Tag: பேருந்து
பேருந்து விபத்து 15பேர் பலி
பேருந்து விபத்து 15பேர் பலி
பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .
ஜீப் ரக வாகனம்
ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.
சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர் ,இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்.
இலங்கை போக்குவரத்து சபை
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை
முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்
அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று
நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக “அத தெரண” செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம் ,அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
சாரதிகள் சோர்வாக இருந்தால்
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு
நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு,
மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை
குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள்
தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.
பேருந்து சேவைகள் நிறுத்தம்
பேருந்து சேவைகள் நிறுத்தம்
பேருந்து சேவைகள் நிறுத்தம் ,கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பேருந்து
கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு சில
இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு
கம்பஹா தனியார் பேருந்து
முன்னெடுக்கப்படுவதாக கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து ,கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து ,பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள்
புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள்
புதுப்பிக்க நடவடிக்கை 50பேருந்து நிலையங்கள் ,சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் 50 முக்கிய பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன
இலங்கை விமானப்படையின் உதவியுடன் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உட்பட நாடு தழுவிய அளவில் 50
முக்கிய பேருந்து நிலையங்களை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
‘சுத்தமான இலங்கை’ திட்டத்திற்கு இணங்க, அடுத்த ஆண்டுக்குள் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தலில் உணவகம், ஓய்வு பகுதி, டிக்கெட் கவுண்டர்கள், நிர்வாக பிரிவு, செயல்பாட்டு அறை மற்றும் ஓட்டுநர் குடியிருப்புகள் போன்ற முக்கிய வசதிகள் புதுப்பிக்கப்படும்.
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் 1.42 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் தற்போது தினமும் 1,500 முதல் 2,000 பேருந்துகளை கையாளுகிறது.
‘சுத்தமான இலங்கை’ திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
பதுளையில் கவிழ்ந்த பேருந்து
பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வேக சாலையில் பேரூந்து விபத்து
வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.
ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு
அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .
இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற
அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.
இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது
தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்
பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .
மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .
இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.
அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .
சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.
கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .
குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .
தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.
புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .
அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..
இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்
காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்
நன்றி வன்னிமைந்தன்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம்
மக்களை பலியெடுக்கும் பேருந்து ஓட்டம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில்வைரலாகி வருகிறது . இலங்கையில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுகிற காட்சிகள் பார்ப்பர்களை அலற விட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இலங்கையில் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என முண்டியடித்து மக்களோடு ஓடிச் செல்கின்ற காட்சிகள் பார்க்கின்ற பொழுது பயத்தையும் கிளப்பியிருக்கின்றது .
வீதி விதிமுறைகளை மறந்து அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் ,இவர்கள் போட்டி போட்டு ஓடுகின்ற இந்த நடவடிக்கை, காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கள் இப்படி இடம்பெறுகின்ற பொழுதும் ,அதனை மூடி மறைத்து சாரதியின் அலட்சியம் என்ற விடயத்துக்குள் எல்லா மறக்கடிக்க பட்டு விடுகிறது.
அதிகமான பயணிகளை ஏற்றி விட்டால் அதிகமாக கமிஷனும் வழங்கப்படுகிறது .
ஆகவே சாரதிக்கும் நடத்துனருக்கும் அதிக கமிஷன் வருமானத்தை பெறுவதற்காக ,இந்த போட்டோ போட்டி போட்டு ஓடுகிற நிகழ்வுகள் இடம்பெறுகின்றது .
இந்தப் படத்தில் காணப்படுகிற காட்சிதான் ,இந்த பேருந்துகள் அங்கே இவ்வாறு போட்டி போட்டு ஓடுகிற காட்சிகள் மக்களை பதற வைத்துள்ளது .
மக்களே பயணிகளை நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். இப்படி சாரதிகள் போட்டி போட்டு வாகனத்தை ஓடினால் , அவர்களை தட்டி நிறுத்தி அதற்கு எச்சரிக்கை விடுங்கள்.
இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும் நன்றி.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி
கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.
கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.
அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .
வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.
இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.
52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.
எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .
சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .
என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .
19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொட்காலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து விபத்தில் .சிக்கியது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பத்தொன்பது பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,பேரூந்து இவ்வாறு விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று காயம் அடைந்தவர்களும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர்.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இந்த விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.
விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும்
பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் ,அடுத்த இரண்டு மாதங்களில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்து கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் இதன் பாதகங்கள் ஜூலை மாதத்தில் வரும் என்றார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தங்களில் இந்த முறை 12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டண திருத்தங்கள் செய்யப்படுவதால், பேருந்து கட்டணங்களில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும் என்றார்.
தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர்
தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர்
தாய்லாந்தின் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழந்தனர் 31 பேர் காயமடைந்தனர் ,தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்துள்ளனர்
கிழக்கு தாய்லாந்தில் புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சின்புரி மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலையில் 49 பேருடன் ஆய்வுச் சுற்றுலா சென்ற இரட்டை அடுக்கு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கீழ்நோக்கி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று உள்ளூர் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்ததாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.
உள்ளூர் சாலை பாதுகாப்பு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் வாகனம் கவிழ்ந்ததில் 49 பேர் இருந்தனர், மேலும் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதி என்று காவல்துறை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் பிரேக் சிஸ்டம் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்து பலர் படுகாயம்
பேருந்து விபத்து பலர் படுகாயம்
பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

















































