மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
Spread the love

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .

இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.

மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .

ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,

புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .

இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,

இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .

போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .

அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .

இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .

இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .

    Leave a Reply