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரைக் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

                            ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

                            குறித்த குடியேற்றவாசிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் தங்களது சொந்த செலவில் அவர்கள் நாடுகடத்தப்படும் வரை அங்குள்ள குறிப்பிட்ட தடுப்பு தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள்.

                            ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் மிகக்குறைந்த சம்பளத்திற்கு மற்றும் எந்தவிதமான

                            தொழில் உத்தரவாதமும் இன்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, “மலேசியாவுக்கான பயண விசாக்களை

                            வந்தவுடன் வேலை விசாவாக மாற்ற முடியாது” என்பதை மனதில் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடும் அனைத்து வருங்கால

                            குடியேற்றவாசிகளையும், சட்டபூர்வமான மற்றும் உண்மையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள்


                            மூலம் செல்லுமாறு செயலணி இலங்கைப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தி யுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

                              மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

                              இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

                              எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                              நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

                              ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.

                                விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
                                Posted in இலங்கை செய்திகள்

                                விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்

                                விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்

                                மொனராகலை- பிபிலை வீதியின் தொடம்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

                                பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                பிபிலை வெல்லஸ்ஸ தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்ற கனுல்வெல முஸ்லிம் மஹா
                                வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

                                  வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

                                  வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்

                                  மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

                                  அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர்

                                  இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள்
                                  முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி

                                    ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி

                                    சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது..

                                    எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

                                    உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும்
                                    இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

                                      கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்

                                      இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.

                                      இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .

                                      நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை

                                      இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.


                                      குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .

                                      ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க

                                        இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க

                                        இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் .

                                        இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திடீர் பயணம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                        இராணுவத்தை ஏவி மக்கள் போராட்டங்களை நசுக்குவதில் குறியாக உள்ள ரணிலின் இந்த பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.

                                        இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க
                                        மக்களை அடக்கி ஒடுக்குவதில் குறிவைத்து செயல் பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது.