Tag: கோட்டபாய தப்பி ஓட்டம்
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மக்களின் எதிரி என ,முக்கிய அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளன .
இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய கோட்டபாய ராஜபக்ச , மக்களை பிழையான முறையில் வழி நடத்தியதன் விளைவே, மக்கள் அவரை எதிரி போன்று பார்க்க முனைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரம் , மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ,கையாள தவறியதும் , சர்வாதிகார அடக்குமுறையை கோட்டபாய ராஜபக்ச பிரயோகித்ததுமே ,மக்களின் கோபத்திற்கு கோட்டபாய மாற்றம் பெற காரணமாக அமைந்தது.
கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
அழகிய இலங்கை நாட்டின் வளங்களை, சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு விற்று ,அதன் மூலம் கோடி லஞ்சம் பெற்றதன் வெளிப்பாடும் , ,அதனால் எழுந்த மக்கள் எழுச்சியும்,கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்க காரணமாக அமைந்தது .
இலங்கையை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபாக்சா , மீளவும் இலங்கைக்குள் நுழையமுடியாத, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சாவை , மக்கள் எதிரி போன்றே பார்த்து வருவதன் வெளிப்பாடும் ,மக்கள் கோபம் தணியாத நிலையில் உள்ளதும் ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடியாக உள்ளது .
அகதி போன்று நாடு நாடு நாடக ஓடும் கோட்டபாயா ,இலங்கை மீள நுழைந்தால் ,எதிரி கோட்டாவை துரத்தி தாக்குவோம் என்கிறது மக்கள் மன்றம் .
மக்களின் கோபம் தணியும் வரை ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடி நிலை, தொடர்ந்து நீடிக்கும் என்கிறது கொழும்பின் உயர் மட்டங்கள் .
போர் குற்றத்தில் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்திட புலம் பெயர் தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதும் ,கோட்டபாயவிற்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது .
இதனால் தனது பாதுகாப்பை இலங்கைக்குள் பலப்படுத்தி வாழ்ந்திட கோட்டபாய ராஜபக்ச எண்ணுகின்ற பொழுதும் ,அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறு இலங்கை அரசியல் மற்றும் மக்கள் களம் காணப்படவில்லை என்பதே யதார்த்த நிலையாக உள்ளது .
இலங்கைக்குள் நுழைந்தால் எதிரி கோட்டாவை ஓட ஓட விரட்டுவோம் என்கிறது போராட்ட காரர்கள் .
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஏற்பட்ட இந்த பேரவலம் இலங்கையில் ஆளும் எதிர்கால ஜனாதிபதிக்கும் ஏற்படும் என்கின்றனர் மக்கள் .







