சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது

சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது
Spread the love

சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது

இலங்கையில் அப்பாவி சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .

இலங்கை வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் காணாமல் போன, ஐந்து வயதுடைய சிறுமி ஒருத்தி, காவல்துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .

குறித்த சிறுமியை கடத்திய நபர் ,அதே சிறுமியின் வீட்டில் வேலைபார்த்து வந்த நபர் என, அடையாளம் காணப்பட்டுள்ள்ளார் .

திட்டமிட்டு சிறுமியை கடத்தி பேரூந்தில் பயணித்த இவர் ,பண்டாரவளை பேரூந்து சந்தை பகுதியில், இரவு தங்கி பொழுதை கழித்துளளார்.

அதன் பின்னர் சிறுமியைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளையில் ,காவல் துறையால் மடக்கி பிடிக்க பட்டார் .

பணத்திற்காக சிறுவர்களை கடத்தும் , இவ்வாறான கும்பல்களிடம் இருந்து மக்கள் உசாராக இருக்க வேண்டும் என ,காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அப்பாவி சிறுவர்களை கடத்தி ,கொலை செய்து ,வீதியில் வீசி வரும் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் உள்ளது .

இவ்வாறு கடத்த படும் சிறுமிகள் ,கற்பழிக்க பட்டு ,கொலை செய்யப்பட்டு வருகின்ற செயல்களும் அரங்கேறி இருந்தது .

அவ்வாறான தொடர்ச்சியாக ,இந்த அப்பாவி ஐந்து வயது சிறுமியும் , கடத்தி விற்க முனைந்த செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறியாத நபர்களை வீட்டுக்கு அழைக்கும் குடும்பங்கள், இவ்வாறானவர்கள் மீது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது இந்த செயல்கள் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது.

பாதிக்க பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இலங்கை காவல்துறையினர் , ஆதாரங்களுடன் குறித்த நபரை விசேடமாக தேடி வந்த நிலையில், இந்த சிறுமி பத்திரமாக மீட்க பட்டுளளார் .

இலங்கை காவல்துறையின் இந்த அளப்பரிய சேவை ,மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது .

காணமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில், ஈடுபட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினரின் ,வீரச் செயலாக இவை பார்க்க படுகிறது .

மக்கள் மத்தியில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் என அடையாளப்படுத்த பட்டிருந்த ,இலங்கை காவல்துறை ,காணாமல் போன ஐந்து வயது சிறுமியின் மீட்பு மூலம் ,பரிசுத்தமானவர்கள் உள்ளனர் என்பதையும் நிரூபித்துள்ளது .

காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து, உயிருடன் மீட்ட காவல்துறையினருக்கு ,சமுக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .

காணாமல் போன சிறுமி மீட்க பட்ட நிலையில் ,சிறுமியின் கிராமத்தவர்கள் ,சிறுமியை நேரில் சென்று பார்வை இட்டு செல்கின்றனர் .

    Leave a Reply