Tag: படுகாயம்
பேருந்து விபத்து பலர் படுகாயம்
பேருந்து விபத்து பலர் படுகாயம்
பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம் ,பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த
எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன்
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம்
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம்
ஓடும் ரயிலில் இருந்து செல்பி இருவர் படுகாயம் ,ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற கொரிய சுற்றுலா பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திங்கட்கிழமை (11) இரவு பதுளை நோக்கிச் செல்லும் உடரட்ட மெனிகே விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் ஹப்புத்தளை புகையிரத
நிலையத்திற்கு அருகில் ரயில் வாயில் படியில் தொங்கியவாறு நின்று செல்ஃபி எடுக்க முற்பட்ட போது புகையிரத எல்லையில் உள்ள இரும்பு கம்பத்தில் மோதியுள்ளார்.
காயமடைந்த சுற்றுலா பயணி தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் ஷோலி டோங் பே என்ற , 61 வயதான கொரிய சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொரிய சுற்றுலா பயணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் பதுளைக்கு இரவு நேர தபால் ரயிலில் எல்ல நோக்கி பயணிக்கையில், ஹப்புத்தளை புகையிரத
நிலையத்தில் செல்பி எடுத்துக்கொண்டு ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட போது, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்து இறங்கி, மேடையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு மீளப் புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்து, கீழ் காலில் பலத்த காயம் அடைந்தார்.
குறித்த பெண் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பல சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும், இது குறித்து ரயில்வே அதிகாரிகளின் கவனம் தேவை என்றும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேபால ரத்நாயக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்
ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்
ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் ,இந்தியா – மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோதே, சரக்கு ரெயில் மீது மோதி குறித்த ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவே ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை பொலிஸா நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக, பாக்மதி விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம் ,மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதிவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹெட்டவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் துப்பாக்கி சூடு
இலங்கை அதிகரிக்கும் துப்பாக்கி சூடு தாக்குதல்களினால் மக்கள் மத்தியில் நாள் தோறும் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
கோட்டபாய ஆட்சி காலத்தில் ஆயுத வியாபாரத்தால் ஆவர் ஈடுபடடர் . வியாபாரம் மூலம் அதிக இலாபத்தை பெற்றார் .
சோமாலியா போன்றா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை சேட்டு வந்தார் .
அவ்வாறு வழங்க பட்ட ஆயுதங்களை வைத்தே தற்போது இவ்விதமான கொலை குற்ற செயல்களில் ,மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாக மன்றம் கருத்துரைத்துள்ளது .
Featured
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
காத்தான்குடியை சேர்ந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் ஏறாவூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து முச்சக்கர வண்டியும் சிறிய லொறியும் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி ஷைகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி குழந்தை உட்பl 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சனிக்கிழமை (17) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
யானை மீது பஸ் மோதி 6 பேர் படுகாயம்
யானை மீது பஸ் மோதி 6 பேர் படுகாயம்
அநுராதபுரம் இப்பலோகம மஹாலுப்பள்ளம் பகுதியில் இன்று (24) காலை யானை மீது பயணிகள் பஸ் மோதியதில் 06 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவயிலிருந்து அனுராதபுரம் நோக்கி தலாவ வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை மகசின் வீதியில் வசிக்கும் 16 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சிறுவன் வீட்டில் இல்லாததை அறிந்து சிறுவனின் தாய் அவரைக் தேடியுள்ளார்.
பின்னர், குறித்த சிறுவன் அடிக்கடி செல்லும் இடமான அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று அழைத்த போது வீட்டுக்குள் இருந்த சிறுவன் தாய்க்கு தெரியாமல் பின் ஜன்னல் வழியாக கீழே இறங்க முற்பட்டுள்ளார்.
மாடியிலிருந்து குதித்த சிறுவன் படுகாயம்
அப்போது, அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவன் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், வீட்டின் பின்புறம் ஓடிச் சென்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிமென்ட் கிரில் மீது ஏறி தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் சம்பவ இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.


































